Pregnancy Journey
12 May 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
கர்ப்பமாகி 10-வது வாரத்தை எட்டியிருக்கும் தாய்க்கு, உடலில் சில திடீர் மாற்றங்கள் ஏற்படும். உடல் வலி மற்றும் புடைத்த நரம்புகள் இந்த அறிகுறிகளில் சில. 10 வார கர்ப்ப வயிறு அளவில் பெரிதாக இருக்காது. எனினும், மக்கள் கவனிக்கத் தொடங்கும் நேரம் இது. கர்ப்பத்தின் முதல் 10 வாரங்களுக்குப் பிறகுதான் வயிற்றுக்குள் இருக்கும் கரு கர்ப்பமாக கருதப்படுகிறது. எனவே, தாய், தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு இது ஒரு மைல்கல். கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள் முடிந்த பிறகு நிகழக்கூடிய இயல்பான மற்றும் அசாதாரணமான விஷயங்களைப் பார்ப்போம்:
10-வது வாரத்திற்குப் பிறகு, மருத்துவர் பொதுவாக அல்ட்ராசவுண்ட் மூலம் குழந்தையின் இதயத் துடிப்பை சரிபார்த்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துகிறார். குழந்தை சோனோகிராஃபி மூலம் பார்த்து சோதிக்கப்படும். இந்த விஷயங்கள் இளம் தாய்மார்களை பதற்றப்படுத்தினாலும், அவை வழக்கமான சோதனைகள் மற்றும் கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை.
10 வார கர்ப்பத்தின் முதல் கட்டத்தை முடித்த பிறகு, குழந்தையின் மூட்டுகள், உறுப்புகள் மற்றும் உடலின் பிற பாகங்கள் வளரத் தொடங்கும் போது, குழந்தையின் அளவு அதிகரிக்கும். எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகள் உருவாகும் கட்டத்தில் இருக்கும். அவ்வாறாக, தாயின் வயிறு வேகமாக வளரத் தொடங்கும்.
கர்ப்பிணிகள் முதல் 20 வாரங்களுக்குப் பிறகுதான் குழந்தை உதைப்பதை முதல் முறையாக அனுபவிப்பார்கள். குழந்தைகள் 10-வது வாரத்திற்குப் பிறகு உதைக்க பயில்கிறார்கள். ஆனால், அந்த உதைகள் சிறிய அளவில் இருப்பதால் தெரிவதில்லை. இருப்பினும், அல்ட்ராசவுண்ட் சோதனைகளின் போது அவற்றை உணர முடியும்.
10 வார கர்ப்ப காலத்தில், குழந்தையின் அளவு ஸ்ட்ராபெரியின் அளவு மட்டுமே இருக்கும். இது சுமார் 1.2 அங்குல நீளம் மற்றும் அதன் எடை 0.14 அவுன்ஸ் இருக்கும். அடுத்த மூன்று வாரங்களில், குழந்தையின் அளவு 10 வார கர்ப்ப குழந்தையின் அளவை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.
NT (Nuchal Translucency) டெஸ்ட் கர்ப்பத்தின் 10-வது மற்றும் 14-வது வாரங்களுக்கு இடையில் செய்யப்படுகிறது. குழந்தைக்கு ஏதேனும் குரோமோசோமல் அசாதாரணங்கள் உள்ளதா என்பதை சரிபார்க்க இது செய்யப்படுகிறது. குழந்தைக்கு டவுன் சிண்ட்ரோம் உள்ளதா என்பதைக் கண்டறிவது இந்த பரிசோதனையை நடத்துவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இது இரத்த மாதிரி மற்றும் அல்ட்ராசவுண்ட் உதவியுடன் செய்யப்படுகிறது. எனவே, கர்ப்பிணிகள் இந்த நேரத்தில் ஏதேனும் முரண்பாடுகள்இருப்பின் அதை எதிர்கொள்ளும் மன வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
வளரும் குழந்தைக்கு ஏற்றவாறு பெண்ணின் வயிறு மெதுவாக விரியத் தொடங்கும். எனவே, சில தாய்மார்கள் இந்த காலகட்டத்தில் கடுமையான வலியை அனுபவிக்கலாம். சிலருக்கு அதிக வலி இருக்காது. பொதுவாக, இரட்டை குழந்தைகளை எதிர்பார்க்கும் தாய்மார்கள் மற்றவர்களை விட அதிக வலியை அனுபவிக்கிறார்கள்.
தாயின் மார்பகங்கள் 10-வது வாரத்திற்குப் பிறகு வளர ஆரம்பிப்பது மிகவும் சாதாரணமானது. மசக்கை, சோர்வு, மனநிலை மாற்றங்கள் மற்றும் வஜைனல் டிஸ்சார்க் அதிகரிப்பு ஆகியவை இந்த காலகட்டத்தில் தாய்மார்கள் அனுபவிக்கும் சில பொதுவான அறிகுறிகளாகும். வஜைனல் டிஸ்சார்க் தெளிவாகவும் மணமற்றதாகவும் இருந்தால் அது இயல்பானது. இருப்பினும், இரத்தத்தின் காரணமாக டிஸ்சார்க் சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருந்தால், அது அசாதாரணத்தை குறிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் மருத்துவரை அணுகுவது நல்லது.
உங்கள் உடலில் குறிப்பிடத்தக்க அளவில் தடித்த நரம்புகளை நீங்கள் கவனிப்பீர்கள். இவை உங்கள் வளரும் குழந்தைக்காக உங்கள் உடலில் ஓடும் கூடுதல் இரத்த ஓட்டத்தின் அறிகுறியாகும். இதன் காரணமாக சிலந்தி நரம்புகள் தோன்றுவதையும் நீங்கள் கவனிக்கலாம்.
10 வார கர்ப்ப காலத்தில், வயிறு கூடுதல் வளைவை உருவாக்கும். எனவே, எதிர்கால தாய்மார்கள் எந்த அசௌகரியத்தையும் தவிர்க்க ஃப்ளெக்ஸிபிள் பேன்ட் மற்றும் கூடுதல் தளர்வான ஆடைகளை அணிய வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது இயல்பானது. இரட்டைக் குழந்தைகளை எதிர்பார்க்கும் தாய்மார்களுக்கு எடை அதிகரிப்பு கணிசமாக இருக்கும். சில தாய்மார்கள் மசக்கை காரணமாக உடல் எடையை குறைக்கிறார்கள். இவை அனைத்தும் சாதாரண அறிகுறிகள். எனவே, இவை பற்றி கவலைப்பட தேவையில்லை.
குமட்டல் அல்லது மசக்கை போன்ற உணர்வு குறைந்த பிறகு, கர்ப்பிணிகள் எடை தொடர்ந்து குறைந்தால், அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குமட்டல் உணர்வைத் தவிர்க்க, அவர்கள் எழுந்தவுடன் உடனடியாக ஒரு சிறிய சிற்றுண்டியை சாப்பிட வேண்டும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வாயு மற்றும் வயிறு உப்பசத்தை எப்படி கையாள்வது ?
கர்ப்பத்தின் முதல் பத்து வாரங்கள் முடிந்த பிறகு, கர்ப்பிணிகள் அதிக எச்சரிக்கையுடனும் உணர்திறனுடனும் இருப்பது இயற்கையானது. இருப்பினும், மீதமுள்ள கர்ப்ப காலத்திற்கு அவர்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, 10-வது வாரத்திற்குப் பிறகு வைட்டமின்கள் மற்றும் புரதங்களால் செறிவூட்டப்பட்ட சத்தான உணவை உண்ண வேண்டும். மருத்துவரைக் கலந்தாலோசித்து, உணவு, உடற்பயிற்சி மற்றும் பிற வழக்கமான விஷயங்களுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகளின் பட்டியலைத் தயாரிக்க வேண்டும். இறுதியாக, ஹார்மோன் மாற்றங்களைச் சமாளிக்க சீரான ஓய்வு அவசியம்.
Yes
No
Written by
aviraparaiyar
aviraparaiyar
உங்கள் கர்ப்பத்தின் 8-வது வாரத்தில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
கர்ப்பத்தின் போது தோல் அலர்ஜி(ப்ரூரிகோ): காரணங்கள், அறிகுறிகள் & சிகிச்சை
கர்ப்ப காலத்தில் வால் எலும்புவலி:நீட்டுதல் வலியைக் குறைக்கும்
கர்ப்ப காலத்தில் IUD: காரணங்கள், அறிகுறிகள் மற்றும் அபாயங்கள்
குழந்தைகள் இரவில் அழுவதற்கான காரணங்கள்
ஆரம்ப கால கர்ப்பத்தின் போது குதிப்பது கருச்சிதைவை ஏற்படுத்துமா?
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Mylo is a master brand offering solutions through it's subsidiaries - Mylo Care and Mylo Baby.
Mylo Care offers science backed, expert led solutions across multiple health concerns.
Mylo Baby is a one stop solution for young parents for all their baby's needs.
Anti Ageing | Skin brightening | Dark Circles | Skin hydration | Stretch Marks | Shop By Ingredient | Kumkumadi | Ubtan | Vitamin C | Tea Tree | Aloe Vera | Skin - Hair | Hairfall | Dry and Damaged Hair | Shop By Ingredient | Onion | Aloe Vera Range For Hair | Coconut | Neelibrigandi | Skin - Bath & Body |