hamburgerIcon
login

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article continues after adveritsment

Article continues after adveritsment

  • Home arrow
  • Pimples and Acne arrow
  • முகப்பரு மற்றும் கருந்திட்டுக்களை சரி செய்வதற்கு தேயிலை எண்ணெய் எப்படி உதவுகிறது?(How Can Tea Tree Oil Help In Dealing With Acne & Hyperpigmentation? In Tamil) arrow

In this Article

    முகப்பரு மற்றும் கருந்திட்டுக்களை சரி செய்வதற்கு தேயிலை எண்ணெய் எப்படி உதவுகிறது?(How Can Tea Tree Oil Help In Dealing With Acne & Hyperpigmentation? In Tamil)

    Pimples and Acne

    முகப்பரு மற்றும் கருந்திட்டுக்களை சரி செய்வதற்கு தேயிலை எண்ணெய் எப்படி உதவுகிறது?(How Can Tea Tree Oil Help In Dealing With Acne & Hyperpigmentation? In Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    Article continues after adveritsment

    ஒரு நபரின் சருமமானது அவருடைய உள்நலனைப் பிரதிபலிக்கிறது என்று உலகம் முழுவதும் இருக்கும் தோல் மருத்துவர்கள் நம்புகிறார்கள். எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி முகப்பரு மற்றும் கருந்திட்டுக்கள் உங்கள் சருமத்தை பாதிப்பதோடு மட்டுமில்லாமல், உங்களுடைய முழு வாழ்க்கையையும் பாதிக்ககின்றன. எந்தவொரு அடிப்படை நோயினைக் கண்டறிவதற்கான அறிகுறிகளும் உங்களுடைய சருமத்தில்தான் முதலில் தெரியும். இந்த காயங்கள் மற்றும் வடுக்கள் உங்களுடைய சுயமரியாதையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை உங்கள் அன்புக்குரியவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

    ஒருவருக்கு கருந்திட்டுக்கள் மற்றும் முகப்பரு ஏன் ஏற்படுகிறது?(Why Does One Experience Hyperpigmentation And Acne?In Tamil)

    பல அடிப்படை பிரச்சனைகள் காரணமாக ஒருவருக்கு முகப்பரு மற்றும் கருந்திட்டுக்கள் ஏற்படலாம். இந்தப் பிரச்சனைகள் வெளிப்புறமாகவோ, உட்புறமாகவோ அல்லது ஹார்மோன்களினாலோ கூட இருக்கலாம். இதற்காக வீட்டு வைத்தியம் ஏதேனும் ஒன்றை முயற்சி செய்து பார்க்கலாம். தேயிலை எண்ணெய் கிரீம் போன்ற பயனுள்ள தயாரிப்புகளுக்கு மாறவும் அல்லது இது போன்ற சரும பிரச்சனைகளைச் சமாளிப்பதற்கு தோல் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கலாம்.

    இது தவிர, வயதான சருமத்திலும் கூட கருந்திட்டுக்கள் ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில், கருந்திட்டுக்களைக் குறைப்பதற்கு டிரெடினோயின் மற்றும் ரெட்டினால் போன்று செயல்பாட்டில் இருக்கும் பொருட்களை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். உங்களுடைய சரும பிரச்சனைகளை சமாளிப்பதற்கு நீங்கள் பல வழிகளை முயற்சித்திருந்தும், அவை எதுவும் வேலை செய்வதாகத் தெரியவில்லை என்றால் அதற்காக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை! ஏனென்றால், மைலோ கேர் டீ ட்ரீ ஆயில் கிரீமை பயன்படுத்துவதன் மூலமாக நீங்கள் நிச்சயமாக சிறந்த பலன்களைப் பெறலாம்!

    இந்தக் கட்டத்தில் நீங்கள் என்ன தயாரிப்புகளுக்கு மாறுவதை கருத்தில் கொள்ள வேண்டும்?(What Products Should You Consider Switching To At This Point?In Tamil)

    மற்றவர்கள் இதை ஒரு அற்பமான பிரச்சனையாக நினைக்கலாம்; இருந்தாலும், கருந்திட்டுக்கள் மற்றும் முகப்பருவின் மன எழுச்சி விளைவுகளை லேசானதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட பலவிதமான சருமப் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவதில் மனச்சோர்வு மற்றும் சலிப்பு ஏற்பட்ட பிறகு, இப்போது நீங்கள் இயற்கை பொருட்களைக் கொண்ட தயாரிப்புகளுக்கு மாற வேண்டும். மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ்வாஷ் மற்றும் ஃபேஸ் கிரீம் கருந்திட்டுக்கள் மற்றும் முகப்பருவைப் போக்க உதவும்.

    தேயிலை எண்ணெய், வேம்பு, துளசி மற்றும் பல பழச்சாறு போன்ற இயற்கை பொருட்களின் நன்மையுடன் இந்த சரும பராமரிப்பு பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தேயிலை எண்ணெய் சருமத்திற்கான சிறந்த சிகிச்சை விருப்பமாக கருதப்படுகிறது. ஏனென்றால், இதில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் போன்றவை உள்ளது.

    கருந்திட்டுக்கள் மற்றும் முகப்பரு தழும்புகளைக் குறைப்பதற்கு நீங்கள் என்னென்ன குறிப்புகளைப் பின்பற்றலாம்?(What Are A Few Tips You Could Follow To Reduce The Appearance Of Hyperpigmentation And Acne Scars? In tamil)

    • தேயிலை எண்ணெய், ஒவ்வாமை ஏற்படும் சென்சிடிவ் ஆன சருமத்தைத் தவிர அனைத்து சரும வகைகளிலும் அற்புதமாக செயல்படுகிறது. இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி ஈரப்பதமூட்டும் முகவராக செயல்படுவது இந்த அத்தியாவசிய எண்ணெயின் விதிவிலக்கான பண்புகளில் ஒன்றாகும். செபாசியஸ் சுரப்பிகளில் இருக்கும் கொழுப்பு மற்றும் அழுக்குகளை நீக்கும் சக்தியும் இதற்கு உண்டு. தேயிலை எண்ணெயில் முகப்பரு மற்றும் கருந்திட்டுக்களை சமாளிப்பதற்கு உதவும் பல வழிகள் உள்ளன. இதற்காக கீழே குறிப்பிடப்பட்டுள்ள புள்ளிகளை நீங்கள் கருத்தில் கொள்ளலாம்:

    • · மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ் வாஷ் மூலமாக முகத்தைக் கழுவ வேண்டும், பிறகு விரைவான முடிவுகளுக்கு, நீங்கள் இதை தினமும் இரண்டு முறை பயன்படுத்த வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று இருக்கும் மென்மையான காட்டன் துண்டின் மூலமாக உங்களுடைய முகத்தைத் துடைக்கவும். உங்களுடைய முகத்திற்கு எப்போதும் குளிர்ந்த நீரை பயன்படுத்தவும் ஏனென்றால் சூடான நீர் உங்களுடைய சருமத்தின் அனைத்து துளைகளையும் திறக்கும். அதுமட்டுமின்றி, உங்களுடைய முகத்தினைத் துடைப்பதற்கு சுத்தமான டவலைப் பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    • சுத்தமான விரலைப் பயன்படுத்தி, மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ் கிரீமை சிறிதளவு எடுத்துக்கொண்டு, இதை முகப்பரு அல்லது முகத்தில் பிரச்சனை இருக்கும் இடத்தில் தடவலாம். ஈரப்பதமாக இருக்கும் சருமத்திலும் கூட நீங்கள் கிரீம்-ஐ தடவலாம்.

    • அந்த இடத்தில் கடுமையாகத் தேய்க்காமல் லேசாகத் தடவவும். அந்தப் பகுதியில் சுழற்சியை மேம்படுத்துவதற்காக பாதிக்கப்பட்ட பகுதியில் மசாஜ் செய்வதை உறுதி செய்து கொள்ளவும். குறைந்தது நான்கு முதல் ஐந்து நிமிடங்களுக்கு மசாஜ் செய்யவும்.

    • கிரீம் தடவிய பிறகு, இது சருமத்தில் நன்கு உறிஞ்சும் வரைக்கும் பொறுமையாக காத்திருக்கவும். ஈரப்பதமாக இருக்கும் சருமத்திலும் கூட நீங்கள் கிரீம்-ஐ தடவலாம்.

    • உங்களுடைய முகத்தை அடிக்கடி தொடுவதைத் தவிர்க்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், முகத்தில் இருக்கும் புள்ளி அல்லது முகப்பருவை அழுத்தி எடுக்கவோ அல்லது கிள்ளவோ கூடாது. இப்படி செய்வதால் இது சருமத்தில் மேலும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தி நிலைமையை மோசமாக்கலாம்.

    • கிருமி நீக்கம் செய்யும் செயல்முறையைத் தொடங்குவதற்கு சிறிதளவு போதுமானது. கூடுதலாகப் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை, ஏனென்றால் இது உங்களுடைய சென்சிடிவ் ஆன சருமத்தை சேதப்படுத்தும். கூடுதலாக, உங்களுடைய சருமம் சூரியனால் பாதிக்கப்படலாம். எனவே, வெயிலில் செல்வதற்கு முன்பு போதுமான அளவு சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

    • தேயிலை எண்ணெயைக் கொண்ட பொருளைப் பயன்படுத்திய பிறகு, அதற்கு மேலே வேறு எந்தப் பொருளையும் பயன்படுத்தக் கூடாது. இந்தக் கட்டத்தில் நீங்கள் பயன்படுத்த வேண்டிய தயாரிப்புகள் மற்றும் எந்த தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தக்கூடாது என்பதைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கு, நீங்கள் உங்களுடைய தோல் மருத்துவரைத் தொடர்பு கொள்ளலாம்.

    • அடுத்த நாள் காலையில் ஃபேஸ் வாஷ்-ஐக் கொண்டு முகத்தைக் கழுவவும் பிறகு உங்களுடைய தோல் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட சன்ஸ்கிரீன் லோஷனைப் பயன்படுத்தவும். இங்கே மீண்டும், ஒரு சுத்தமான துண்டு பயன்படுத்தப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். தயாரிப்பை உங்களுடைய முகத்தில் தேய்க்கும் போது அல்லது கழுவும் போது மிகவும் மென்மையாகச் செய்யவும். முகமானது லேசாக சிவந்திருந்தால், இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்! இது சிறிது நேரம் கழித்து மறைந்துவிடும்.

    • அற்புதமான முடிவுகளைப் பெறுவதற்கு ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி மற்றும் தியானம் போன்றவற்றில் எந்தவித சமரசமும் செய்யாதீர்கள். உண்மையில், ஒரு சீரான உணவை உட்கொள்வது என்பது நீங்கள் நினைப்பதை விட அதிக நன்மை பயக்கும். கூடுதலாக, நீங்கள் தினமும் 60 நிமிடங்கள் வரைக்கும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆரோக்கியமான வழக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றுதால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உங்களால் நல்ல முடிவுகளைப் பார்ப்பதற்கு உதவும்!

    • உங்கள் முகத்தில் சருமத்திற்கான பராமரிப்புப் பொருளைப் பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் (ஒட்டு சோதனை) செய்ய மறக்காதீர்கள் ஏனென்றால் உங்களுடைய முகத்தை மறைக்கும் சருமமானது உடலின் மற்ற பகுதிகளை விட மிகவும் மென்மையானதாகவும் மற்றும் மெல்லியதாகவும் இருக்கும். தயாரிப்பில் இருக்கும் சில பொருட்களால் உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் அது உங்களுக்கு தெரியாமல் கூட இருக்கலாம், எனவே நீங்கள் பேட்ச் சோதனையை மேற்கொள்ளாமல் இதைப் பயன்படுத்தினால் இது உங்களுடைய சருமத்தை எதிர்மறையாகப் பாதிக்கும்

    • தேயிலை எண்ணெய், கருந்திட்டுக்கள் மற்றும் கரும்புள்ளிகளை குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஓடிசி/OTC (ஓவர்-தி-கவுண்டர்) தீர்வுகள் மூலமாக உங்களுடைய நேரம், பணம் மற்றும் சக்தியை வீணாக்காமல் இருந்தால் நல்லது; ஏனென்றால், இப்போதெல்லாம், இணையத்தில் விற்பனை செய்யப்படும் பல சரும பராமரிப்புப் பொருட்களில் இயற்கையான பொருட்கள் இருக்காது, மேலும் இது உங்களுடைய சரும நிலையை மோசமாக்கும். உண்மையில், ஒரு சில தயாரிப்புகளில் இரசாயனங்கள் இருக்கும், அவை சென்சிடிவ் ஆக இருக்கும் சருமத்தை கடுமையானதாக மாற்றும்.

    • எந்தவொரு மருந்தையும் பயன்படுத்துவதற்கு முன்பும் நீங்கள் உங்களுடைய தோல் மருத்துவரை அணுக வேண்டும். பொதுவாக இயற்கையான பொருட்கள் இருக்கும் தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது ஏனென்றால் இவை பயன்படுத்துவதற்கு பாதுகாப்பானவை. இயற்கையான பொருட்களைக் கொண்ட எந்தவொரு சரும பராமரிப்புப் பொருட்களிலும் முதலீடு செய்வதற்கு முன்பு அதிலிருக்கும் லேபிளை கவனமாகப் படியுங்கள். முகப்பரு அல்லது கருந்திட்டுக்கள் இருக்கும் உங்களுடைய சருமத்தில் ஏதாவதொரு சரும பராமரிப்புப் பொருளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, உங்களுடையது சென்சிடிவ் சருமமா என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் இதற்காக நீங்கள் தோல் மருத்துவரை அணுகலாம்.

    தேயிலை எண்ணெய் தயாரிப்புகள் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றதாக இருக்குமா?(Is Every Type Of Skin Compatible With Tea Tree Oil Products? In Tamil)

    இல்லை! ஒவ்வொரு சரும வகையும் தேயிலை எண்ணெய் அல்லது தேயிலை எண்ணெய் கொண்ட தயாரிப்புகளுடன் இணக்கமாக இருக்காது. உண்மையில், ஆரம்பத்தில் பொருட்களை பயன்படுத்தும்போது மக்களுக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்படுவது மிகவும் பொதுவானது. தொடர்பு தோல் அழற்சி அல்லது லேசான தோல் வெடிப்பு போன்ற வடிவில் நீங்கள் ஒவ்வாமையை அனுபவிக்கலாம். இது தவிர, இந்த தோல் அழற்சியானது வீக்கம், அரிப்பு அல்லது எரியும் உணர்வை ஏற்படுத்தலாம். முறையற்ற முறையில் சேமிக்கப்பட்ட அல்லது காலாவதியான தேயிலை எண்ணெயைப் பயன்படுத்துவதால் இந்த ஒவ்வாமை எதிர்விளைவுகளை ஒருவர் அனுபவிக்கலாம்.

    தோல் எரிச்சல், சொறி, அரிப்பு, எரியும் உணர்வு அல்லது கொப்புளங்கள் போன்றவற்றை நீங்கள் அனுபவித்தால் தேயிலை எண்ணெயைப் பயன்படுத்துவதை நிறுத்தவும். இதைப் பயன்படுத்தும்போது ஆரம்ப கட்டங்களில், சருமத்தில் செதில்கள் போன்று ஏற்படுவது மிகவும் பொதுவானது. எனவே, குறைந்த அளவு தேயிலை எண்ணெயை சில துணை (கேரியர்) எண்ணெயுடன் கலந்து பயன்படுத்திக் கொள்ளுங்கள். உண்மையில், நீங்கள் எந்தளவிற்குக் குறைவாகப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு எரிச்சல் குறைவாக இருக்கும் மற்றும் செயல்திறன் அதிகமாக இருக்கும். எனவே, முகப்பருவுக்கு டீ ட்ரீ ஃபேஸ் கிரீம்-ஐ குறைவாகப் பயன்படுத்துவதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும், குறிப்பாக தூங்கச் செல்வதற்கு முன்பு பயன்படுத்தலாம்.

    உங்களுக்கு அரிக்கும் தோலழற்சி அல்லது ஒரே மாதிரியான சரும நிலைகள் இருந்தால், தேயிலை எண்ணெய் கொண்ட பொருட்களைப் பயன்படுத்துவது சருமத்தை மோசமாக்கும். இது தவிர, தேயிலை எண்ணெயை உள்ளிழுப்பது ஆஸ்துமா உள்ளவர்களுக்கும் சிக்கலாக மாறும். தேயிலை எண்ணெய் தயாரிப்பை பயன்படுத்தத் தொடங்குவதற்கு முன்பு, நீங்கள் உங்களுடைய மருத்துவரைத் தொடர்புகொள்ளுங்கள். நல்ல தரம் மற்றும் செயல்திறன் அடிப்படையில் மைலோ கேர் டீ ட்ரீ ஃபேஸ் கிரீம் பயன்படுத்துவது மிகவும் சாதகமாக இருக்கும்.

    இதையும் படிக்கலாமே! - நீரிழிவு நோயின் மிகவும் பொதுவான அறிகுறிகள் மற்றும் அவற்றை எவ்வாறு கையாள்வது (Most common symptoms of Diabetes and how to manage them In Tamil)

    தேயிலை எண்ணெய் தயாரிப்புகளில் நீங்கள் எந்த விளைவையும் காணவில்லை என்றால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்?(What Can You Do If You Do Not See Any Result With Tea Tree Oil Products?In Tamil)

    • டீ ட்ரீ ஆயில் கிரீம் அல்லது இதுபோன்ற தயாரிப்புகளை தொடர்ந்து பயன்படுத்திய பிறகும் கூட நீங்கள் எந்த வித்தியாசத்தையும் விளைவுகளையும் பார்க்கவில்லை என்றால், நீங்கள் உங்கள்ளுடைய தோல் மருத்துவரை தொடர்பு கொள்வதற்கு சரியான நேரமாகும். உங்கள் தோல் மருத்துவர் உங்களுடைய சருமத்திற்கு ஏற்ற மற்றும் நன்கு ஆற்றல்மிக்க தயாரிப்பைப் பரிந்துரைக்கலாம். பொதுவாக, தேயிலை மர எண்ணெய் பொருட்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இரண்டு மாதங்களுக்கும் குறைவாக தொடர்ந்து பயன்படுத்தினால் இது நீங்கள் விரும்பிய முடிவுகளைக் காட்டுகிறது. இருந்தாலும், கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகள் ஏற்பட்டால், தேயிலை எண்ணெய் அடங்கிய தயாரிப்புகளைப் பயன்படுத்துவதை நிறுத்திவிடலாம்.

    • தேயிலை எண்ணெய் தயாரிப்புகளை ரெட்டினோல், ட்ரெட்டினோயின், கிளைகோலிக் அமிலம் மற்றும் பென்சாயில் பெராக்சைடு போன்ற செயல்பாட்டில் உள்ள பொருட்களுடன் கலக்க வேண்டாம்.இது அதிக எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் புதிய துளைச் சுவர் சரிவையும் உண்டாக்கலாம். தேயிலை எண்ணெயை மற்ற சக்திவாய்ந்த பொருட்களுடன் பயன்படுத்தாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம், உங்கள் சருமமானது ஒரே நேரத்தில் அதிகமாக எதையும் எடுத்துக் கொள்ளாது. உங்களுடைய சருமத்தில் ஏற்படும் எரிச்சல் மற்றும் சிவத்தல் தவிர, உங்களுடைய சருமத்தில் இருக்கும் செல்கள் வேகமாக வெளியேற வழிவகுக்கும். இது தவிர, தேயிலை எண்ணெய் பொருட்களை ஒரு நாளைக்கு இரண்டு முறைக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.

    • உங்களுடைய சருமம் சிவந்திருந்தாலோ அல்லது வீங்கியிருந்தாலோ, அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். இது உங்களுடைய சருமம் ஒரு புதிய தயாரிப்புடன் பழகுவதற்கான அறிகுறியாகும். சில மணிநேரங்களுக்குப் பிறகு அல்லது தயாரிப்பின் வழக்கமான பயன்பாட்டின் மூலமாக உங்களுடைய சருமம் அமைதியாகிவிடும். பிறகு உங்கள் முகத்தில் இருக்கும் நுரையை அகற்றலாம். சுத்தமான துண்டுடன் உங்கள் முகத்தைத் துடைப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஒரு நல்ல தரமான க்ளென்சரையும் பயன்படுத்தலாம்!

    பொதுவாக கருந்திட்டுக்கள் மற்றும் முகப்பருவுக்கு முடிவு உண்டா?(Is There An End To Hyperpigmentation And Acne In General?In Tamil)

    ஆமாம்! நீங்கள் தொடர்ந்து தேயிலை எண்ணெய் பொருட்களை பயன்படுத்தினால், கருந்திட்டுக்கள் (ஹைப்பர் பிக்மென்டேஷன்) மற்றும் முகப்பருவுக்கு ஒரு முடிவு உள்ளது. உங்களுடைய முகத்தில் இருக்கும் பிடிவாதமான வடுக்கள் காரணமாக, உங்கள் சுயமரியாதையை நீங்கள் பலமுறை கேள்வி கேட்க வேண்டியிருக்கலாம். இருந்தாலும், நல்ல செய்தி என்னவென்றால், இறுதியில் நீங்கள் கனவு கண்டவாறு உங்களுக்கான சருமத்தைப் பெறலாம்! கருந்திட்டுக்களின் வடுக்கள் காலப்போக்கில் மறைந்துவிட்டாலும், ஆழமான புள்ளிகள் எளிதில் போகாது. இத்தகைய சூழ்நிலைகளில், நீங்கள் சரும பராமரிப்பு சிகிச்சைகளுக்குச் செல்லலாம் அல்லது தேயிலை எண்ணெய் சாற்றில் உள்ளவற்றை மேற்பூச்சு சிகிச்சைகளைப் பயன்படுத்தலாம்.

    மீண்டும், நீங்கள் மதரீதியாக ஒரு சில சரும பராமரிப்பு நடைமுறைகளைப் பின்பற்ற விரும்பலாம். முதலில், நீங்கள் எங்கு சென்றாலும் செல்வதற்கு முன்பு எல்லா இடங்களிலும் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சில நேரங்களில், புற ஊதா கதிர்கள் கருந்திட்டுக்கள் மற்றும் முகப்பருவை அதிகரிக்கலாம். இறுதியில், அந்த வடுக்கள் மறைவதற்கு நீண்ட காலம் ஆகலாம். இரண்டாவதாக, எளிமையான ஆனால் பயனுள்ள சரும பராமரிப்பிற்கான வழக்கத்தைக் கடைபிடிக்கவும். இதற்கு கண்டிப்பாக தந்திரம் செய்ய வேண்டும்! மைக்ரோ-நீட்லிங் மற்றும் கெமிக்கல் பீல் சிகிச்சைகளையும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

    தேயிலை எண்ணெய் தயாரிப்புகளைப் பயன்படுத்திய பிறகு இதற்கான முடிவுகளைப் பார்ப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்?(How Long Will It Take To See The Results After Using Tea Tree Oil Products?In Tamil)

    தேயிலை எண்ணெய் தயாரிப்புகளை தொடர்ந்து பயன்படுத்திய இரண்டு மாதங்களுக்குள் நீங்கள் இதற்கான முடிவுகளைப் பார்க்கத் தொடங்கலாம். தேயிலை எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் தவிர, நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன, இது பல்வேறு விதமான நோய்த்தொற்றுகள் மற்றும் கடுமையாக இருக்கும் முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கும். தொடர்ச்சியாக 45 நாட்களுக்கு பயன்படுத்தினால் இது குறிப்பிடத்தக்க முடிவுகளைத் தரும். உண்மையில், இனி நீங்கள் காத்திருக்க வேண்டாம், உங்களுக்கு பிடித்த மைலோ கேர் டீ ட்ரீ கிரீம் இன்றே வாங்குங்கள்!

    மீண்டும், தேயிலை எண்ணெயை சருமத்தில் நேரடியாக தடவினால் தோல் அழற்சி அல்லது இது போன்ற சரும நிலைகளை ஏற்படுத்தலாம் என்பதை நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே, தேயிலை எண்ணெயை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் போன்ற நல்ல தரமான துணை எண்ணெயுடன் கலக்கலாம். இது தவிர, மைலோ கேர் டீ ட்ரீ கிரீமைப் பயன்படுத்துவதையும் நீங்கள் பரிசீலிக்கலாம், இது எந்த நேரத்திலும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தரும்!

    இறுதித் தீர்ப்பு(The Final Verdict)

    நீங்கள் முகப்பரு புண்கள் அல்லது பிற சரும நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டிருந்தால், இதற்கு தேயிலை எண்ணெய் நிச்சயமாக சிறந்த தீர்வாக இருக்கும். இதிலிருக்கும் துவர்ப்பான மற்றும் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் காரணமாக, இந்த ஆற்றல்மிக்க எண்ணெயானது எந்த நேரத்திலும் ஆரோக்கியமான தோற்றமுடைய சருமத்தை உங்களுக்கு வழங்கும்! புள்ளிகள், பருக்கள், தொற்றுகள் அல்லது கறைகள் எதுவாக இருந்தாலும், இதைப் போக்குவதற்கு தேயிலை எண்ணெய் உண்மையில் சிறந்த தீர்வாக இருக்கும்.

    ஆம், தேயிலை எண்ணெயைக் கொண்ட நல்ல தரமான தயாரிப்புகளை பயன்படுத்துவது அவசியமாகும். அனைத்து தேயிலைப் பொருட்களும் ஒரே மாதிரியாக இருக்காது, எனவே, பயன்படுத்துவதற்கேற்ற பாதுகாப்பான உயர்தரமான மற்றும் நம்பிக்கையான பிராண்டை வாங்குவது நல்லது.

    Tags :

    Tea tree oil in tamil, tea tree oil meaning in tamil, uses of tea tree oil in tamil, how to cure acne in tamil, best tea tree oil in tamil, how to use tea tree oil in tamil

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Gajalakshmi Udayar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    Article continues after adveritsment

    Article continues after adveritsment

    Article continues after adveritsment

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.