
கர்ப்பகாலம் என்பது பெண்களுக்கு மிக முக்கியமானதொரு காலகட்டமாகும். எனினும், இந்த காலகட்டத்தில், உடல் பெரும்பாலும் நோய்களுக்கெதிராக பாதுகாக்கின்ற பண்புகளை இழக்கிறது, இதன் மூலம் எதிரிடையான பாதிப்புகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரிக்கிறது, இது குறிப்பாக தற்போதுள்ள உடல்நல கோளாறுகளின் காரணமாக ஏற்படும். புள்ளிவிவரங்களின் படி, மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட கர்ப்பிணிகளில் சுமார் 15% கர்ப்பிணி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது, ஒவ்வொரு விநாடிக்கு கர்ப்பம் தரித்துள்ள ஒவ்வொரு பெண்ணும் “கருச்சிதைவு ஏற்படுவதற்கு வாய்ப்பு“ உள்ளது என்பது பற்றி அறிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. கருச்சிதைவு பிரச்சினை குறித்து பல கட்டுக்கதைகள் சொல்லப்படுகின்றன. பலர் சில உணவுப் பொருட்களை உண்ணுவதன் காரணமாக கருச்சிதைவு ஏற்படுமென கூறுகின்றனர்.
கருச்சிதைவு என்பது கர்ப்பத்திலுள்ள சிசு 500 கிராம் எடைக்கு மிகாமல் இருக்கும் போது, கர்ப்பமடைந்த 20 வாரங்களில் தன்னிச்சையாக கரு கலைந்து விடுவதை குறிக்கிறது. 80%-க்கு மேலான கருச்சிதைவுகள் ஆரம்ப காலத்திலேயே நிகழ்கிறது, அதாவது 12 வாரங்களுக்குள்ளாகவே நிகழ்ந்து விடுகிறது. இந்த சமயத்தில் தான், சிசுவின் உறுப்புகள் வளர்ச்சியடைய தொடங்குவதால், விளைவுகள் ஆபத்தானதாக இருக்கக் கூடும். பெரும்பாலும், தான் கர்ப்பம் தரித்திருப்பதை அறியாத பெண், இரத்தப்போக்கு ஏற்படுவதை மாதவிடாய் காலத்தின் ஆரம்பமாக நினைத்துக் கொள்வாள். இப்பேற்பட்ட சூழ்நிலை மிக ஆபத்தானதாகும், கர்ப்பத்திலுள்ள சிசுவின் முழுமை பெறாத வெளியேற்றத்தின் காரணமாக கடுமையான சிக்கல்கள் உண்டாகலாம்.
22 வாரங்களுக்கு பின் கருச்சிதைவு ஏற்படக் கூடிய அறிகுறிகள் இருக்குமானால், குறைப்பிரசவம் மற்றும் 650 கிராமுக்கு மேல் எடை கொண்ட குழந்தைகளை பற்றி இங்கே குறிப்பிடுகிறோம்.
பிறப்புறுப்பில் இரத்தப்போக்கு ஏற்படுவது கர்ப்பகாலத்தில் கருச்சிதைவு ஏற்படும் அபாயத்தினைக் குறிக்கிறது. அதன் தீவிரம், நீடிக்கும் காலம் மற்றும் வண்ணச் செறிவு எத்தகையதாக இருப்பினும், நீங்கள் உடனடியாக மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
இடுப்பு முள்ளந்தண்டு எலும்புடன் இணையும் பாகம் (sacrum) அல்லது தொடை அடிவயிறு இணைப்பு பகுதியில் (inguinal region) ஏற்படுகின்ற வலியுணர்ச்சி, கருப்பை ஹைப்பர்டோனிசிட்டி (பிரசவ நேரத்தில் கருப்பையில் அளவுக்கதிகமாக ஏற்படும் சுருக்கம்) என்னும் பிரச்சினை இருப்பதைக் குறிக்கிறது, மேலும் இது வளர்ச்சியடைகிற கருவிலுள்ள சிசுவை பெண்ணின் உடல் அழிக்க முயல்வதின் அறிகுறியாகும்.
ஒரு வேளை இரத்தப்போக்கு மற்றும் அசௌகரியம் ஏற்படுவதின் காரணங்கள் குறைந்த தீவிரமுடையதாக இருக்கலாம், ஆனாலும் இத்தகைய அறிகுறிகளை கவனிக்காமல் விட்டு விடக் கூடாது. கர்ப்பவதியான பெண்ணிற்கு இப்படிப்பட்ட பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்கிறதென கண்டுபிடிக்கப்பட்டால், குறிப்பிட்ட பாதுகாப்பான காலம் வரையிலும் பெண்ணின் கர்ப்பத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுமாறு பார்த்துக் கொள்வது தான் மருத்துவர்களின் கடமையாகும்.
சிறப்பான வாழ்க்கைத் தரத்தினை பெறுவதற்கு, எத்தகைய சுவையான உணவாக இருப்பினும், கருச்சிதைவை உண்டாக்கும் சில உணவுகளைத் தவிர்க்கவும். கர்ப்ப காலத்தின் போது நீங்கள் சாப்பிட போவது பற்றி இன்னும் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான சர்க்கரை மற்றும் மதுபானம் போன்ற நச்சுப் பொருட்களை தவிர்ப்பது மட்டுமின்றி, சமைக்கப்படாத மீன், வறுத்த உணவுகள், அரைகுறையாக சமைக்கப்பட்ட மாமிசம், சரியாக கழுவப்படாத பழங்கள் மற்றும் காய்கறிகளையும் உண்பதைத் தவிர்க்க வேண்டும். அவற்றில் தூய்மைக் கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதால் கருவில் உள்ள குழந்தைக்கு உடல்நல பிரச்சினைகளை உண்டாக்கக் கூடும்.
எனவே, நன்றாக சமைக்கப்பட்ட, ஊட்டச்சத்து மிகுந்த, ஃபோலிக் அமிலம், இரும்புச் சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற வைட்டமின்களும், மினரல்களும் நிறைந்த உணவினை உண்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், நீங்கள் கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டிய, கருச்சிதைவை உண்டாக்கக் கூடிய பொருட்களின் பட்டியலை நாங்கள் இங்கு கொடுத்துள்ளோம். எனவே, கவனமாக படிக்கவும்!
கர்ப்பவதியான பெண்களின் முக்கியமான எதிரிகளில் ஒன்று மதுபானம் தான். இது தவிர்க்கப்பட வேண்டும், ஏனெனில் இது கர்ப்பத்திலுள்ள சிசுவின் உடலில் சேர்ந்து விடுகிறது. இந்த நச்சுப்பொருளை, கருவின் வளர்ந்து வரும் உடலால் அகற்ற முடியாத காரணத்தினால், குறைப்பிரசவம், வளர்ச்சி குறைபாடு மற்றும் இதயத்தின் இயல்பற்ற வளர்ச்சி போன்றவை ஏற்படக் கூடும்.
சில மீன்களில் அதிக அளவில் மெர்க்குரி இருக்கும், இதனை அதிக அளவில் உட்கொள்ளும் பட்சத்தில், குழந்தைக்கு நரம்பு சம்பந்தமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். சுறா, மர்லின், ப்ளூஃபின் டியூனா, மற்றும் ஆரஞ்சு மற்றும் ஸ்வார்ட் மீன் போன்ற மீன்களை கர்ப்ப காலத்தில் தவிர்க்க வேண்டும்.
கூடுதலாக, சுஷி, சிப்பிகள் போன்ற பச்சை உணவுகளையும், மாமிசம் போன்ற அரைகுறையாக சமைக்கப்பட்ட உணவுகளையும் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், அவை லிஸ்டீரியா பாக்டீரியாவினால் மாசுபடுத்தப்பட்டிருக்கலாம், இதன் மூலம் கருக்கலைப்பு, குறைப்பிரசவம் போன்றவை ஏற்படலாம், அல்லது சிஸ்டிசெர்க்கோஸிஸ் போன்ற நரம்பு மண்டலத்தை பாதித்து மூளையின் செயல்பாட்டினை சீர்குலைக்கக் கூடிய நோய்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
பலருக்கு பச்சை முட்டை சாப்பிடுவது வழக்கமாக இல்லாமல் இருக்கலாம், ஆயினும் மயோனேஸ், சீஸர் சாலட், எக்னாக் மற்றும் ஹாலந்தேஸ் போன்ற உணவு வகைகளை பெரும்பாலும் உண்ணும் வழக்கம் இருக்கும். சால்மொனெல்லாத் தொற்று ஏற்படும் அபாயத்தைத் தடுப்பதற்கு, இந்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும். மேலும் எப்போதும் சமைத்த முட்டைகளையே உண்ண வேண்டும்.
ப்ளூ, ஃபெட்டா, ப்ரீ, கேமெம்பெர்ட் மற்றும் கோர்கோன்சலா போன்ற சீஸ்களையும், மற்றும் பதப்படுத்தப்படாத பால் அல்லது பதப்படுத்தப்படாத பால் சார்ந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும், ஏனென்றால் இவற்றில் லிஸ்டீரியா உள்ளது. இந்த பாக்டீரியாவால் கர்ப்பத்திலுள்ள சிசு அல்லது பிறந்த குழந்தைக்கு மோசமான தீங்குகள், குறைப்பிரசவம், மற்றும் இரத்தத்தில் நஞ்சு கலத்தல் போன்ற உயிரிழப்பை ஏற்படுத்தக் கூடிய அபாயங்கள் உள்ளன.
பப்பாளி, குறிப்பாக பச்சை நிற பப்பாளி, கருச்சிதைவை உண்டாக்குவதாக நம்பப்படுகிறது, இது கருக்கலைய செய்யும் உணவுகளின் பட்டியலில் உள்ளது. பச்சை நிற பப்பாளியில் கருச்சிதைவிற்கு இட்டுச் செல்கிற, கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்தக் கூடிய நொதி உள்ளது. எந்த அளவு பழுக்காத பப்பாளியை உட்கொள்வது கருக்கலைய செய்யும் என்று நீங்கள் கேட்கலாம். குறிப்பிட்ட அளவு இன்னதென்று சொல்வதற்கில்லை, ஆனாலும் பழுக்காத பப்பாளியை உண்பது குறைப்பிரசவத்திற்கு இட்டுச் செல்லக் கூடிய வாய்ப்புள்ளது. எனவே, கர்ப்ப காலத்தின் போது இந்த உணவினை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
நன்றாக சுத்தம் செய்யப்பட்ட பழங்களையும், காய்கறிகளையும் நீங்கள் உண்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஒரு வேளை அவை சரியாக கழுவப்படாவிட்டால், இவைகளின் மூலம் டாக்ஸோப்ளாஸ்மோசிஸ் (Toxoplasmosis) என்னும் நோய் பரவும் வாய்ப்புள்ளது. இந்த நோய் கருக்கலைப்பு, குறைப்பிரசவம், இயல்பற்ற வளர்ச்சி போன்ற பாதிப்புகளை மட்டுமின்றி குழந்தையின் இறப்பிற்கும் இட்டுச் சென்று விடக் கூடும்.
காரமான உணவுகள் என்பது, சில சமயங்களில், கர்ப்பகாலத்தின் போது உண்பதற்கு பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால், அவற்றால் வயிற்று அமிலம் அல்லது பிற இரைப்பை சிக்கல்கள் போன்றவை உருவாக வாய்ப்பிருப்பதால் இவ்வாறு கருதப்படுகிறது. ஆயினும், பிரசவ வலி துண்டுவதற்கு உதவும் உணவுகளின் பட்டியலில் இது சேர்க்கப்பட்டுள்ளது என்றாலும் கூட, இது பிரசவ வலியைத் தூண்டும் என்பதற்கான சரியான ஆதாரங்கள் இல்லை.
அன்னாசிப் பழத்தில் பல பண்புகள் உள்ளன. சில தாய்மார்களின் எண்ணப்படி, குழந்தை வரவிற்கு உதவும் உணவுகளின் பட்டியலில் இதனை சேர்க்கவும் வாய்ப்புள்ளது. சுத்தமான அன்னாசிப் பழத்தில் உள்ள பிரோம்லென் என்னும் நொதியானது, கருப்பை வாயின் இறுக்கத்தினை தளர்த்துவதற்கு உதவுவதாக நம்பப்படுகிறது.
இதில் உண்மைத்தன்மை இருப்பினும், பைன் ஆப்பிள்களில் பிரோம்லென் மிகவும் குறைந்த அளவே உள்ளது என்று அறியப்படுகிறது. குடலினை ஓரளவிற்காவது தளரச் செய்வதற்கு ஒரு பெண் மிக அதிக அளவில் அன்னாசிப் பழத்தை உண்ண வேண்டியிருக்கும்.
இது நன்கு பரிசோதிக்கப்பட்ட ஒரு யோசனையாகும். துளசி, கற்பூரவள்ளி, தைம் (நறுமண கறியிலைச் செடியின் வகை), பார்ஸ்லி (கொத்தமல்லி வகை), சாஜ் (சமையலுக்குரிய மணப்பூண்டு வகை), பெருஞ்சீரகம், அல்லது கடுங்காரமுள்ள சிவப்பு மிளகு போன்றவை கருப்பை சுருக்கத்திற்கு உதவுவதாக நம்பப்படுகிறது. எனினும், ஒரு சில பொருட்களால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புள்ளதால், அவற்றை கர்ப்ப காலத்தின் போது உண்ணுபது தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், இவை கருப்பை சுருக்கங்களை தூண்டுவதற்கான வாய்ப்புள்ளது. முன்னெச்சரிக்கையாக, அளவாக சாப்பிடுவதற்கும், நிபுணர்களுடன் கலந்தாலோசித்து விட்டு உட்கொள்ளுமாறும் பரிந்துரைக்கப்படுகிறது.
மூலிகைகளை போலவே, பூண்டும் கர்ப்பத்திலுள்ள சிசுவை வெளி வருவதற்கு ஏற்றவாறு, சரியான இடத்திற்கு செல்வதற்குத் தூண்டி விட்டு, அதன் நகர்விற்கு உதவுகிறது. நிரூபிக்கப்பட்டதோ இல்லையோ, பிரசவ வலியைத் தூண்டுவதற்கு போதுமான அளவில் பூண்டினை உட்கொள்வது பண்டைய காலங்களிலிருந்தே பின்பற்றப்பட்டு வந்த வழிமுறைகளில் ஒன்றாக இருக்கிறது.
இது உலகம் முழுவதும் பொதுவாக கிடைக்கப் பெறும் மூலிகையல்ல. டீ-யாக குடிக்கப்பெறும் இது, அமெரிக்க நாட்டினை பூர்வீகமாக கொண்ட தயாரிப்பாகும். கோஹோஷ் டீ குடிப்பதனால் மிதமான அளவில் தசைச்சுருக்கம் ஏற்படலாம். இதனை நிரூபிப்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் இல்லையென்றாலும் கூட, எச்சரிக்கையாக இருந்து, தொடர்ந்து எங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.
மேற்குறிப்பிட்ட உணவுகள் இரண்டாம் மும்மாதத்தில் கருச்சிதைவை ஏற்படுத்தும். இவை கூடவே, கடுமையான மன அழுத்தம், கடும் உடல் உழைப்பு, மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை போன்றவை கர்ப்பவதியான பெண்ணின் உடலை பாதித்து, தேவையான கால அளவிற்கு கர்ப்பத்திலுள்ள சிசுவை தாங்க முடியாத நிலைக்கு இட்டுச் செல்கிறது. மேலும், கர்ப்ப காலத்தின் போது பல்வேறு மருந்துகளை கட்டுப்பாடற்ற முறையில் உட்கொள்வதும் கூட கருச்சிதைவு ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம். பாதுகாப்பான மூலிகைகள் என கருதப்படுபவைகளை கூட, அனுபவமுள்ள மருத்துவரை கலந்தாலோசித்த பிறகே எடுத்துக் கொள்ள வேண்டும்.
சிறிதளவு சந்தேகம் இருந்தாலும் கூட நீங்கள் மருத்துவ நிபுணரை அணுக வேண்டும். நிதானமான மனநிலையில் இருப்பது மிக அவசியம், பதட்டப்படுவது கூடாது. பல நேரங்களில், உங்கள் அமைதியான மனநிலையும், சரியான சமயத்தில் கிடைக்கப்பெறும் மருத்துவ உதவியுமே கர்ப்பத்தினை காப்பதற்கு உதவுகின்றன.
இரத்தப் புள்ளிகளை நீங்கள் கண்டறிந்தால், கர்ப்பப்பையின் சுவர்களில் ஒட்டியிருக்கும் கோரியான் - எனப்படும் முளைக்கருவின் மெல்லிய தோல் விடுபட்ட தன்மையை குறிக்கின்ற இரத்தப்போக்கினை நீங்கள் காணும் பட்சத்தில், உடனடியாக நீங்கள் படுத்துக் கொண்டு, ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள வேண்டும். இது போன்ற சூழ்நிலையில் சுயமாகவே சென்று மருத்துவ உதவி பெறுவதென்பது ஏற்புடையதல்ல.
ஒரு வேளை கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர் கண்டறியும் பட்சத்தில், மருத்துவ பரிசோதனைகளின் மூலம் நீங்கள் நிலைமையின் தன்மையையும், அபாயத்தின் தீவிரத்தையும் புரிந்து கொள்ளலாம். முதன்மையாக, மருத்துவ நிபுணர் கர்ப்பத்தில் வளர்கின்ற சிசுவின் இதயத் துடிப்பினை பரிசோதிப்பார். அல்ட்ராசவுண்ட் பரிசோதனையின் மூலம் நஞ்சுக்கொடி மற்றும் முளைக்கருவின் நிலையை அறிந்து கொள்ளலாம், மேலும் கர்ப்பப்பை அமைப்பின் சாத்தியமான நோய்க்கூறுகளையும் தெரிந்து கொள்ளலாம். மகப்பேறு மருத்துவர் ஆய்வு செய்யும் போது கருப்பை இயல்பான செயல்பாட்டில் இருக்கிறதா என தெரிந்து கொள்ளலாம்.
இதயும் படிக்கலாமே! - உங்களுடைய 7 வார கர்ப்பகால உணவு முறையில் நீங்கள் சேர்த்துக் கொள்ள வேண்டிய டாப் 5 உணவுகள்
நாம் ஆலோசித்தபடி, கருச்சிதைவு ஏற்படுத்தக் கூடிய உணவினை பற்றி பார்த்தோம், ஆயினும் பிரசவ வலியை தூண்டும் பண்புகள் கொண்டதாக மேற்சொல்லப்பட்ட பெரும்பாலான உணவுப்பொருட்களும், துணை உணவுப் பொருட்களும் அறிவியல் பூர்வமாக நிரூபணம் செய்யப்பட்டதல்ல. மேற்கொண்டு, இவற்றை ஆதரிக்கின்ற எந்தவொரு அமைப்பின் கட்டுப்பாட்டிலும் இவை இல்லை என்று கூறலாம்.
குறைவான அளவுகளை எடுத்துக் கொள்ளவும், நேரடியான பொருந்தாக் குறிகள் தென்படும் போது பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்கவும். அனாவசியமான அபாயங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு மருத்துவ நிபுணர்களை கலந்தாலோசிக்கவும். பிரசவ வலியை தூண்டுவதன் பொருட்டு இந்த உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்வதென்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயமாகும். எனினும், நமக்குத தெரிந்த, பாதிப்பை உண்டாக்காத உணவுகளையே தேர்வு செய்யுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். உதாரணத்திற்கு, அன்னாசிப் பழத்தை எடுத்துக் கொண்டால், அதன் அளவுகள் கூடிப் போவதற்கு சாத்தியங்கள் கிடையாது. சாக்லேட் போன்ற பிற தயாரிப்புகளையும் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ளலாம். நம் உடல்நலத்தையோ அல்லது குழந்தையின் உடல்நலத்தையோ கெடுத்துக் கொள்ளாமலிருப்பது தான் இங்கு முக்கியமாகும். சரியான நேரம் வரும். எனவே, பிரசவ காலத்தை முழுமையான ஒத்திசைவோடும், சௌகரியத்தோடும் எதிர்கொண்டு, மிகுந்த அமைதியான மனநிலையில் பிரசவ நேரத்திற்கான காத்திருப்பே நம் நோக்கமாகும்.
miscarriage meaning in tamil, resasons for miscarriage in tamil, foods to avoid miscarriage in tamil, signs and symptoms of miscarriage in tamil, Myths and Facts: Can Heat Inducing Food Cause Miscarriage In English, Myths and Facts: Can Heat Inducing Food Cause Miscarriage In Hindi, Myths and Facts: Can Heat Inducing Food Cause Miscarriage In Telugu, Myths and Facts: Can Heat Inducing Food Cause Miscarriage In Bengali
Yes
No


















Now I'm 5th month pregnancy thn scan report said in ur baby head near cyst so it's any problem?
Mam I am 8 month pregnancy so ennaku konjam yoga dips venum
மூன்று நாட்கள் தள்ளிப் போய் இருக்கு. ஆனால் ஒரு வாரமாக வயிற்று வலி அப்பப்ப ஒரு ஐந்து நிமிடங்களுக்கு இருக்கிறது அடிவயிற்றில் வலி இருக்கிறது மீடியமாக கால் வலி இருக்கிறது என்ன கொடுக்கலாம்? என்ன செய்யலாம் என்று உங்கள் ஆலோசனை வேண்டும் தயவு செய்து எங்களுக்கு உடனடியாக ரிப்ளை செய்யுங்கள்
3 மந்த் பேபி எப்படி இருக்கும்
அடிக்கடி அடி வயிற்று வலி ரொம்ப வலியா இருக்கிறது இதற்கு என்ன செய்ய வேண்டும்
Your body needs extra nutrition this trimester - these can help.





This content is for informational purposes only and should not replace professional medical advice. Consult with a physician or other health care professional if you have any concerns or questions about your health. If you rely on the information provided here, you do so solely at your own risk.

Mylo wins Forbes D2C Disruptor award

Mylo wins The Economic Times Promising Brands 2022
Baby Carrier | Baby Soap | Baby Wipes | Stretch Marks Cream | Baby Cream | Baby Shampoo | Baby Massage Oil | Baby Hair Oil | Stretch Marks Oil | Baby Body Wash | Baby Powder | Baby Lotion | Diaper Rash Cream | Newborn Diapers | Teether | Baby Kajal | Baby Diapers Pants | Cloth Diapers | Laundry Detergent | Lactation Granules |