VIEW PRODUCTS
Article Continues below advertisement
Baby Care
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
Article Continues below advertisement
குழந்தை பிறந்த பிறகு சோர்வாகவும், சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டும் இருப்பது சாதாரணம் தான். எனினும், புதிதாக குழந்தையை பெற்றெடுத்த தாய்க்கு சுவாசிப்பதில் சிரமம், மயக்கம் அல்லது தாங்க முடியாத தலைவலி போன்றவை இருந்தால், அவர் பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா (preeclampsia) என்னும் ஜன்னியால் அவதிப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த தீவிரமான நிலை தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் ஆபத்தானதாக இருக்கலாம். எனவே, இதற்கான அறிகுறிகள் மற்றும் கூடுமான வரை விரைவாக சிகிச்சையைப் பெறுவது பற்றி தெரிந்துகொள்வது அவசியம். இந்த பதிவில், பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா என்னும் ஜன்னி, அதன் அறிகுறிகள் மற்றும் முறையான நோயறிதல் பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். இதில் கூறப்பட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் நீங்கள் அனுபவித்தால், உடனடியாக மருத்துவரை அணுக தயங்க வேண்டாம்.
பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியாவைப் புரிந்துகொள்வதற்கு, முதலில் நீங்கள் பிரசவத்திற்கு முன்னான ப்ரீஎக்லாம்ப்ஸியாவிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம். ப்ரீஎக்லாம்ப்ஸியா என்பது கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய ஒரு நிலை. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் புரதம் காணப்படுவது ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது. ப்ரீஎக்லாம்ப்ஸியா என்பது லேசான, மிதமான அல்லது தீவிரமானதாக இருக்கலாம். லேசான ப்ரீஎக்லாம்ப்ஸியா பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு இருக்காது. இருப்பினும், கடுமையான ப்ரீஎக்லாம்ப்ஸியா தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் மோசமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா என்பது பிரசவத்திற்குப் பிறகு உருவாகும் ப்ரீஎக்லாம்ப்ஸியாவின் ஒரு வடிவமாகும். கர்ப்பமாக இருக்கும்போது ப்ரீஎக்லாம்ப்ஸியா உள்ள பெண்களில் இது அதிக அளவில் காணப்படுகிறது. பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியாவின் அறிகுறிகள் கர்ப்ப காலத்தில் ஏற்படும் ப்ரீஎக்லாம்ப்ஸியாவின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரில் புரதம் காணப்படுதல் ஆகியவை அடங்கும். பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா என்பது தலைவலி, மங்கலான பார்வை மற்றும் மேல் வயிற்று வலி ஆகியவற்றையும் ஏற்படுத்தும். சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இது பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியாவுக்கு வழிவகுக்கும், இதனால் பிரசவத்தின் போது அல்லது அதற்குப் பிறகு தாய்க்கு வலிப்பு ஏற்படலாம்.
பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா என்பது பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தின் ஒரு வடிவமாகும். இது பொதுவாக பிரசவத்திற்குப் பிறகு முதல் இரண்டு வாரங்களுக்குள் நிகழ்கிறது, ஆனால், சில சமயங்களில் பிரசவத்திற்குப் பிறகு ஆறு வாரங்கள் வரை ஏற்படவும் வாய்ப்புள்ளது. பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா என்பது பெரும்பாலான சமயங்களில் லேசானவை என்றாலும், சில நேரங்களில் கடுமையான சிக்கல்களுக்கு கூட வழிவகுக்கும். அதாவது பக்கவாதம் அல்லது சிறுநீரக செயலிழப்பு அல்லது பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா போன்றவை ஏற்படலாம், இதன்போது தாய்க்கு வலிப்பு ஏற்படலாம். இது தாய் மற்றும் சேய் ஆகிய இருவருக்கும் பெரும் சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே, எந்தவொரு புதிதாக குழந்தை பெற்றெடுத்த தாயும் தலைவலி, மங்கலான பார்வை அல்லது மேல் வயிற்று வலி போன்ற பிரசவத்திற்குப் பின் ஏற்படும் ப்ரீஎக்லாம்ப்ஸியாவின் அறிகுறிகளை அனுபவித்தால், அவள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியாவுடன் தொடர்புடைய பல ஆபத்து காரணிகள் உள்ளன. அவை பின்வருமாறு
Article continues below advertisment
இதற்கு முன்பு கர்ப்பமாக இருந்த போது ப்ரீஎக்லாம்ப்ஸியா அல்லது பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியாவின் வரலாறு இருப்பது
டிவின்ஸ், டிரிப்லட்டுகள் அல்லது பல குழந்தைகளுடன் கர்ப்பமாக இருப்பது
ப்ரீஎக்லாம்ப்ஸியா அல்லது பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியாவின் குடும்ப வரலாற்றைக் கொண்டிருத்தல்
உடல் பருமன் அல்லது அதிகப்படியான எடையுடன் இருப்பது
உயர் இரத்த அழுத்தம் கொண்டிருப்பது
Article continues below advertisment
சர்க்கரை நோய் இருப்பது
எனவே, இந்த ஆபத்து காரணிகளில் ஏதேனும் ஒன்றை கொண்டவர்கள், கர்ப்பம் தரிப்பது அல்லது கருத்தரிப்பது பற்றி யோசிக்கும் முன் மருத்துவரிடன் ஆலோசிப்பது மிக மிக அவசியம். ஏனெனில், முக்கிய ஆபத்துகளைக் குறைப்பது எப்படி என்பதற்கான சில டிப்ஸ் மற்றும் கர்ப்பத்தை உன்னிப்பாகக் கண்காணிப்பதன் மூலம் அவர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.
பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா ஏற்படுவதற்கான சாத்தியமான காரணங்கள் பல இருக்கலாம். இருப்பினும் இதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை.
சாத்தியமான காரணங்கள் பின்வருமாறு
கர்ப்பமாக இருக்கும்போது நஞ்சுக்கொடியில் ஏற்படும் மாற்றம்
Article continues below advertisment
நஞ்சுக்கொடியில் உள்ள அசாதாரண இரத்த நாளங்கள்
நோய் எதிர்ப்பு அமைப்பில் பிரச்சினைகள்
மரபணு சார்ந்த காரணிகள்
ஏற்கனவே ப்ரீஎக்லாம்ப்ஸியா, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு அல்லது சிறுநீரக நோய் உள்ள பெண்களுக்கு பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இது பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியாவாக மாறுவதற்கு முன்பு அதை உடனடியாகக் சரிபார்ப்பது அவசியம்.
இந்த பிரச்சினையை இதற்கு முன் ஒருபோதும் அனுபவித்திருக்காத புதிதாக குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் இதற்கான அறிகுறிகளை அறிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா மற்றும் எக்லாம்ப்ஸியாவின் அறிகுறிகளை தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். இது மேலே குறிப்பிட்டுள்ளபடி, குழந்தையை பிரசவித்த ஒரு சில நாட்களில் இருந்து சில வாரங்களுக்கு இடையில் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். அறிகுறிகளின் விரிவான பட்டியல் இதோ,
Article continues below advertisment
உயர் இரத்த அழுத்தம்
கைகள், கால்கள் மற்றும் முகத்தில் வீக்கம்
சிறுநீரில் புரதச் செறிவின் அதிகரிப்பு
தாங்க முடியாத தலைவலி
குமட்டல் மற்றும் வாந்தி
Article continues below advertisment
குறைவாக சிறுநீர் கழித்தல்
மூச்சு விடுவதில் சிரமம்
விரைவான எடை அதிகரிப்பு
மங்கலான பார்வை அல்லது ஒளிக்கு உணர்திறன் போன்ற பார்வையில் ஏற்படும் திடீர், குறிப்பிடத்தக்க மாற்றங்கள்
விலா எலும்புக்கு அருகில் அடி வயிற்று வலி
Article continues below advertisment
எனவே, இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அனுபவித்தாலும் கூட, உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியம்.
குழந்தையை பிரசவித்த பிறகு சிறுநீரில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் புரதம் உள்ளதா என்பதைச் சோதிப்பதன் மூலம் பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா கண்டறியப்படுகிறது. ஒருவருக்கு பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா இருந்தால், அவர்களின் இரத்த அழுத்தம் 140/90 mmHg ஐ விட அதிகமாக இருக்கும். அவர்களின் சிறுநீரில் புரதமும் இருக்கும், அதை டிப்ஸ்டிக் சோதனை மூலம் கண்டறியலாம். சரியான இதற்கான நோயறிதல் செய்வது புதிதாக குழந்தை பெற்ற தாய்மார்களை பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா நோயிலிருந்து காப்பாற்றலாம். ஒருவேளை தாய்க்கு வலிப்பு ஏற்பட்டிருந்தால் சில சமயங்களில் மூளை ஸ்கேன் கூட செய்ய வேண்டி இருக்கலாம்.
சுருக்கமாக, பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியா என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய மிகவும் ஆபத்தான நிலை. சிகிச்சை அளிக்காமல் விட்டுவிட்டால், அது பிரசவத்திற்கு பிந்தைய ப்ரீஎக்லாம்ப்ஸியாவாக மாறும். இது ஒரு கடுமையான வலிப்பு நோயாகும். அதிர்ஷ்டவசமாக, இந்த அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெற உதவும் சிகிச்சைகள் உள்ளன. மேலும் தாய்மார்கள் ஆரோக்கியமான கர்ப்ப காலத்தை பெறவும், பிரசவத்திற்குப் பிறகு விரைவில் குணமடையவும் உதவும். கர்ப்பம் தொடர்பான சிக்கல்கள், தகவல் மற்றும் குறிப்புகள் பற்றி மேலும் அறிய, மைலோ ஃபாமிலி-இல் உள்ள எங்கள் பரந்த அளவிலான பதிவுகளை பார்வையிடவும்.
Yes
No
Written by
Chandrika Iyer
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | baby shampoo | baby lotion | baby powder | baby body wash | stretch marks cream | stretch marks oil | baby cream | baby massage oil | baby hair oil |