
ஆமாம்! கர்ப்பம் என்பது உங்கள் வாழ்க்கையின் ஒரு மறக்க முடியாத மற்றும் அழகான பகுதியாக மாறும். ஒரு புதிய தொடக்கத்திற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்கு தொடங்குவதற்கு முன், உங்கள் வாழ்க்கை முறை மற்றும் தினசரி நடைமுறைகளில் சில மாற்றங்களைச் செய்வது இன்றியமையாததாக இருக்கலாம். உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக நீங்கள் பல விஷயங்களை மாற்ற வேண்டியிருக்கும். இருப்பினும், அத்தகைய மாற்றங்களைச் செய்ய, ஒருவர் தங்களின் உடல் நிலையைப் பற்றி சற்று பகுப்பாய்வு செய்து, அதன் பின்னர் சில கர்ப்பகால பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்களை செய்ய வேண்டும்.
கர்ப்ப காலத்தில், ஒவ்வொரு பெண்ணின் உடலும் வெவ்வேறு முறையில் செயல்படுகிறது. எனவே, ஒரு கர்ப்பிணியின் உடலில் ஏற்படும் தொடர்ச்சியான மாற்றங்களைக் கண்காணிக்க, அவரை சில கர்ப்பகால பரிசோதனைகளுக்கு உட்படுத்த வேண்டியிருக்கும். இந்த சோதனைகள் குழந்தையின் சீரான ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த உதவும். இது தவிர, இந்த கர்ப்பகால பரிசோதனைகள் ஏதேனும் அடிப்படை உடல்நலப் பிரச்சனைகள் இருப்பதைக் கண்டறியவும் உதவுகின்றன. எனவே, நீங்கள் கர்ப்ப கால பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்கள் மேற்கொள்வது அவசியமானது ஆகும் .
பெரும்பாலான சோதனைகள் விருப்பத் தேர்வாக இருந்தாலும், அவற்றில் எந்த சோதனையையும் நீங்கள் தவிர்க்க வேண்டாம். உங்கள் கர்ப்ப காலத்தின் அழகான பயணத்தில் உங்கள் மருத்துவர் உங்களுக்கும் குழந்தையின் நலனுக்காகவும் பல ஸ்கேன்கள் மற்றும் சோதனைகளை பரிந்துரைப்பார். இரண்டாவது டிரைமெஸ்டரின் முடிவில், சில முக்கியமான சோதனைகளை நீங்கள் தவறவிடக் கூடாது. அவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்வோம்:
அனோமலி ஸ்கேன் உங்கள் கர்ப்பப்பை வாய், கர்ப்பப்பை மற்றும் குழந்தையை உன்னிப்பாகக் கவனிக்க உதவுகிறது. இது குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும், பிறவி குறைபாடுகள் அல்லது வளர்ச்சியின்மையைக் கண்டறியவும் உதவுகிறது. பொதுவாக, இந்த சோதனை நீங்கள் 20 வார கர்ப்பமாக இருக்கும் போது எடுக்கப்படுகிறது. இது மார்பாலஜி ஸ்கேன் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், சோனோகிராபர் குழந்தையின் அசைவுகளைப் பார்ப்பதோடு நஞ்சுக்கொடியின் நிலையையும் சரிபார்க்க முடியும்.
ஸ்கேன் செய்வதற்கு முன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், சிறுநீர் கழிப்பதைத் தவிர்க்குமாறும் மருத்துவர் உங்களுக்கு அறிவுறுத்துவார். மருத்துவர் உங்களை திரையில் குழந்தையைப் பார்த்து ரசிக்க அனுமதிப்பார். பின்னர் அந்த வீடியோ பதிவை ஒரு சிடியில் கொடுப்பார். ஆம், உங்கள் குழந்தையை திரையில் பார்ப்பது கண்களுக்கு விருந்தாக அமையும்.
நீங்கள் இரத்த பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், கரு அனோமலி ஸ்கேன், சர்க்கரை அளவு பரிசோதனைகள், இரத்த அழுத்த அளவுகள் மற்றும் பிற அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்கள் ஆகியவை உங்கள் கர்ப்ப காலத்தில் பல முறை செய்யப்படும். இந்த சோதனைகள் அனைத்தும் உங்கள் பாதுகாப்பிற்காகவும் கருவில் குழந்தையின் நலனுக்காகவும் தான் என்பதால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். மருத்துவர்கள் குழந்தையின் வளர்ச்சியைத் தொடர்ந்து கண்காணிக்கிறார்கள். மேலும், ஏதாவது பிரச்சனை இருந்தால், அது குறித்து அவர்களிடம் தெரிவித்து, தேவைப்பட்டால் சிகிச்சை அல்லது கர்ப்பத்தை கலைப்பதற்கான ஆலோசனைகளை வழங்குவார்கள்.
உங்கள் மகப்பேறு மருத்துவரின் கிளினிக்கில் வழக்கமான சோதனைகளைத் தவிர, உங்கள் வயிற்றின் அளவு, குழந்தையின் இதயத் துடிப்பு, புரத அளவுகள், சிறுநீர் குளுக்கோஸ் அளவுகள், எடை, எடிமா (உங்கள் கைகள் மற்றும் கால்களில் வீக்கம் ஏற்படுதல்), அம்னியோடிக் திரவ அளவு, குழந்தையின் எலும்புகள் ஆகியவற்றை மருத்துவர் பரிசோதிப்பார்.
மருத்துவர் உங்கள் குழந்தையின் தலை, கழுத்து, பிளவு உதடு, குழந்தையின் முதுகெலும்பு, குழந்தையின் வயிற்றுச் சுவர், தொடை எலும்பு, குழந்தையின் இதயம், குழந்தையின் சிறுநீரகங்கள், பாதங்கள், கால்கள், கைகள் மற்றும் கைகளின் அமைப்பு மற்றும் வடிவத்தை சரிபார்ப்பார். கர்ப்பத்தில் குழந்தையின் நிலையைக் கண்காணிக்க வேண்டியது அவசியம்.
உங்கள் மருத்துவர் உங்கள் குடும்பத்தின் மருத்துவ வரலாறு, நீங்கள் எடுத்துக் கொள்ளும் மருந்துகள் அல்லது சிகிச்சைகள், கருவில் உள்ள குழந்தையின் அசைவுகள், தூங்கும் முறை, நீங்கள் பின்பற்றும் டயட், தொடர்ச்சியான உடற்பயிற்சி, அதிக ரத்த அழுத்தம், குறைப்பிரசவம் ஆகியவை குறித்து கேட்பார். கர்ப்ப காலத்தில் இந்த அறிகுறிகளை நீங்கள் சந்திக்க நேரிட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்:
உங்கள் கர்ப்பத்தின் பிற்பகுதி மாதங்களில் பிறப்புறுப்பு இரத்தப்போக்கு ஏதேனும் ஏற்பட்டால், அது உயிருக்கு ஆபத்தான நிகழ்வாகக் கூட இருக்கலாம். இத்தகைய நிலை அப்ரப்சியோ பிளசென்டே (Abruptio placentae) என்று அழைக்கப்படுகிறது. அத்தகைய நிலை எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்றாலும், உங்கள் கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் இது மிகவும் பொதுவானது. இந்த அறிகுறியை நீங்கள் சந்திக்க நேரிட்டால் உடனடியாக 20 வார ஸ்கேன் செய்யப்படுவதை உறுதி செய்யுங்கள்.
வயிற்று வலி வாயுத் தொல்லையால் கூட ஏற்படலாம் அல்லது போலி பிரசவ வலி அல்லது மலச்சிக்கல் காரணமாக கூட ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நிலைமைகள் சிறிது அசௌகரியத்தை ஏற்படுத்தினாலும், அதிக வலியை ஏற்படுத்தக் கூடாது. நீங்கள் கடுமையான வலியை அனுபவித்தால், அதற்கு சிறுநீர் பாதைத் தொற்று அல்லது பிற அடிப்படை பிரச்சனை கூட காரணமாக இருக்கலாம். கர்ப்பத்தின் பிற்பகுதி மாதங்களில் நீங்கள் கடுமையான வலியை அனுபவித்தால், கூடிய விரைவில் உங்கள் மருத்துவரை அணுகவும்.
கர்ப்ப காலத்தில் காய்ச்சல் அல்லது நடுக்கம் ஏற்படுவது உடலில் நிகழும் தொடர்ச்சியான மாற்றங்களால் இருக்கலாம். இருப்பினும், உங்களுக்கு 100° ஃபாரன்ஹீட் வெப்பநிலையை விட அதிகமாக இருந்தால், நீங்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். இந்த நிலைகளில் காய்ச்சல் வருவது உங்கள் குழந்தையின் ஹெல்த்தில் சிக்கலைக் குறிக்கலாம். உண்மையில், உங்கள் காய்ச்சலுடன் வழக்கத்திற்கு மாறான அறிகுறிகள் இருந்தால், நீங்கள் செக்-அப் செய்ய வேண்டிய நேரம் இது!
உங்கள் பிரசவ வலி தொடங்குவதற்கு இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாள் முன்பு உங்களுக்கு குமட்டல் ஏற்படவும் அல்லது உடம்பு சரியில்லாமல் போகவும் வாய்ப்புள்ளது. எனினும், எல்லாமே சரியாக இருக்கும் சிலரும் இந்த நிலையை அனுபவிக்கக் கூடும். இவ்வாறு, பிரசவ வலி ஏற்படும்போது செரிமான ஓட்டம் தடைபடுவதே இதற்கு காரணம். இப்போதுதான் சாப்பிடத் தொடங்கியிருப்பார் எனினும் ஏற்கனவே முழுமையாக சாப்பிட்டது போன்று தோன்றும். கர்ப்பிணிக்கு குமட்டல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், தீவிர குமட்டல் ஏற்பட்டால் அது மற்ற அடிப்படை பிரச்சனைகளையும் குறிக்கலாம். நிலைமை மோசமடைவதற்கு முன்பு உங்கள் மருத்துவரைத் தொடர்புகொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
கர்ப்ப காலத்தில் மங்கலான பார்வை ஏற்படுவது மிகவும் பொதுவானதாக இருக்கும். இது கருச்சிதைவுக்கான அறிகுறியாக இல்லாவிட்டாலும், உங்கள் பார்வையில் எதிர்பாராத அல்லது திடீர் மாற்றம் ஏற்படுதல், முதன்மையாக கர்ப்ப காலத்தில் இவ்வாறு ஏற்பட்டால், அது கடுமையான சிக்கலைக் குறிக்கும் அறிகுறியாக இருக்கலாம். சில பிரச்சனைகளில் கர்ப்பகால சர்க்கரை நோயும் அடங்கும். இதை தவிர, ப்ரீக்ளாம்ப்சியா எனப்படும் அதிக இரத்த அழுத்தம் எனும் ஒரு நிலையை அனுபவிக்கும் அபாயமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இது போன்ற திடீர் மாற்றங்களை நீங்கள் கவனித்தால், மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.
இந்த நிலை சிறுநீர் பாதையில் நோய்த்தொற்று இருப்பதைக் குறிக்கலாம். நிலையான அசௌகரியம் மற்றும் வலி லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம். எனவே, உங்கள் மருத்துவரை அணுகி, நிலைமையை விரைவில் குணப்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
திரவ வெளியேற்றம் பொதுவாக இயல்பானது. மேலும் உங்கள் கர்ப்ப காலம் மெதுவாக முன்னேறும்போது அது சற்று அதிகமாக இருக்கும். உண்மையில், உங்கள் கர்ப்ப காலத்தின் கடைசி மூன்று மாதங்களில் கடுமையான வெளியேற்றம் இருந்தால் அது முன்கூட்டிய பிரசவத்தை குறிக்கும். எனவே, உங்கள் பிரசவ வலி மோசமடைவதற்கு முன்பு மருத்துவ உதவியை நாடுவது நல்லது.
உங்கள் பிரசவ தேதி நெருங்கி வருவதால், உங்கள் கணுக்கால் அல்லது கால்களில் வீக்கம் ஏற்படலாம். உண்மையில், உங்கள் உடலின் சில பாகங்கள் புடைப்பாகவோ அல்லது வீக்கமாகவோ தோன்றலாம். அத்தகைய நிலை எடிமா என்று அழைக்கப்படுகிறது. உங்கள் முகம் அல்லது கைகளில் வீக்கம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இருப்பினும், வீங்கிய பகுதிகளில் ஏதேனும் வலியை நீங்கள் அனுபவித்தால், அது ஒரு மோசமான உடல்நிலையைக் குறிக்கலாம். வீக்கம் அல்லது வலி நீங்கவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
பொதுவாக, கர்ப்பிணிகளுக்கு மன அழுத்தம் அல்லது உடல் நேராக இல்லாமல் இருப்பதன் காரணமாக தலைவலி ஏற்படலாம். உங்கள் வயிற்றில் கூடுதல் எடையை நீங்கள் சுமப்பதால், உங்கள் உடல் நேராக இல்லாமல் இருப்பது போல் தோன்றலாம். இருப்பினும், அதிக நீடித்த மற்றும் கடுமையான தலைவலிகள் அதிக இரத்த அழுத்தம் இருப்பதைக் குறிக்கலாம். இது உங்கள் இரத்த அழுத்தத்தை தீவிர நிலைக்கு உயர்த்தும், குறிப்பாக கர்ப்ப காலத்தில் இது போன்று நிகழக் கூடும்.
இதையும் படிக்கலாமே! - கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கான ஃபீடல் டாப்ளர் ஸ்கேன் பற்றிய விரிவான வழிகாட்டி
உங்கள் உடல் பல பிரச்சனைகளால் பாதிக்கப்படக்கூடிய ஒரு கட்டத்தில், உயிருக்கு ஆபத்தான பல நிலைமைகளைத் தடுக்க உங்களுக்கு இந்த கர்ப்ப காலத்தில் எடுக்க வேண்டிய ஸ்கேன்கள் உதவும். ஆரம்ப கால சிகிச்சையானது உங்கள் குழந்தை ஆரோக்கியமாகப் பிறப்பதை உறுதி செய்யும். மேலும், பிரசவத்திற்குப் பிந்தைய பிரச்சனைகளைத் தவிர்க்கவும் இது உதவும்.
சோதனைகள் அல்லது ஸ்கேன்களின் போது நீங்கள் கவலைப்படுவது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும், இது உங்கள் குழந்தையின் ஹெல்த்தியான வளர்ச்சிக்காக மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது. உங்கள் ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில சப்ளிமெண்ட்ஸ் அல்லது மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். நான்கு முதல் ஆறு வாரங்களுக்கு ஒருமுறை செக்-அப் செய்து கொள்வது நல்லது!



This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |