VIEW PRODUCTS
Article Continues below advertisement
Pregnancy
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
Article Continues below advertisement
கர்ப்பிணிப் பெண்கள் தவறாமல் மருத்துவப் பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். இது தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தை இருவருக்கும் நல்ல ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. மேலும், இதனால் கருவில் இருக்கும் சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிய முடியும். அதற்கேற்ப மருத்துவர்கள் நடவடிக்கையை தீர்மானிக்க முடியும். தேவைப்பட்டால், குழந்தை ஆரோக்கியமாக பிறக்க அவர்கள் மருத்துவ ரீதியாக தலையிடலாம்.
இந்த பரிசோதனைகளில் ஆரம்பத்தில் செய்யப்படும் மிக முக்கியமான ஒரு பரிசோதனை இரத்த பரிசோதனை ஆகும். ஒரு கர்ப்பிணித் தாய் தனது கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் சில பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். கர்ப்பத்தின் முதல் ட்ரைமெஸ்டரில் (சாதாரண கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்கள்) செய்யப்படும் பரிசோதனைகள் ஆரோக்கியமான கர்ப்பத்தை உறுதி செய்ய இன்றியமையாதது ஆகும்.
எக்டோபிக் கர்ப்பத்தில் (கருமுட்டை கருப்பைக்கு வெளியே வளரும் போது), அல்லது கருமுட்டையின் வயது 2-4 வாரங்களாக மட்டுமே இருக்கும் போது, கரு அல்ட்ராசவுண்ட் மூலம் கண்டறியப்படாமல் போகலாம். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆரம்பகால கர்ப்பத்தைக் கண்டறிய இரத்த பரிசோதனை செய்வது அவசியம்.
ஆரம்பகால கர்ப்பத்தில் HCG அளவுகளைக் கண்டறியும் இந்த இரத்த பரிசோதனையானது, கர்ப்பத்தின் ஆரம்ப கட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோனான ஹ்யூமன் கோரியானிக் கோனாடோட்ரோபின் அளவைக் கண்டறியும். கர்ப்பத்தின்போது இரத்த பரிசோதனை முடிவுகள் பொதுவாக 12-24 மணி நேரத்திற்குள் வெளிவரும்.
கர்ப்பம் உறுதிசெய்யப்பட்டு, தாய் அதைத் தொடர விரும்பினால், அவருக்கு பாப் ஸ்மியர், இடுப்புப் பரிசோதனை போன்றவை உட்பட பல பரிசோதனைகள் பரிந்துரைக்கப்படும். கீழே தரப்பட்டுள்ளது கர்ப்பத்தின்போது செய்யப்படும் பரிசோதனைகளின் பட்டியல்:
Article continues below advertisment
1. Rh (ரீசஸ் காரணி), இது தாயின் இரத்த வகையை குறிக்கிறது.
2. இரத்த சோகை போக்குகள்.
3. ருபெல்லா (அம்மை நோயின் ஒரு வடிவம்) நோய் எதிர்ப்பு சக்தி.
4. தொற்றுகள் அல்லது தொற்று நோய்கள் (சிஃபிலிஸ் மற்றும் ஹெபடைடிஸ் பி போன்றவை).
5. HIV உட்பட பல்வேறு STDக்கள்.
Article continues below advertisment
கர்ப்பிணித் தாய்மார்கள் "கர்ப்ப காலத்தில் நான் மரபணு பரிசோதனை செய்துகொள்ள வேண்டுமா" என்று யோசிக்கலாம், ஆனால் அதற்கான பதில் ஆம் என்பதுதான்! மரபணு பரிசோதனை மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது பிரசவத்திற்கு முன் மரபணு சார்ந்த சிக்கல்களைக் கண்டறிய உதவுகிறது. அதுவும் பெற்றோர் பரம்பரையில் மரபணு நோய்கள் இருந்தால் இதை செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்
தலசீமியா
ஹீமோபிலியா ஏ
அரிவாள் செல் நோய்
Article continues below advertisment
பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய்.
இந்த சோதனைகள் அனைத்தும் கிட்டத்தட்ட வலியற்றவை மற்றும் ஒரே நேரத்தில் செய்யக்கூடியவை ஆகும். ஒரு மருத்துவ நிபுணர் இரத்த மாதிரியை சேகரிக்க தாயின் கைகளில் இருந்து இரத்தத்தை எடுப்பார். ஒரு வேளை தாய்க்கு ஊசிகளைப் பற்றி பயம் இருந்தால், மருத்துவரிடம் முன்கூட்டியே தெரிவிக்க இது உதவும். இந்த வகையில், முழு செயல்முறையும் வசதியாக இருப்பதை உறுதி செய்ய தேவையான ஏற்பாடுகளை செய்யலாம்.
பெண்கள் தங்களின் அடுத்த OBGYN வருகையின் போது பரிசோதனை முடிவுகளைப் பெறலாம். எல்லா முடிவுகளும் ரகசியமாக வைக்கப்படும். மேலும் ஒவ்வொரு முடிவுக்கும் என்ன அர்த்தம் என்பதையும், கவலைப்படுவதற்கு ஏதேனும் உள்ளதா என்பதையும் மருத்துவர்கள் விரிவாக விளக்குவார்கள். முதன்முறையாகத் தாயாகும் பெண்கள் தங்கள் மருத்துவரிடம் வெளிப்படையாக உரையாடி எல்லா சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. கர்ப்பம் என்பது, குறிப்பாக முதன்முறையாக தாயாகும் பெண்ணுக்கு, ஒரு அறிமுகமில்லாத மற்றும் மாபெரும் அனுபவமாக இருக்கும். அதனால்தான், அனைத்து மருத்துவ விவரங்களையும் முழுமையாகத் தெரிந்துகொள்வது அவசியம்.
ஏதேனும் அபாயக் காரணிகள் இருப்பின், அந்தப் பெண்ணுக்கு என்னென்ன வழிகள் உள்ளன என்பதையும் மற்றும் அவர் வேறு ஏதாவது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமா என்பதையும் மருத்துவர் தெரிவிப்பார். ஏதாவது தீவிரமான உடல்நலப் பிரச்சினை இருந்தால், கர்ப்பத்தை கலைக்குமாறு கூட மருத்துவர் பரிந்துரைக்கலாம். ஆனால், கருக்கலைப்பு என்பது மாத்திரை மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ தாய் ஒப்புக்கொண்டால் மட்டுமே செய்யப்படும்.
ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு பரிந்துரைக்கப்படும் அனைத்து இரத்த பரிசோதனைகளுக்கான வாரங்களால் பிரிக்கப்பட்டுள்ள விரைவான வழிகாட்டி:
Article continues below advertisment
கர்ப்பத்துடன் தொடர்புடைய தாயின் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா புரதம் மற்றும் HCG அளவுகளைக் கண்டறிய சீரம் பரிசோதனைகள்.
தாயின் இரத்தத்தில் உள்ள AFP (அம்னியோடிக் திரவப் புரதம்) மற்றும் எஸ்ட்ரியோல் மற்றும் இன்ஹிபின் ஹார்மோன்களின் அளவு.
ஒரு குளுக்கோஸ் பரிசோதனை தாயின் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சரிபார்க்கிறது, ஏனெனில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு வழக்கத்திற்கு மாறாக அதிகமாக இருந்தால் அது கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
GBS (குரூப் பி ஸ்ட்ரெப்டோகாக்கஸ் - தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா) நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சல் போன்ற நோய்களுக்கான பரிசோதனை.
Article continues below advertisment
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby lotion | baby powder | baby body wash | stretch marks oil | baby massage oil | baby hair oil |