VIEW PRODUCTS
Article Continues below advertisement
Pregnancy Journey
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
Article Continues below advertisement
பல பெண்கள் தங்கள் பிரக்னன்ஸியில் அஜீரணத்தால் பாதிக்கப்படுகின்றனர். இது பெரும்பாலும் வலி மற்றும் சங்கடமாக உணர வைக்கும். அஜீரணம் (நெஞ்செரிச்சல் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது சாப்பிட்ட பிறகு அல்லது நீராகாரத்தை குடித்த பிறகு வயிற்றின் மேல் பகுதியில் ஏற்படும் வலி அல்லது அசௌகரியம், சிறிது நேரம் கழித்து நிகழலாம். நெஞ்செரிச்சல் என்பது இதயத்துடன் தொடர்புடையது அல்ல. ஆனால் அமில உணவுகள் மற்றும் திரவங்கள் உணவுக்குழாய் வரை நகரும் போது தொண்டையில் அல்லது மார்பகத்தின் பின்னால் எரியும் உணர்வைத் தருகிறது.
உணவுக்குழாய் என்பது தொண்டை மற்றும் வயிற்றை இணைக்கும் ஒரு குழாய் ஆகும். இது ஹார்மோன் மாற்றங்களாலும், வளரும் குழந்தை வயிற்றை அழுத்துவதாலும் ஏற்படுகிறது. பிரக்னன்ஸியில் எந்த நேரத்திலும் அஜீரணம் ஏற்படலாம். அத்துடன் பிரக்னன்ஸியின் மூன்றாவது மாதங்களில் மிகவும் கடுமையானதாக இருக்கும். பிரக்னன்ஸியில் சில பாதுகாப்பான மருந்துகளுடன், நமது உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் அஜீரணத்தை எளிதாக்க தீர்க்கலாம்.
உங்களுக்கு நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணம் இருந்தால், வாயில் வீக்கம், புளிப்புச் சுவை, அடிக்கடி துர்நாற்றம், இருமல், மார்பில் எரியும் உணர்வை உணர்தல் குறிப்பாக சாப்பிட்ட பிறகு, வாந்தி, கடுமையான தலைவலி மற்றும் கைகளில் திடீர் வீக்கம் ஏற்படலாம்.
அஜீரணத்தால் அல்லல்படுபவர்கள் தக்காளி, ஆரஞ்சு மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணத்திற்கு வழிவகுக்கும். தக்காளியை மிதமான அளவில் சாப்பிட வேண்டும். தக்காளி மற்றும் தக்காளிப் பொருட்களில் மாலிக் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது வயிற்றில் அதிக இரைப்பை அமிலங்களை உருவாக்குகிறது. இதனால், உங்கள் இரைப்பை அமில அளவுகள் உணவுக்குழாயை அதிகரிக்கும். ஆரஞ்சு பழச்சாறுகள் நெஞ்செரிச்சலுக்கு ஒரு தூண்டுதலாகவும் கருதப்படுகிறது. அவற்றில் அஸ்கார்பிக் அமிலம் உள்ளது. இவற்றை அதிக அளவில் உட்கொண்டால் அஜீரணத்தை அதிகரிக்கிறது.
அஜீரணத்திற்கு காஃபின் ஒரு முக்கிய தூண்டுதலாகும். இது உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கும். பிரக்னன்ஸியில், உடல் காஃபினை ஏற்றுக்கொள்ள தயங்கும். மேலும் இது தூக்கமின்மை மற்றும் நெஞ்செரிச்சல் ஆகியவற்றிற்கு வழிவகுக்கிறது. பிரக்னன்ஸியில் சோடா போன்ற சர்க்கரை பானங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ஏனெனில், அவற்றில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லாத பல இரசாயனங்கள் மற்றும் கலோரிகள் உள்ளன. இது கருவுக்கும் தீங்கு விளைவிக்கும். சோடாவில் கார்பனேற்றப்பட்ட நீர் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்கிறது. எனவே சோடாக்களை அடிக்கடி உட்கொள்வது பருமனான குழந்தைகள் மற்றும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
Article continues below advertisment
ஏனெனில், அவை ஜீரணிக்க அதிக நேரம் எடுக்கும். இதனால் உங்கள் வயிற்றில் அதிக அமிலம் உருவாகி, வயிறு உபசமாக உணர்கிறீர்கள். கொழுப்பு நிறைந்த உணவுகளில் அதிக கலோரிகள் உள்ளன. இது எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது. அதிக நிறைவுற்ற கொழுப்பை சாப்பிடுவது உங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கும், இதய நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். மேலும், கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் குறைபாடுள்ள பிரசவம் ஏற்படும் அபாயம் அதிகம் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
பிரக்னன்ஸி ஹார்மோன்கள் செரிமான அமைப்பை பாதிக்கலாம். புரோஜெஸ்ட்டிரோன், பிரக்னன்ஸி ஹார்மோன் என்றும் அழைக்கப்படுகிறது. இது தசை தளர்ச்சியாக செயல்படுகிறது. நெஞ்செரிச்சலால் அவதிப்படும் போது, ஹார்மோன் தசையை தளர்த்தும், இதனால் உணவுக்குழாய் உங்கள் வயிற்றை மூடும். அவை பெரும்பாலும் வயிறு, சிறு மற்றும் பெருங் குடலில் செரிமானம் குறைவதற்கு வழிவகுக்கும்.
பிரக்னன்ஸியின் முதல் மூன்று மாதங்களில் ஈஸ்ட்ரோஜன் அளவுகளில் விரைவான அதிகரிப்பு அடிக்கடி குமட்டலுக்கு வழிவகுக்கும். மேலும், குழந்தை வளரும் போது, பெரிதாக்கப்பட்ட கருப்பை அடிவயிற்றில் சிக்கலை ஏற்படுத்தலாம், இதனால் வயிற்று அமிலங்கள் மேல்நோக்கி தள்ளப்படும். அரிதான சந்தர்ப்பங்களில், பித்தப்பைக் கற்கள் நெஞ்செரிச்சல் அல்லது அஜீரணத்திற்கும் வழிவகுக்கும்.
வெறும் வயிற்றில் சாக்லேட் சாப்பிடுவதை தவிர்க்கவும். சாக்லேட் உட்கொள்வதைக் கட்டுப்படுத்துங்கள், நீங்கள் டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால், அது கருவின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதுடன் மிகவும் நன்மை பயக்கும். 2 காரணங்களுக்காக சாக்லேட்டுகளை அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கவும். சாக்லேட் உங்களுக்கு குறைந்த பசியை உண்டாக்குகிறது. இது ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதை சாக்லேட் தடுக்கிறது. இதனால் உங்கள் சீரான உணவுக்கு இடையூறு ஏற்படுகிறது. இரண்டாவதாக, சாக்லேட்டில் காஃபின் உள்ளது, மேலும் கர்ப்பிணிகள் தங்கள் காஃபின் உட்கொள்ளலைக் குறைக்க வேண்டும். அத்துடன் தினசரி 200 மி.கி. காஃபின் கொண்ட பானங்கள் மற்றும் சாக்லேட்டை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்வது நல்லதல்ல. ஏனெனில், அது காஃபின் வரம்பை மீறக்கூடும். சமச்சீரற்ற இரத்த சர்க்கரை அளவுகள், பிரக்னன்ஸி நீரிழிவு நோய் மற்றும் எடை அதிகரிப்பு போன்றவை இருந்தால் சாக்லேட் தவிர்க்கப்பட வேண்டும்.
ஆல்கஹாலானது பிரக்னன்ஸி முழுவதும் பிரச்சனைகளை உருவாக்கும். பிரக்னன்ஸியின் முதல் மூன்று மாதங்களில் ஆல்கஹால் உட்கொள்வது குழந்தைக்கு மோசமான மற்றும் அசாதாரண முக அம்சங்களை ஏற்படுத்தும். மது அருந்துவது இதயக் குறைபாடுகள், பிறப்பதற்கு முன்னும் பின்னும் குழந்தை வளர்ச்சி, மோசமான தசை இயக்கம், கருச்சிதைவு மற்றும் பிரீமேச்சுர் டெலிவரி ஆகியவற்றுக்கும் வழிவகுக்கும்.
Article continues below advertisment
அமில உற்பத்தியைத் தடுக்கவும் நெஞ்செரிச்சல் அசௌகரியத்தைத் தவிர்க்கவும் உதவும் சில குறிப்புகள் கீழே உள்ளன.
தினமும் 3 வேளை உணவை சாப்பிடுவதற்கு பதிலாக கொஞ்சம் கொஞ்சமாக உணவை சாப்பிடுங்கள், மேலும் மெதுவாக சாப்பிடுங்கள்.
நெஞ்செரிச்சல் அபாயத்தைத் தவிர்க்க வறுத்த, கொழுப்பு மற்றும் காரமான உணவுகளைத் தவிர்க்கவும்.
உணவு உண்ணும் போது தண்ணீர் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில், இது ஆசிட் ரிப்ளெக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சலை அதிகரிக்கும். சாப்பிட்ட சில நிமிடங்களுக்குப் பிறகு நீங்கள் தண்ணீர் குடிக்கலாம்
பிரக்னன்ட்டாக இருக்கும் போது இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும், இறுக்கமான ஆடைகள் உங்கள் வயிற்றில் அழுத்தத்தை அதிகரிக்கும்.
Article continues below advertisment
சாப்பிட்டவுடன் நேரடியாகப் படுக்க செல்வத்தைத் தவிர்க்கவும். உங்கள் உணவை ஜீரணிக்க சிறிது நேரம் நடக்கவும்.
செரிமான அமைப்பைத் தளர்த்த உதவும் நார்ச்சத்துக்கள் கொண்ட ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் உங்கள் உணவை சமநிலைப்படுத்துங்கள்.
உடல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிக்க ஆழ்ந்த சுவாசம் மற்றும் தளர்வு பயிற்சி அல்லது யோகாவை தினமும் செய்யுங்கள்.
கம் அல்லது கேண்டி சாப்பிடுவதை தவிர்க்கவும். ஏனெனில், அவை செயற்கை இனிப்புகள் மற்றும் உங்கள் வயிற்றில் அசிட்டிட்டியை ஏற்படுத்தும்.
சாப்பிடும் போது நல்ல உடல் தோரணையை பராமரிக்கவும். உங்கள் செரிமான அமைப்பு சீராக செயல்பட, சாப்பிடும் போது எப்போதும் நேராக உட்கார்ந்து கொள்ளுங்கள்.
Article continues below advertisment
மன அழுத்தத்தைத் தவிர்க்கவும். ஒரு நல்ல புத்தகத்தைப் படிப்பதன் மூலம் அல்லது நல்ல நண்பர்கள்/தோழிகளுடன் நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
மது அருந்துதல் மற்றும் புகை பிடிப்பதை தவிர்க்கவும்.
வயிற்றில் உள்ள அமிலங்கள் சீராக மேல்நோக்கிச் செல்லும் என்பதால், உறங்கும் முன் அதிக உணவு உண்பதைத் தவிர்க்கவும், இதனால் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.
செரிமானத்தை எளிதாக்க நீங்கள் நாள் முழுவதும் பருகக்கூடிய சில பானங்கள் உள்ளன. அவை உங்கள் குழந்தைக்கும் நன்மை பயக்கும்.
பால் நிறைய ஊட்டச்சத்து நன்மைகளைக் கொண்டுள்ளது அத்துடன் தாய் மற்றும் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதில் கால்சியம் நிறைந்துள்ளது, இதனால் தாய் மற்றும் குழந்தையின் கரு மற்றும் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.
Article continues below advertisment
கர்ப்ப காலத்தில் தேங்காய் நீர் மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது மலச்சிக்கலை போக்க உதவுகிறது, வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது, pH அளவை பராமரிக்கிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது அத்துடன் செரிமானத்தை எதிர்த்துப் போராடுகிறது. இதில் எலக்ட்ரோலைட்டுகள் அதிகம் உள்ளது மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
கிரீன் டீ, இஞ்சி டீ மற்றும் கெமோமில் டீ போன்ற ஹெர்பல் டீ, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் காலை சுகவீனத்தை குணப்படுத்துகிறது. குறைந்த அளவில் உட்கொள்வது நன்மை பயக்கும்.
பிரக்னன்ஸியில் நீர் கருவைச் சுற்றி அம்னோடிக் திரவத்தை உருவாக்க உதவுகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. பிரக்னன்ஸியில் தினமும் குறைந்தது 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.
சில கடைகளில் கிடைக்கும் மருந்துகள் அஜீரணத்தை குணப்படுத்தும்.
மைலாண்டா, ரோலாய்ட்ஸ் மற்றும் டம்ஸ் போன்ற ஆன்டாசிட்கள் வயிற்றில் உள்ள அமிலங்களை மாற்றுவதன் மூலம் நெஞ்செரிச்சலைக் குறைக்கும்.
Article continues below advertisment
வயிற்றில் உற்பத்தியாகும் அமிலத்தைத் தடுக்கவும் H2 தடுப்பான்கள் உதவுகின்றன. அவை 2-3 மணி நேரத்திற்குள் வேலை செய்யத் தொடங்கி, பல மணிநேரங்களுக்கு அமில உற்பத்தியை அடக்குகின்றன.
பிபிஐக்கள் (புரோட்டான் பம்ப் இன்ஹிபிட்டர்கள்) அடிக்கடி ஏற்படும் நெஞ்செரிச்சலுக்கு சிகிச்சை அளிக்கின்றன. அவை உடனடி நிவாரணம் தராது ஆனால் முழு பலனைக் காட்ட 2-3 நாட்கள் ஆகும்.
மருந்துகள் ஒவ்வொன்றும் வித்தியாசமாக செயல்படுவதால், அவற்றை உட்கொள்ளும் முன் டாக்டரை ஆலோசிக்கவும். லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட அதிக காலம்/அளவு பயன்படுத்த வேண்டாம். அறிகுறிகள் தொடர்ந்தால், உங்கள் டாக்டரை அணுகவும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் பார்லி தண்ணீர்: நன்மைகள், அபாயங்கள் மற்றும் எப்படி தயாரிப்பது
பிரக்னன்ஸியில் அஜீரணம் மிகவும் வேதனையாகவும், சங்கடமாகவும் இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், பிரசவத்திற்குப் பிறகு அது மறைந்துவிடும். மேலும், ஹார்மோன் அளவும் சாதாரண நிலைக்கு வரும். நெஞ்செரிச்சல் மிகவும் கடுமையானதாக இருந்தால் உங்கள் சுகாதார நிபுணரை அணுகவும்.
Article continues below advertisment
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion |