VIEW PRODUCTS
Article Continues below advertisement
Miscarriage
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
Article Continues below advertisement
உங்கள் வயிற்றில் ஒரு சிறு குழந்தை வளர்ந்துகொண்டிருக்கும் போது, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களும், நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமானவை. எனவே, இந்த ஒன்பது முக்கியமான மாதங்களில், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், என்ன சாப்பிடுகிறீர்கள், எதைப் பார்க்கிறீர்கள், பொதுவாக உங்கள் நாளையும் வாழ்க்கையையும் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது உட்பட அனைத்து விஷயங்களும், உங்கள் குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். பிரக்னன்ஸி காலத்தில் உங்கள் உணவில் நீங்கள் முக்கியமாக என்னென்ன சேர்க்க வேண்டும் என்பதை கவனிப்பது மட்டுமன்றி, பிரக்னன்ஸி காலத்தில் எந்தெந்த உணவுகளை சேர்த்துக்கொள்ள கூடாது என்பதிலும் நீங்கள் சமமான கவனம் செலுத்த வேண்டும். பிரக்னன்ஸி காலத்தில் கருச்சிதைவு மற்றும் பிற சிக்கல்களை ஏற்படுத்தக்கூடிய அனைத்து விஷயங்களையும் நீங்கள் தவிர்க்க வேண்டியது அவசியமாகும்.ஆரோக்கியமான மற்றும் சிக்கலற்ற பிரக்னன்ஸியானது சிக்கலற்ற பிரசவத்தை விட சிறந்தது ஆகும்! இன்றைய கட்டுரையில், கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவை ஏற்படுத்தக்கூடிய அனைத்து உணவுகளைப் பற்றியும் இங்கு பார்க்கலாம்
பல உணவுகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காதது போன்றே தோற்றமளிக்கும். ஆனால் உண்மையில், அவற்றை உட்கொள்வது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குழந்தைக்கும் நன்மையை விட அதிக தீங்கையே விளைவிக்கும். கருச்சிதைவு அபாயத்தைக் குறைக்க பிரக்னன்ஸி காலத்தில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியல் இங்கே உள்ளது:
அன்னாசிப்பழத்தை விரும்பும் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்குமான கெட்ட செய்தி என்னவென்றால், அன்னாசிப்பழமானது பிரக்னன்ஸியின் முதல் மூன்று மாதங்களில் நீங்கள் உண்ணக்கூடாது. துரதிருஷ்டவசமாக, அன்னாசிப்பழம் கருக்கலைப்பு அல்லது கருச்சிதைவை ஏற்படுத்தும் உணவுகளில் ஒன்றாகும். அன்னாசிப்பழத்தையோ அல்லது அன்னாசிப்பழ சாறையோ அருந்துவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அன்னாசிப்பழத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டியதற்கான காரணம் ப்ரோமெலைன் இருப்பதுதான். இது கருப்பை தசைகளை மென்மையாக்குகிறது மற்றும் ஆரம்பத்திலேயே கருவை வெளியேற்ற தூண்டுகிறது.
கர்ப்பிணிப் பெண்கள் பால் பொருட்களை உட்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஃபெட்டா சீஸ், பால், மொஸெரெல்லா அல்லது எந்தவொரு கிருமி நீக்கப்படாத அதாவது பதப்படுத்தப்படாத பால் பொருட்களை உட்கொள்வது உங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில், அதில் லிஸ்டெரியா என்ற ஆபத்தான பாக்டீரியா உள்ளது. லிஸ்டீரியாவின் இருப்பு உணவு நச்சுத்தன்மையை மட்டுமல்ல, உங்களுக்கும் உங்கள் வயிற்றில் வளரும் கருவுக்கும் கடுமையான சிக்கல்களையும் ஏற்படுத்தும். எனவே, பிரக்னன்ஸி காலத்தில் கிருமிகள் நீக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பால் பொருட்களை மட்டுமே உட்கொள்வது சிறந்தது.
டின்களில் அடைக்கப்பட்ட கடல் உணவுகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவான லிஸ்டீரியாவை நீங்கள் எதிர்பார்க்கலாம். லிஸ்டீரியா கிருமிநீக்கம் செய்யப்படாத பால் பொருட்களில் எவ்வாறு உள்ளது என்பதைப் போலவே இதிலும் காணப்படும். எனவே, எந்த வகையான உணவு பொருட்கள் உங்களுக்கு கருச்சிதைவை ஏற்படுத்தும் என்று யோசித்தீர்கள் என்றால், கண்டிப்பாக டின்களில் அடைக்கப்பட்ட கடல் உணவுகளும் அதில் அடங்கும்.
Article continues below advertisment
கருச்சிதைவு அபாயத்தை தடுக்க கர்ப்பிணி பெண்கள் எல்லா வகையிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மேலும், கர்ப்பிணிப் பெண்கள் வாள்மீன், நண்டு, ஓடுமீன், சுறா, மற்றும் கிங் கானாங்கெளுத்தி போன்ற உயர் பாதரச உள்ளடக்கம் கொண்ட கடல் உணவுகளை உட்கொள்வதிலிருந்து விலகி இருக்க வேண்டும். பாதரசம் உள்ளடக்கம் அதிகமாக உள்ள கடல் உணவுகளை உட்கொள்வதால் உங்கள் வயிற்றில் வளரும் கருவின் மூளையை பாதித்தல் மற்றும் கரு வளர்ச்சி தாமதமாக இருத்தல் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய வேர் முளைத்த உருளைக்கிழங்கை உண்பவர்களில் குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். சோலனின் எனப்படும் நச்சு, பச்சை முளைகளில் அதிக செறிவுகளில் காணப்படுகிறது. இது வளரும் கருவின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்று அறியப்படுகிறது. இது கருச்சிதைவுக்கு வழிவகுக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. எனவே நீங்கள் பிரசவத்திற்கு தயாராக இருக்கிறீர்கள் அல்லது பாலூட்டுகிறீர்கள் என்றால் வேர் முளைத்த உருளைக்கிழங்கை சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
சாதாரண நேரத்தில், கால்நடை விலங்கு கல்லீரல் அதிக ஊட்டச்சத்துக்களின் ஒரு பவர்ஹவுஸ் ஆகும். இருப்பினும், இது பாதிக்கப்பட்ட கால்நடை விலங்குகளாக இருந்தால் அவற்றின் கல்லீரல் அதிக நச்சுத்தன்மை மற்றும் ஆபத்தானது. கர்ப்பிணிப் பெண்கள் விலங்களின் கல்லீரலை உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது கொலஸ்ட்ரால் மற்றும் வைட்டமின் ஏ இன் ஆதாரமாகும். பிரக்னன்ஸி காலத்தில் ஸ்பைனா பிஃபிடா, சிறுநீர் பாதையின் ஏற்படும் அசாதாரண விஷயங்கள் மற்றும் ஹைட்ரோகெபாலஸ் போன்ற தடைகள் தாயின் உணவில் அதிகப்படியான வைட்டமின் ஏ இருப்பதன் காரணமாக ஏற்படலாம். பிரக்னன்ஸி காலத்தில் கருச்சிதைவை ஏற்படுத்தக்கக்கூடிய தவிர்க்க வேண்டிய விஷயங்களில் ஒன்று கால்நடை விலங்கு கல்லீரல் ஆகும்.
பிரக்னன்ஸி காலத்தில் பப்பாளி தின்பதன் மூலம் கருச்சிதைவு ஏற்படுமா என்று நீங்கள் யோசித்தால், பப்பாளியானது நீங்கள் ஒருபோதும் கனவிலும் நினைத்திராத, குறிப்பாக கருவின் ஆரம்ப காலத்தில் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும் ஒரு பழம் என்று நீங்கள் உறுதியாக நம்பலாம். துரதிருஷ்டவசமாக, பச்சை நிறத்தில் இருக்கும் பழுக்காத பப்பாளியில் கருப்பை சுருங்கி விரிவதைத் தூண்டும் என்சைம்கள் நிறைந்துள்ளன, அவை இறுதியில் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
முருங்கைக்கீரை பலருக்கு பிடித்தமானதாக இருக்கலாம்.இவற்றில் பொட்டாசியம், வைட்டமின் சி, இரும்பு, கால்சியம் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. இருப்பினும், முருங்கைக்கீரைகளில் ஆல்பா-சிடோஸ்டெரால் இருப்பதால், இது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்தானது என்று கருதப்படுகிறது. ஆல்பா-சிடோஸ்டெரால் எதிர்வினையானது ஈஸ்ட்ரோஜன் (பெண் ஹார்மோன்) ஏற்படுத்தும் அதே எதிர்வினையாக இருக்கும். இவை இரண்டும் கருப்பை தசைகளை மென்மையாக்குவதற்கு வழிவகுத்து, கருச்சிதைவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
Article continues below advertisment
கற்றாழை உங்கள் தோல் மற்றும் முடிக்கு மட்டுமல்ல, உங்கள் செரிமான அமைப்புக்கும் சிறந்தது. இருப்பினும், ஆச்சர்யபடத்தக்க வகையில், கற்றாழை கர்ப்பிணிப் பெண்களுக்கு அத்தகைய நன்மைகளை செய்யத் தவறுகிறது. ஏனெனில், இது இடுப்புக்குழி இரத்தப்போக்குக்கு வழிவகுக்கும், இது இறுதியில் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். எனவே, உங்கள் பிரக்னன்ஸியின் முதல் மற்றும் இரண்டாவது மூன்று மாதங்களில் கற்றாழையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
முட்டை மிகச்சிறந்த புரத ஆதாரமாகும். ஆனால் கர்ப்பிணி பெண்கள் அவற்றை சமைக்காமல் உட்கொண்டால் அது அவர்களுக்கு தீங்கை விளைவிக்கும். எனவே, மயோனைஸ், சோஃப்லேஸ் மற்றும் பச்சை முட்டைகளால் செய்யப்பட்ட மூஸஸ் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சமைக்கப்படாத முட்டைகளை உண்பதால் உணவு மூலம் ஏற்படும் உடல் கோளாறு மற்றும் கருச்சிதைவு ஆகியவை சாத்தியமான பக்க விளைவுகளாகும். ஏனெனில், அவற்றில் காணப்படும் சால்மோனெல்லா பாக்டீரியாக்கள் இதற்கு காரணமாகின்றது. மறுபுறம், கர்ப்பமாக இருக்கும்போது வேகவைத்த முட்டைகளை தாராளமாக சாப்பிடலாம்.
நண்டுகள் கால்சியத்தின் சிறந்த மூலமாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும், நண்டுகளில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருப்பதையும் யாரும் மறுக்க முடியாது. அதிக அளவு நண்டுகளை உட்கொள்வதன் மூலம் அது உங்கள் கருப்பையை சுருங்கச்செய்து, இறுதியில் உட்புற இரத்தப்போக்கு மற்றும் கருச்சிதைவுக்கு வழிவகுக்கும். எனவே, பிரக்னன்ஸி காலத்தில் நண்டுகளை உட்கொள்வதை முற்றிலும் தவிர்ப்பதே சிறந்த வழியாகும்.
கர்ப்பிணிப் பெண்கள் பீச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவை இரத்தப்போக்கு அபாயத்தை அதிகரிக்கின்றன. குறிப்பாக, இந்த சுவையான பழத்தின் முடிகள் கொண்ட ஓடு ஆபத்தானது. இருப்பினும், தொண்டையில் எரிச்சலை ஏற்படுத்துதல் மற்றும் அரிப்பு உணர்வின் விளைவாக கருச்சிதைவு போன்ற கடுமையான விளைவுகளை அனுபவிக்க முடியும்.
காஃபின் உட்கொள்வதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும் என்ற எந்தவொரு உறுதியான ஆய்வு அல்லது ஆராய்ச்சி எதுவும் இல்லை. இருப்பினும், நீங்கள் முடிந்தவரை காஃபின் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். காஃபினை அடிக்கடி எடுத்துக்கொள்ளும் போது, அது உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு உண்மையில் தீங்கு விளைவிக்கும் மற்றும் எடை குறைவான குழந்தை அல்லது கருச்சிதைவுக்கு வழிவகுக்கும்.
Article continues below advertisment
பெரும்பாலான வல்லுநர்கள் நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது மூலிகைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறுகிறார்கள். மூலிகைகளில் இருக்கும் ஸ்டெராய்டுகள் கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சிக்குத் தீங்கு விளைவிக்கலாம். சென்டெல்லா என்ற மூலிகை கல்லீரலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தலாம். இது குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தலாம் மற்றும் குழந்தையின் மூளையை சேதப்படுத்தும். எனவே தான், டாங் குவாய் கருச்சிதைவுகள் அல்லது குறைப்பிரசவங்களை ஏற்படுத்தக்கூடிய உணவு பொருட்களில் ஒன்றாக உள்ளது. நீங்கள் எந்த மூலிகைகளையும் சாப்பிடுவதற்கு முன்பு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
பிரக்னன்ஸி காலத்தில் கருக்கலைப்பை ஏற்படுத்தும் உணவுகளில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியும் ஒன்றாக இருக்கலாம். கர்ப்பிணிப் பெண்கள் டின்களில் அடைக்கப்பட்ட இறைச்சி, துண்டுகளாக்கப்பட்ட இறைச்சி, டெலி இறைச்சி, சாஸேஜ் இறைச்சிகள், சலாமி, பேட் மற்றும் பெப்பரோனி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை உட்கொள்ளும்போது, அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
கர்ப்பிணிப் பெண்கள் பச்சை இலை காய்கறிகள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். டோக்ஸோபிளாஸ்மா கோண்டி என்பது, டாக்ஸோபிளாஸ்மோசிஸை ஏற்படுத்தும் ஒரு பொதுவான ஒட்டுண்ணி ஆகும். இது பச்சையான அல்லது கழுவப்படாத காய்கறிகளில் காணப்படலாம். இதனால், பாதிக்கப்படும் கர்ப்பிணி பெண்கள் தங்கள் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் இந்த நோய் பாதிப்பை பரப்ப முடியும். எனவே, காய்கறிகளை சுத்தமான உப்பு நீரில் ஊறவைத்து, சாப்பிடுவதற்கு முன் நீரில் கழுவுவது அவசியம். காய்கறிகள் நன்கு அலசப்பட்டு, தோலுரிக்கப்பட்டு சமைக்கப்பட்ட பின்னரே கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கு பயன்படுத்தக்கூடிய கட்லரிகள் சுத்தம் செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டிருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ஆல்கஹால் எடுத்துக்கொள்வதை முற்றிலுமாக நிறுத்திக்கொள்ள வேண்டும். பிரக்னன்ஸி காலத்தில் மது அருந்துவதால் கருவின் மூளை வளர்ச்சிக்கு தீங்கு விளைவிப்பதோடு கருச்சிதைவு மற்றும் குழந்தை இறந்தே பிறக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. மேலும், பிறக்கும் குழந்தைக்கு முகத்தில் சிறிய அளவிலான குறைபாடுகள், இதய குறைபாடுகள் மற்றும் குழந்தை அறிவித்திறனில் மந்தம் போன்ற பிறப்பு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
ஒரு உணவில் மசாலாப் பொருட்களைச் சேர்ப்பது அதன் சுவையை மேம்படுத்துகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும், கர்ப்பிணிப் பெண்கள் பெருங்காயம், பூண்டு, வெந்தயம், ஏஞ்சலிகா மற்றும் பெப்பர்மிண்ட் போன்ற மசாலாப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். இந்த மசாலாப் பொருட்கள் கருப்பையை சுருங்கைச் செய்கின்றன. இதனால், முன்கூட்டிய பிரசவம் மற்றும் கருச்சிதைவு ஆகியவற்றை ஏற்படுத்தும். சில மசாலாப் பொருட்களும் இரத்தத்தை நீர்த்துப்போகச் செய்யலாம், மேலும் இரத்தப்போக்கும் ஏற்படலாம்.
Article continues below advertisment
கர்ப்பிணிப் பெண்கள் எள் விதைகளை அதிகமாக உட்கொள்ளக்கூடாது. ஏனென்றால், தேனில் கலந்த எள் விதைகளை உட்கொண்டால் கருச்சிதைவை ஏற்படுத்தும். இருப்பினும், கருப்பு எள் விதைகள் பிரக்னன்ஸியின் இறுதி வாரங்களில் எடுத்துக்கொள்ளலாம். ஏனெனில் அவை இயற்கையான பிரசவத்திற்கு உதவிகரமாக இருக்கும்.
இதையும் படிக்கலாமே! - கர்ப்ப காலத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சியை மேம்படுத்த சிறந்த உணவுகள்
ஒவ்வொரு பெண்ணின் பிரக்னன்ஸி பயணம் மிகவும் தனித்துவமானது. சிலர் ஒரு சில விஷயங்களில் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். மற்றவர்கள் வேறு ஏதாவது ஒரு பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடலாம். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் அதிக எச்சரிக்கையுடனும், எதையும் அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளாமலும் கவனமுடன் இருக்க வேண்டும். உங்கள் பிரக்னன்ஸி பயணத்தின் போது ஏதேனும் பிரச்சினைகள் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால் உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்!
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | baby shampoo | baby lotion | baby powder | baby body wash | stretch marks cream | stretch marks oil | baby cream | baby massage oil | baby hair oil |