hamburgerIcon
login

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article Continues below advertisement

  • Home arrow
  • தத்துநடைபோடும் குழந்தைக்கு புலனுணர்வு செயலாக்கக் கோளாறு உள்ளதா என்பதை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது? arrow

In this Article

    தத்துநடைபோடும்  குழந்தைக்கு புலனுணர்வு செயலாக்கக் கோளாறு உள்ளதா என்பதை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது?

    Baby Care

    தத்துநடைபோடும் குழந்தைக்கு புலனுணர்வு செயலாக்கக் கோளாறு உள்ளதா என்பதை நான் எவ்வாறு கண்டுபிடிப்பது?

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    Article Continues below advertisement

    புலனுணர்வு செயலாக்கம் கோளாறு என்றால் என்ன?

    புலனுணர்வு செயலாக்கம் கோளாறு (எஸ்பிடி/SPD) என்பது ஒரு நரம்பியல்சார் நிலையாகும். இந்த நிலையில் புலனுறுப்புகளில் இருந்து வரும் புலனுணர்வு தகவல்களை மூளை செயலாக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒருவர் எந்த வகையில் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதைப் பொறுத்து, அந்த நபர் கூடுதல் சென்சிடிவாகவோ அல்லது புலனுணர்வு தகவல்களுக்கு ரியாக்ட் செய்யாமலோ இருக்கலாம். நீங்கள் பார்ப்பவை, கேட்பவை, முகர்பவை, ருசிப்பவை அல்லது தொடுபவை ஆகியன புலனுணர்வு தகவல்கள் ஆகும். இந்த கோளாறு பொதுவாக மற்றவர்கள் ரியாக்ட் செய்யாத தூண்டல்களுக்கு நீங்கள் அதிக சென்சிடிவாக உள்ளதைக் குறிக்கிறது.

    பெரியவர்களைக் காட்டிலும் எஸ்பிடி (SPD) சிறியவர்களில் அதிகம் காணப்படுகிறது. இருப்பினும், பெரியவர்களிலும் இதற்கான அறிகுறிகளைக் காணலாம். பொதுவாக, இந்த அறிகுறிகள் பெரியவர்களில் அவர்கள் குழந்தையாக இருந்த போதில் இருந்தே இருந்திருக்க வேண்டும். மேலும் தங்களை பிறரிடம் இருந்து தள்ளி வைக்கும் அந்த அறிகுறிகளை எப்படி கையாள வேண்டும் என்பதை அவர்கள் கற்றுக்கொண்டு இருக்கலாம். உதாரணமாக, புலனுணர்வு பிரச்சனைகள் உள்ள குழந்தைகள் புலனுணர்வை அதிகப்படியாக தூண்டும் விஷயங்களான அதிக சத்தம் உள்ள இடங்கள், பிரகாசமான வெளிச்சங்கள் அல்லது ஆழமான வாசனைகள் போன்றவற்றை வெறுக்கலாம் அல்லது, தங்கள் புலனுணர்வுகளை போதுமான அளவு தூண்டப்படாத சூழலில் கூடுதல் தூண்டலை நாடலாம்.

    புலனுணர்வு செயலாக்கக் கோளாறு என்பது ஒரு தனிக் கோளாறா அல்லது இது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு, அதிவேகத்தன்மை, கவனக்குறைவுக் கோளாறு மற்றும் பதட்டம் போன்ற பிற கோளாறுகளின் அறிகுறியா என்பது குறித்து மருத்துவர்களிடையே எப்போதும் சில விவாதங்கள் உள்ளன. இருப்பினும், புலனுணர்வு சார்ந்த சிக்கல்கள் அல்லது செயலாக்க கோளாறுகள் பற்றி அதிக தகவல்கள் அறியப்படவில்லை. இது குறித்து மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

    புலனுணர்வு செயலாக்கம் என்றால் என்ன?

    ஐந்து புலன்கள் பற்றி உங்கள் ஆரம்ப பள்ளியில் நீங்கள் படித்திருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவென்றால், உங்கள் ஐந்து புலன்களைத் தாண்டியும் இந்த உலகை நீங்கள் அதிகமாக உணர்கிறீர்கள்.

    புலனுணர்வு செயலாக்கம் பொதுவாக எட்டு முக்கிய வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை பின்வருமாறு:

    Article continues below advertisment

    தன்னகவுணர்வு வாங்கல் (ப்ரோப்ரியோசெப்ஷன்) :

    இது உங்கள் உடலைப் பற்றி உங்களுக்கு இருக்கும் ஒரு "உள்ளுணர்வு" ஆகும். இதன் காரணமாகவே நீங்கள் உங்கள் உடலின் தோரணை மற்றும் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறீர்கள். உதாரணமாக, நீங்கள் எப்படி நகர்கிறீர்கள் மற்றும் இடத்தை ஆக்கிரமிக்கிறீர்கள் என்பதை இது உங்களுக்கு சொல்லும்.

    அங்கண உணர்வு (வெஸ்டிபுலர்) :

    இந்தச் சொல் உள் காதுகளின் இடஞ்சார்ந்த அடையாளங் காணுதலுடன் தொடர்புடையது. இது உங்கள் சமநிலையையும் ஒருங்கிணைப்பையும் பார்த்துக் கொள்கிறது.

    உள்தூண்டல் (இன்ட்ரோசெப்ஷன்) :

    இந்தச் சொல் உங்கள் உடலில் என்ன நடக்கிறது என்பதற்கான புலனுணர்வைக் குறிக்கிறது. நீங்கள் சூடாக அல்லது குளிராக உணர்கிறீர்களா மற்றும் உங்கள் உணர்ச்சிகள் போன்றவற்றை உள்ளடக்கிய நீங்கள் எப்படி "உணர்கிறீர்கள்" என்பதை நன்கு புரிந்து கொள்ள இது உதவும்.

    ஐந்து புலன்கள் :

    சாதாரணமாக ஐந்து புலன்கள் உள்ளன- உணர்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல் மற்றும் பார்த்தல்.

    இந்தக் கோளாறைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சி அடிப்படையிலான சான்றுகள் போதுமானதாக இல்லை. பெரும்பாலான மருத்துவர்கள் மற்றும் வல்லுநர்கள் புலனுணர்வுப் பிரச்சனைகள் என்பது மற்றொரு கோளாறு அல்லது ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு போன்ற நிலையின் ஒரு கூறு என்று ஊகிக்கின்றனர். "புலனுணர்வு செயலாக்கக் கோளாறு" என்ற சொல் பொதுவாக செயல்முறை சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது.

    Article continues below advertisment

    புலனுணர்வு செயலாக்கக் கோளாறின் குறிப்புகள் மற்றும் அறிகுறிகள் யாவை?

    ஒரு குழந்தை வெவ்வேறு உணர்வுகளை எவ்வாறு செயலாக்குகிறது என்பதைப் பொறுத்து, புலனுணர்வு செயலாக்க சிக்கல்களின் அறிகுறிகள் வேறுபடுகின்றன. உதாரணமாக, எளிதில் தூண்டப்படும் குழந்தைகள் அதிக உணர்திறனைக் கொண்டிருக்கலாம். ஒளி, ஒலி மற்றும் தொடுதல் போன்ற புலன்சார் உள்ளீடுகளுக்கு அவர்கள் அதிக சென்சிடிவாக இருப்பதை இது குறிக்கிறது. இதன் விளைவாக, இந்த உணர்வுகள் அவர்களை மேலும் தொந்தரவு செய்யலாம், அல்லது அதிகப்படியான புலனுணர்வு தகவல்கள் காரணமாக கவனத்தை இழக்கச் செய்யலாம் அல்லது அவர்களை தவறாக செயல்படத் தூண்டலாம்.

    சில குழந்தைகள் ஹைபோசென்சிட்டிவிட்டியையும் அனுபவிக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்கள் புலனுணர்வு வெளியீடுகளுக்கு குறைந்த உணர்திறனைக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் அனுபவிக்கும் உணர்திறனைப் பொறுத்து அவர்களின் அறிகுறிகள் என்ன என்பதை பெரும்பாலும் தீர்மானிக்கலாம். உதாரணமாக, அதிக உணர்திறன் கொண்ட குழந்தைகள் அனைத்து ஒலிகளும் மிகவும் சத்தமாக இருப்பதாகவும் அல்லது அனைத்து வெளிச்சங்களும் மிகவும் பிரகாசமாக இருப்பதைப் போலவும் செயல்படலாம். இதன் விளைவாக, இந்த குழந்தைகள் சத்தம் நிறைந்த அறைகளில் வாழ்வதில் சிரமம் மற்றும் வாசனையால் மோசமாக பாதிக்கப்படலாம். புலனுணர்வு மீஉணர்மை (சென்சரி ஹைப்பர்சென்சிட்டிவிட்டி) காரணமாக பின்வருவன ஏற்படலாம்.

    • குறைந்த வலி

    • விகாரமான தோற்றம்

    • பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளாமல் தப்பித்தல்

      Article continues below advertisment

    • கண்கள் அல்லது காதுகளை அடிக்கடி மூடுவது

    • தேர்ந்தெடுக்கப்பட்ட உணவு விருப்பத்தேர்வுகள் அல்லது ஒரு சில அமைப்புகள் கொண்ட உணவுகளை உண்ணும் போது குமட்டுதல்

    • அணைப்புகள் அல்லது திடீர் தொடுதல்களைத் தவிர்த்தல்

    • மென்மையான தொடுதல்கள் மிகவும் கடினமானவை என்று நம்புவது

    • உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமத்தை எதிர்கொள்ளுதல்

      Article continues below advertisment

    • கவனம் செலுத்துவதில் சிக்கல்

    • பதில்களை மாற்றியமைப்பதில் சிரமம்

    • நடத்தைசார் சிக்கல்கள்

    மாறாக, ஹைப்பர்சென்சிட்டிவிட்டி கொண்ட குழந்தைகள் குறைந்த உணர்திறனை அனுபவிக்கிறார்கள் மற்றும் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள அதிகம் ஆசைப்படுகிறார்கள். மேலும், புலனுணர்வு சார்ந்த ஃபீட்பேக்குகளைப் பெற அவர்கள் சுற்றுப்புறங்களுடன் தங்களை அதிகம் இணைத்து கொள்ளலாம். இது அவர்களை ஹைப்பர்சென்சிட்டிவிட்டி கொண்டவராக காட்டலாம். உண்மையில், அவர்கள் தங்கள் புலன்களை அதிகமாக பயன்படுத்த முயற்சிக்கலாம். புலனுணர்வு ஹைப்பர்சென்சிட்டிவிட்டி பின்வருவனவற்றை ஏற்படுத்தலாம்.

    • அதிக வலி

      Article continues below advertisment

    • சுவர்களில் இடித்து கொள்ளுதல்

    • விஷயங்களை உணர்தல்

    • பொருட்களை தங்கள் வாயில் வைப்பது

    • அடிக்கடி கட்டிப்பிடிப்பது

    • மற்றவர்களையோ அல்லது பொருட்களையோ தாக்குவது

      Article continues below advertisment

    • தனிப்பட்ட செயல்வெளியை மதிக்காமல் இருப்பது

    • அசைந்தாட்டம் மற்றும் தள்ளாட்டம்

    சிறுவர்களில் புலனுணர்வு சிக்கல்கள் ஏற்பட காரணம் என்ன?

    தத்துநடை போடும் குழந்தைகளில் புலனுணர்வு செயலாக்கக் கோளாறுகள் ஏற்பட என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், தகவலைச் செயலாக்கும் மற்றும் ஒழுங்கமைக்கும் மூளை புலனுணர்வு பாதைகளுக்கும் இதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஆட்டிசம் கொண்டவர்களில் புலனுணர்வு செயலாக்க சிரமங்கள் அதிகம் ஏற்படுகிறது. இருப்பினும், புலனுணர்வு சார்ந்த சிக்கல்கள் தானாக ஏற்படுமா அல்லது மற்றொரு கோளாறு காரணமாக ஏற்படுகிறதா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், மருத்துவத் துறையில் பலர் புலனுணர்வு செயலாக்க சிரமங்கள் ஒரு நோயறிதலைக் காட்டிலும் எச்சரிக்கையாக நினைக்கிறார்கள்.

    கர்ப்பம் மற்றும் டெலிவரி சார்ந்த பிரச்சனைகள் புலனுணர்வு செயலாக்க சிக்கல்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று ஒரு சீராய்வு மற்றும் ஒரு சிறிய ஆய்வு தெரிவிக்கிறது, அவை பின்வருமாறு:

    • குறைப்பிரசவம்

      Article continues below advertisment

    • குறைந்த பிறப்பு எடை

    • பெற்றோரில் மன அழுத்தம்

    • கர்ப்பமாக இருக்கும் போது மது பானங்கள் அல்லது போதைப்பொருள் பயன்படுத்துதல்

    • புலனுணர்வு செயலாக்கக் கோளாறு ஏற்படுவதற்கான ஆபத்து காரணிகளில் குறிப்பிட்ட இரசாயனங்கள் மற்றும் குழந்தை பருவத்தில் குறைவான புலனுணர்வு தூண்டல் ஆகியவை அடங்கும். அசாதாரண மூளை செயல்பாடு கூட புலன்கள் மற்றும் தூண்டல்களுக்கு மூளை எவ்வாறு பதிலளிக்கிறது என்பதை மாற்றலாம்.

    புலனுணர்வு சிக்கல்கள் மற்றொரு பிரச்சனையின் ஒரு பகுதியா?

    பல மருத்துவர்கள் புலனுணர்வு கோளாறுகளை ஒரு தனிக் கோளாறுகளாக பார்க்கவில்லை. ஆனால் சிலருக்கு அவர்கள் உணர்வது, பார்ப்பது, முகர்வது, சுவைப்பது அல்லது கேட்பது போன்றவற்றைச் செயலாக்குவதில் சிக்கல்களை சந்திக்கின்றனர் என்பது தெளிவாகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், குழந்தைகளில் புலனுணர்வு சார்ந்த பிரச்சனைகள் ஏற்படுகின்றன, ஆனால் பெரியவர்களும் இவற்றை அனுபவிக்க வாய்ப்புள்ளது. மாற்றப்பட்ட புலனுணர்வு செயலாக்கம் கொண்ட சில குழந்தைகள் ஆட்டிசம் ஸ்பெக்ட்ரமில் உள்ளனர்.

    Article continues below advertisment

    புலனுணர்வு சிக்கல்களுடன் தொடர்புடைய சிக்கல்கள் அல்லது கோளாறுகள் பின்வருமாறு:

    ஆட்டிசம் ஸ்பெக்டரம் கோளாறு (ஏஎஸ்டி/ASD) :

    ஆட்டிசம் கொண்டவர்கள் புலனுணர்வு தகவலைச் செயலாக்க காரணமான மூளையில் உள்ள நரம்பியல் பாதைகளில் ஏற்ற இறக்கங்களைக் கொண்டிருக்கலாம்.

    அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு (ஏடிஹெச்டி/ADHD) :

    ADHD ஆனது தேவையற்ற புலனுணர்வு சார்ந்த தகவலை வடிகட்டுவதற்கான திறனைக் கொண்டுள்ளது, இது புலனுணர்வு சுமைக்கு வழிவகுக்கும்.

    மனப்பித்து :

    இந்த பிரச்சினை உள்ளவர்களில், மூளையின் புலனுணர்வு பாதையில் உள்ள அசாதாரண செயல்முறைகளானது மாற்றப்பட்ட உணர்திறன் மற்றும் மோட்டார் செயலாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நியூரான்களுக்கு இடையேயான இணைப்புகளை நிறுவி ஒழுங்குபடுத்துகிறது.

    தூங்குவதில் சிக்கல்கள் :

    தூக்கமின்மை போன்ற தூக்கக் கோளாறுகள் மயக்கத்தை ஏற்படுத்தும், இது தற்காலிக புலனுணர்வு செயலாக்க சிக்கல்களை ஏற்படுத்தும்.

    Article continues below advertisment

    வளர்ச்சியில் தாமதம் :

    புலனுணர்வு சிக்கல்கள் உள்ளவர்களிடத்தில் வளர்ச்சி சார்ந்த தாமதங்கள் இருப்பது பொதுவானவை.

    மூளையில் காயம் :

    ஒரு ஆய்வின் படி, புறவழி மூளைக் காயமானது புலனுணர்வு செயலாக்கக் கோளாறுக்கான மற்றொரு சாத்தியமான காரணமாக இருக்கலாம்.

    எவ்வாறாயினும், ADHD உள்ள குழந்தைகள் புலனுணர்வு சார்ந்த சிக்கல்களைக் கொண்ட குழந்தைகளை விட வேறு ஏதோவொரு காரணத்திற்காக மிகைச் செயல்பாட்டினை அனுபவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ADHD உள்ளவர்கள் கவனம் செலுத்துவதில் அல்லது அமைதியாக உட்காருவதில் சிக்கல்களை அனுபவிக்கின்றனர். ஏனெனில், அவர்கள் உலகத்துடன் அதிக அளவில் புலனுணர்வு தொடர்புகளை வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள் அல்லது அவர்களின் சுற்றுப்புறசூழலுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறார்கள்.

    புலனுணர்வு சார்ந்த சிக்கல்கள் எப்படி கண்டறியப்படுகின்றன?

    புலனுணர்வு செயலாக்கக் கோளாறு என்பது அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு நரம்பியல் நிலை அல்ல. இந்த நோயறிதலுக்கான எந்த ஒரு அளவுகோல்களும் இல்லை என்பதே இதன் பொருள். அதற்குப் பதிலாக, குழந்தைகளின் நடத்தை மற்றும் மற்றவர்களுடன் நடந்துகொள்ளும் முறை குறித்து குழந்தைக்கு உதவுவதற்கான சிறந்த வழியை கற்றுக்கொடுப்பதன் மூலம் புலன்சார் செயலாக்கத்தில் குழந்தைகளுக்கு நிபுணர்கள் உதவுகிறார்கள்.

    மேலும், சில நேரங்களில், தத்துநடை போடும் குழந்தைகளில் புலனுணர்வு செயலாக்கக் கோளாறுக்கான வினாடி வினாக்கள் அல்லது சோதனைகள் அல்லது புலனுணர்வு செயலாக்க நடவடிக்கைகள் (எஸ்பிஎம்/SPM) போன்ற கேள்வித்தாள்களை தொழில் வல்லுநர்கள் பயன்படுத்துகிறார்கள். இந்தச் சோதனைகள் சுகாதாரத் துறை சார்ந்த நிபுணர்களுக்கு உதவலாம், மேலும் கல்வியாளர்கள் இதன் மூலம் ஒரு குழந்தையின் புலனுணர்வு சார்ந்த செயல்பாட்டை நன்கு புரிந்து கொள்ள முடியும்.

    Article continues below advertisment

    உங்கள் குழந்தைக்கு புலனுணர்வு சார்ந்த பிரச்சனைகள் இருப்பதாக உங்களுக்கு சந்தேகம் இருந்தால், மருத்துவரை அணுக வேண்டிய நேரம் இது என்பதை பின்வரும் குறிப்புகள் உணர்த்தலாம்.

    • அவர்களின் நடத்தை அன்றாட வாழ்க்கையில் குறுக்கிடுகிறது

    • அறிகுறிகள் ஒரு திடீர் திருப்பத்தை எடுக்கும்போது

    • அவர்களின் ரியாக்ஷன்களை கன்ட்ரோல் செய்வது மிகவும் கடினமாகி வருகிறது

    • புலனுணர்வு சிக்கல்கள் அவர்களின் கற்றலை பாதிக்கும்போது

    மருத்துவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் :

    உங்கள் குழந்தையின் புலனுணர்வு செயலாக்கத்தில் உள்ள சிக்கல்களைப் பற்றி பேச ஒரு டாக்டரை சந்திக்கும்போது, உங்கள் குழந்தையின் நடத்தை மற்றும் நீங்கள் அவர்களுக்கு எவ்வாறு சிறந்த முறையில் உதவலாம் என்பது குறித்த கேள்விகளைக் கேளுங்கள். நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகளில் சில பின்வருமாறு:

    • எனது குழந்தையின் நடத்தையை தெளிவுபடுத்த உதவும் நோயறிதல் முறை ஏதேனும் உள்ளதா?

    • இதற்கு உதவக்கூடிய ஏதாவது ஒரு சிகிச்சையை உங்களால் பரிந்துரைக்க முடியுமா?

    • என் குழந்தை வளரும்போது புலனுணர்வு செயலாக்க பிரச்சனைகள் போய்விடுமா?

    • வீட்டிலோ அல்லது வேறு சூழலிலோ எனது குழந்தைக்கு நான் உதவ முடியுமா?

    • பள்ளியில் என் குழந்தைக்கு நான் எப்படி உதவுவது?

    • என் குழந்தைக்கு புலனுணர்வு சார்ந்த சுமை ஏற்படும்போது நான் எப்படி உதவ வேண்டும்?

    • புலனுணர்வு செயலாக்கக் கோளாறு உள்ள குழந்தைக்கு நான் எப்படி உதவ வேண்டும்?

    புலனுணர்வு சார்ந்த சிக்கலைகளுக்கான சிகிச்சை என்ன?

    புலனுணர்வு சார்ந்த சிக்கல்கள் அல்லது புலனுணர்வு செயலாக்க கோளாறுகளுக்கு எந்த ஒரு தீர்வும் கிடையாது. இருப்பினும், சிகிச்சைக்கான சில விருப்பங்கள் இதற்கு உதவக்கூடும்.

    1. செயல்முறை சிகிச்சைகள் (Occupational therapy ) :

    ஒரு செயல்முறை சிகிச்சையாளர் குழந்தைக்கு பயிற்சி அளிக்கலாம் அல்லது புலனுணர்வு பிரச்சனைகள் காரணமாக அவர்கள் வழக்கமாகத் தவிர்க்கும் செயல்களைச் செய்யக் கற்றுக் கொடுக்கலாம். பள்ளியில், வகுப்பறையில் குழந்தையின் புலன்சார் தேவைகளுக்கு உதவ அவரின் ஆசிரியருடன் சேர்ந்து சிகிச்சையாளர்கள் செயல்படலாம்.

    2. இயன் சிகிச்சை(Physical therapy) :

    ஒரு புலனுணர்வு டயட்டை உருவாக்குவதில் ஒரு இயன் சிகிச்சையாளர் உதவலாம். புலனுணர்வு உள்ளீட்டிற்கான ஏக்கத்தைப் பூர்த்தி செய்ய உதவும் வடிவமைக்கப்பட்ட செயல்பாடுகளின் பட்டியல் இது. இதில் ஜம்பிங் ஜாக்ஸ் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஓடுவது ஆகியவை அடங்கும். வெயிட்டட் அல்லது சென்சரி உள்ளாடைகள் அல்லது திட்டமிடப்பட்ட புலனுணர்வு இடைவெளிகளும் பலன் தரும்.

    3. புலனுணர்வு ஒருங்கிணைப்பு சிகிச்சை(Sensory integration therapy) :

    செய்தொழில் தொடர்பான மற்றும் இயன் சிகிச்சை ஆகிய இரண்டும் புலனுணர்வு ஒருங்கிணைப்பு சிகிச்சையின் அடிப்படையாகும். இந்த அணுகுமுறை குழந்தைகள் தங்கள் புலன்களுக்கு சரியான முறையில் செயல்படுவதற்கான வழிகளைக் கற்றுக்கொள்ள உதவும். இது அவர்களின் அனுபவங்கள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை உணர உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் ஒரு வழக்கமான பதிலைக் கண்டுபிடிப்பார்கள்.

    4. Sensory diet சென்சரி டயட்(Sensory diet) :

    பெரும்பாலும், ஒரு சென்சரி டயட் என்பது மற்ற புலனுணர்வு செயலாக்க சிகிச்சை கோளாறுக்கு கூடுதலாக துணைபுரியும். சென்சரி டயட் என்பது உங்கள் வழக்கமான உணவு அல்ல. மாறாக, இது உங்கள் குழந்தை பகல் நேரத்தில் கவனம் செலுத்தவும், ஒழுங்கமைக்கவும் உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட வீடு மற்றும் பள்ளிக்கான புலனுணர்வு சார்ந்த செயல்களின் பட்டியல் ஆகும். புலனுணர்வு ஒருங்கிணைப்பு சிகிச்சையைப் போலவே, உங்கள் குழந்தையின் தேவைகளின் அடிப்படையில் ஒரு சென்சரி டயட் தனிதத்துவமான முறையில் உருவாக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக, ஒரு பள்ளிக்கான சென்சரி டயட் பின்வருவனவற்றை உள்ளடக்கியிருக்கலாம்.

    உங்கள் குழந்தை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பத்து நிமிட நடைப்பயிற்சிக்கு செல்ல ஒரு கால அளவு

    தினமும் இரண்டு முறை பத்து நிமிடங்களுக்கு உங்கள் குழந்தையின் விளையாட்டு நேரம்.

    நீங்கள் வேலை செய்யும் போது, உங்கள் குழந்தை இசையைக் கேட்கும் வகையில், இன்-கிளாஸ் ஹெட்ஃபோன்களை வழங்கவும்.

    டெஸ்க் சேர் பங்கீ கார்டு வழங்குவது உங்கள் குழந்தை வகுப்பறையில் அமர்ந்திருக்கும் போது கால்களை நகர்த்த உதவுகிறது.

    இந்த சிகிச்சைக்கான செலவுகள் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வருமா என்பது மற்றொரு கவலையாக உள்ளது. புலனுணர்வு செயலாக்கக் கோளாறு ஒரு நோயாக அங்கீகரிக்கப்படாவிட்டால், இந்த சிகிச்சைக்கு காப்பீடு வழங்கப்படாது என்பதே இதற்கான பதில். செய்தொழில் தொடர்பான சிகிச்சை முறை போன்ற சேவைகள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய உங்கள் காப்பீட்டு நிறுவனத்தைத் தொடர்புகொள்ளவும். உங்கள் குழந்தையின் புலனுணர்வு செயலாக்கச் சிக்கல் மற்றொரு மிகவும் கடுமையான கோளாறின் அறிகுறியாக இருந்தால் காப்பீட்டின் மூலம் இந்த சிகிச்சைக்கான பணத்தை பெறலாம். இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் காப்பீட்டாளர் உங்களுக்கு என்ன வகையான கவரேஜ் வழங்குவார் என்பதை தெரிந்துகொண்டு ஒருமுறைக்கு இருமுறை யோசித்த பின் பாலிசியை வாங்குவது நல்லது.

    பெற்றோர்கள் எப்படி உதவலாம் :

    பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக பேசுவதன் மூலம் புலனுணர்வு செயலாக்க சிக்கல்களை சமாளிக்க ஊக்குவிக்கலாம். அதனால் அவர்கள் தேவையான ஆதரவைப் பெறுவார்கள். இதில் பின்வருவன அடங்கும்.

    • உங்கள் குழந்தையின் புலனுணர்வு செயலாக்கத்தைப் பற்றி மருத்துவர் அல்லது குழந்தைநல மருத்துவரிடம் ஆலோசனை செய்தல்.

    • உங்கள் குழந்தையின் புலனுணர்வு செயலாக்கக் கோளாறைப் பற்றி அவரின் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவி ஊழியர்களுடன் பேசவும்.

    • செய்தொழில் தொடர்பான சிகிச்சைமுறை மற்றும் இயன் மருத்துவம் போன்ற உதவியை நாடுதல்.

    • உங்கள் குழந்தை என்ன உணர்கிறார்கள் என்பதைப் பற்றி அடிக்கடி அவரிடம் கேட்டறியவும்.

    • தங்களுக்கு இடைவேளை தேவையா அல்லது அளவுக்குமீறி தூண்டப்படுகிறாரா என்பதை பெரியவர்களுக்கு எப்படித் தெரியப்படுத்தலாம் என்பதைத் தங்கள் குழந்தைக்குக் கற்றுக் கொடுத்தல்.

    • பிராக்ட்டிஸ் மூலம் தங்கள் குழந்தையின் செய்தொழில் தொடர்பான சிகிச்சை முறை அல்லது இயன் மருத்துவத்திற்கு உதவுதல்.

    புலனுணர்வு சார்ந்த சிக்கல்கள் உள்ள குழந்தைகளுக்கான தீர்வு என்ன?

    புலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு எதுவும் கிடையாது. ஒரு சில குழந்தைகள் குறைவான பிரச்சனைகளை சந்திக்கலாம்; வேறு சிலர் அனுபவங்களைக் கொண்டு விஷயங்களை சமாளிக்க கற்றுக்கொள்ளலாம். மாற்றப்பட்ட புலனுணர்வு செயலாக்கத்துடன் கூடிய குழந்தைகளின் கண்ணோட்டத்தில் நிறைய பகுப்பாய்வு என்பது இல்லை. இது மனநலம் சார்ந்த நிலைமைகளுடன் இணைக்கப்பட்டிருக்கலாம்.

    சில மருத்துவர்கள் புலனுணர்வு கோளாறு சார்ந்த பிரச்சினைகளை மட்டும் கையாள்வதில்லை, மாறாக ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு அல்லது ADHD போன்ற கண்டறியப்பட்ட நிலைக்கு அளிக்கப்படும் சிகிச்சையின் போது தெரிய வரும் அறிகுறிகளை குறிவைத்து அதற்கான சிகிச்சையை அளிக்கிறார்கள்.உங்கள் குழந்தை அவர்களின் புலன்கள் மூலம் அவர்கள் எதிர்பார்ப்பதைச் செயல்படுத்துவதில் சிக்கலை அனுபவித்து, அதே சமயம் வேறு எந்த அடிப்படை மருத்துவ நிலையும் இல்லை என்றும் நீங்கள் நினைத்தால், இதற்கான அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகள் குறைவாகவே உள்ளன. ஏனெனில் இது ஒரு நிரூபிக்கப்பட்ட கோளாறாக கருதப்படவில்லை. மேலும் நடத்தைகளை மாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும் தீர்வுகளுக்கு சிறந்த விளைவுகள் கிடைக்காத பட்சத்தில் அதில் ஆர்வம் காட்ட யார் தான் விரும்புவார்கள்.

    முடிவுரை :

    நம் புலன்கள் உலகத்தைப் பற்றிய பல விஷயங்களை நமக்குச் சொல்கிறது, அது என்ன மாதிரியான வாசனை மற்றும் ஒரு விஷயம் எப்படி ஒலிக்கிறது என்பது முதல் நாம் எப்படி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது வரை நம்மை உணர வைக்கிறது. உங்கள் குழந்தைக்கு அந்த புலனுணர்வு தகவல்களைச் சேகரித்து விளக்குவதில் சிரமம் இருந்தால், புலனுணர்வு சார்ந்த பிரச்சனைகளின் அறிகுறிகளை அவர்களிடத்தில் நீங்கள் கவனிக்கலாம். இவற்றில் சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பில் சிரமம், முனகுதல், கவனம் தேவைப்படும் போது ஆக்ரோஷமாக இருப்பது அல்லது அடிக்கடி மேலும் கீழும் குதித்தல் போன்ற அறிகுறிகள் அடங்கும்.

    இருப்பினும், செய்தொழில் தொடர்பான சிகிச்சை முறையானது குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு புலனுணர்வு சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்களைச் சுற்றியுள்ள உலகத்தைச் சமாளிக்கக் கற்றுக்கொள்ள உதவும். அதிகப்படியான எதிர்வினைகளைக் குறைப்பது மற்றும் அவர்களின் புலனுணர்வு சார்ந்த அனுபவங்களுக்கான சிறந்த வெளிப்பாடுகளைக் கண்டுபிடிப்பதே இந்த சிகிச்சையின் நோக்கமாகும்.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Chandrika Iyer

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.