hamburgerIcon
login

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART

Article Continues below advertisement

  • Home arrow
  • Parenting Tips arrow
  • பணிபுரியும் பெற்றோர்களைப் பற்றி ஒரு விரிவான வழிகாட்டி(Working parents- A complete guide In Tamil ) arrow

In this Article

    பணிபுரியும் பெற்றோர்களைப் பற்றி ஒரு  விரிவான வழிகாட்டி(Working parents- A complete guide In Tamil )

    Parenting Tips

    பணிபுரியும் பெற்றோர்களைப் பற்றி ஒரு விரிவான வழிகாட்டி(Working parents- A complete guide In Tamil )

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    Article Continues below advertisement

    சில சமயங்களில், மாறிவரும் குடும்பக் கட்டமைப்புகள் பல பாலின சமத்துவமின்மை பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்! உண்மையில், சமூகம் தாய் மற்றும் தந்தையை தெளிவாக வேறுபடுத்தும் சில தடைகள் மற்றும் கட்டுப்பாடுகளை வைத்திருக்கின்றன. பணியிடத்திலோ அல்லது வீட்டிலோ கொண்டு வரப்படும் நிகழ்வுகள் மற்றும் எதிர்பார்ப்புகளின் மூலம் இந்த கட்டுப்பாடுகளை ஒருவர் எளிதாக கவனிக்க முடியும். பணிபுரியும் பெற்றோர்களின் போராட்டம் மற்றும் அது குழந்தையின் மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி மேலும் அறிய இந்தக் கட்டுரையைப் தொடர்ந்து படிக்கவும்.

    பெற்றோர் இருவரும் பணிபுரியும் போது அவர்களை என்னவென்று அழைப்பீர்கள்?(What Do You Call When Both Parents Are Working?In Tamil)

    பணிபுரியும் பெற்றோர்கள், ஒரு தொழில்முறை பணியைக் கொண்ட ஒரு தாய் மற்றும் ஒரு தந்தையை உள்ளடக்கியவர்கள். பெற்றோராக தங்கள் கடமைகளை விட்டுவிட்டு, அதற்குப் பதிலாக அவர்களின் தொழில்முறை கடமைகளில் வேலை செய்ய வேண்டுமா என்பது பற்றி, பொதுவாக பணிபுரியும் பெற்றோர்களைப் பற்றி நிறைய ஊகங்கள் செய்யப்படுகின்றன. ஆச்சரியம் என்னவென்றால், இல்லத்தரசிகள் மற்றும் இல்லத்தில் இருந்து பணிபுரியும் ஆண்களும், இன்று வேலைக்குச் செல்லும் பெற்றோர்களாகக் கருதப்படுகிறார்கள்!

    பணிபுரியும் பெற்றோரை பற்றிய சமூகத்தின் கருத்து என்ன?(What Is Society's Take On Working Parents?In Tamil)

    • பெரும்பாலான குடும்பங்களில், தந்தை பொதுவாக வேலைக்கு செல்பவராக இருக்கிறார், அதே சமயம் தாய், வீட்டிலிருந்து தனது குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார். உண்மையில், ஒரு இல்லத்தரசியின் கடமைகள், வீட்டின் மீது அதிக கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், பல திருமணமான தம்பதிகள் இருவரும் சம்பாதிப்பவர்களாகவும் உள்ளனர், அங்கு கணவன் மற்றும் மனைவி இருவரும் தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதைத் தவிர தங்கள் வீட்டை நடத்துவதற்கு குறிப்பிடத்தக்க தொகையை சம்பாதிக்கிறார்கள்.

    • காலப்போக்கில், குடும்பத்தின் ஒட்டுமொத்த அமைப்பு மற்றும் வேலை அட்டவணையில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பெற்றோரின் சம்பளம் மற்றும் நன்மைகளை மனதில் கொண்டு, வெளிப்பட்ட வேலை வாய்ப்புகள், வகைகளால் அடையாளப்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல், மொத்த அலுவலக நேரமும் மாறியது, இதனால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவிட அதிக நேரம் கிடைப்பதை உறுதி செய்தது.

    • பெற்றோரின் சிறந்த ஏற்பாடு பற்றி பலர் விவாதித்தாலும், பல பெற்றோர்கள் ஒரே ஒரு வருமான ஆதாரத்தில் வாழ முடியாது. இதனால், பல குடும்பங்கள் தங்களுடைய நிதித் தேவைகளுக்கு ஒருவரைச் சார்ந்திருப்பதும், செலவு செய்வதும் கடினம். எனவே, பல பெற்றோர்கள் பொதுவாக தங்கள் கடமைகளை தெளிவாகப் பிரிப்பதில்லை. சமூகத்தின் படி, ஒரு பெற்றோர் பராமரிப்பாளராகவும், மற்றவர் சம்பாதிப்பவராகவும் இருக்க வேண்டும்.

      Article continues below advertisment

    பணிபுரியும் பெற்றோராக இருப்பதால் கிடைக்கும் சில நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?(What Are Some Of The Pros As Well As Cons Of Working Parents?In Tamil)

    • பணிபுரியும் பெற்றோராக இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் தீமைகள் பவவற்றை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக வேலை கட்டமைப்பின் சிறந்த அமைப்பைப் பற்றி விவாதிக்கும் போது, பணிபுரியும் பெற்றோரின் நன்மை தீமைகளைப் பற்றி ஒருவர் நிச்சயமாக சிந்திக்க வேண்டும். பெற்றோர் இருவரும் பணிபுரியும் ஒரு குடும்பம் பொதுவாக நல்ல நிதி நிலையை அனுபவிக்கிறது.

    • இந்த நன்மை இறுதியில் அவர்களின் குழந்தைகளால் அனுபவிக்கப்படுகிறது, அவர்கள் விலைவாசி உயர்வால் ஏற்படும் நிதி அழுத்தத்தைப் பற்றி உண்மையில் கவலைப்பட வேண்டியதில்லை. குடும்பம் எவ்வளவு பணம் சம்பாதிக்கிறதோ, அந்தளவுக்கு சிறந்த தரமான தினப்பராமரிப்பு, கல்வி மற்றும் பள்ளிப்படிப்பு ஆகியவற்றை வழங்க முடியும்.

    • இதனால் பல குடும்பங்கள் தங்கள் குழந்தையின் கல்லூரி செலவுக்காகவும் சேமிக்க முடியும். இது தவிர, ஒரு நல்ல சுகாதார அமைப்பு, அதிக சுற்றுலா, பயணங்கள் மற்றும் மறக்கமுடியாத விடுமுறைகள் ஆகியவற்றையும் பணிபுரியும் பெற்றோரைக் கொண்டிருப்பத் பிறஆல் கிடைக்கும் சில நன்மைகள் ஆகும்.

    • மீண்டும், பணிபுரியும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அடிக்கடி பார்க்க முடியாத குற்ற உணர்ச்சியை அனுபவிக்க வேண்டியிருக்கும். பெற்றோர் இருவரும் பணிபுரியும் சூழலில் வளர்க்கப்படும் குழந்தைகள், தங்கள் வீடுகளில் உள்ள மற்ற வயதுவந்த நபர்களை மதிக்கவும், அவர்களுடன் பழகவும் கற்றுக்கொள்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் சமூகத்திடன் இணைந்து பழக மிக விரைவாக கற்றுக்கொள்கிறார்கள்.

    • தவிர, நல்ல தரமான தினப்பராமரிப்பு அமைப்பு, அவர்களை அவர்களின் சகாக்களுடன் இணைந்து இருக்க உதவுகிறது, இது அவர்களின் சமூக திறன்களை மேம்படுத்த உதவுகிறது. சில சமயங்களில், இதுபோன்ற சூழ்நிலைகள், பணிபுரியும் பெற்றோருடனான குழந்தையின் உறவை பாதிக்கும் ஆற்றலையும் கொண்டுள்ளது.

      Article continues below advertisment

    • வங்கிக் கணக்குகள் மூலம் கிடைக்கும் நன்மைகளைத் தவிர, பெற்றோர்கள் தங்கள் கடமைகளைச் சமமாகப் பகிர்ந்து கொள்ள முடியும் என்றும், அவர்களின் நீண்ட கால பிணைப்புக்கு இது வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். காலப்போக்கில், இது வீட்டில் நல்லிணக்கத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டுவரும். இருப்பினும், பணிபுரியும் பெற்றோர்கள், இணைந்து செயல்படுவது, செயல்பாடுகளை ஒழுங்கமைப்பது மற்றும் வீட்டில் மற்றும் தங்கள் குழந்தைகளின் பள்ளி நிகழ்வுகளில் ஒன்றாகச் செயல்படுவதும் முக்கியம்.

    பணிபுரியும் தாய் என்று யாரை குறிப்பிடுகிறோம்? Who Is A Working Mother?In Tamil)

    சமூகம் பொதுவாக பெண்களை வீட்டில் முழுநேர பராமரிப்பாளர்களாகவும், ஆண்களை குடும்பங்களுக்கு சம்பாதிப்பவர்களாகவும் இருக்க வைக்க விரும்புகிறது. இருப்பினும், உலகம் ஒவ்வொரு நாளும் அதன் உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளை மாற்றுகிறது, இறுதியில் ஒரு சிறந்த இடமாற்றத்தைக் கொண்டுவருகிறது. 2019 ஆம் ஆண்டில் அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகத்தால் பதிவுசெய்யப்பட்டபடி, அமெரிக்காவில் உள்ள குடும்பங்களில் சுமார் 64 சதவிகிதம், பெற்றோர்கள் இருவரும் பணிபுரியும் குடும்பங்களை உள்ளடக்கியது.

    பணிபுரியும் தாய் ஒரு குழந்தையின் வாழ்க்கையில் எப்படியான பாதிப்பை ஏற்படுத்துகிறார்?(How Does A Working Mother Affect A Child?In Tamil)

    • ஒரு பணிபுரியும் தாய் சில சமயங்களில் தங்கள் குழந்தையைப் பார்க்க இருப்பது அல்லது அவர்களுடன் நேரத்தைச் செலவிடாததைப் பற்றி நிறைய வருத்தம் கொள்ளலாம். குழந்தையும் ஒவ்வொரு முறையும் தன் தாயின் பக்கத்தில் இல்லாத நேரங்களை வீட்டில் பழகக் கற்றுக் கொள்ள வேண்டும். இது காலப்போக்கில் குழந்தைக்கு பெற்றோருடனான அணுகலைக் குறைக்கிறது.

    • ஒரு பணிபுரியும் தாய், பல பொறுப்புகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது! அவர், தனது பணிபுரியும் கணவருடன் சேர்ந்து, குழந்தைகளுக்கு தேவையனவற்றை வழங்குவதோடு, அவர்களின் தொழில்முறை அமைப்புகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும். சில நேரங்களில், பணிபுரியும் பெற்றோர்கள் தங்கள் வீடுகளை நிர்வகித்தல், பள்ளி வேலைகளில் தங்கள் குழந்தைகளுக்கு உதவுதல் மற்றும் பெற்றோருடன் தொடர்பைப் பேணுதல் போன்றவற்றுடன் தொடர்புடைய காணப்படாத மனஅழுத்தங்களால் சுமையாக உணருகின்றனர்.

    • இப்படியாக அவர்கள் ஏற்கனவே கவனித்துக் கொள்ள வேண்டிய முக்கிய பொறுப்புகளைக் கருத்தில் கொள்ளும்போது, அவர்களுக்கென்று ஒதுக்க அவர்களுக்கு நேரம் ஏதும் இருப்பதில்லை. பணிபுரியும் பெற்றோர் இருவரின் ஆரோக்கியமும், நலமும் கூட இதனால் ஆபத்தில் இருக்கக்கூடும்!

      Article continues below advertisment

    பணிபுரியும் பெற்றோரின் வாழ்வில் உள்ள முக்கிய சவால்கள் என்ன?(What Are The Major Challenges In The Lives Of Working Parents?In Tamil)

    எண்ணற்ற கவலைகள் பணிபுரியும் பெற்றோரை ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து சுமக்க வைக்கிறது. உங்களின் முக்கிய கேள்வி என்றால் - பணிபுரியும் பெற்றோர்கள் எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பதுதான், அதற்கு நீங்கள் பல சவால்கள் கருத்தில் கொள்ள வேண்டும். கருத்தைச் சிறப்பாகப் புரிந்துகொள்ள உதவும் சில சவால்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

    இதையும் படிக்கலாமே! - இல்லத்தரசி அல்லது ஹோம்மேக்கர் வேலை என்றால் என்ன?(What Is A Homemaker Occupation?In Tamil)

    வேலை-வீடு மோதல்(Work-home Conflict)

    • பணிபுரியும் பெற்றோர்களுக்கு பொதுவாக தங்கள் வீடு மற்றும் வேலை வாழ்க்கையை ஒரே நேரத்தில் சமநிலைப்படுத்துவது கடினமாக இருக்கும். உண்மையில், அவர்கள் வழியில் பல தடைகளை கடக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தங்கள் குழந்தைகளின் ஆன்லைன் பள்ளியை எளிதாக்குவது, வீட்டு வேலைகளைக் கவனித்துக்கொள்வது மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் அட்டவணையைத் திட்டமிடுவது ஆகியவை சவாலான பணி என்பதை இந்த தொற்றுநோய், பல பணிபுரியும் பெற்றோர்களுக்கு நிச்சயமாக உணர்த்தியது.

    • பல பணிபுரியும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான தினப்பராமரிப்புக்கான அணுகலைப் பெற தங்கள் வருமான ஆதாரத்தை தொடர்ந்து சார்ந்து இருக்க வேண்டும். தொற்றுநோய்களின் போது, தினப்பராமரிப்பு மற்றும் பள்ளிகள் மூடப்பட்ட போது, பணிபுரியும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான முக்கிய ஆதரவு அமைப்பை நம்புவது மிகவும் கடினமாக இருந்தது. எனவே, இது விஷயங்களை மிகவும் கடினமாக்கியது. பல நிறுவனங்கள் குறைவான பட்ஜெட் மற்றும் லாபம் காரணமாக தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்ததைக் கருத்தில் கொண்டு, பல பணிபுரியும் பெற்றோர்கள் தங்கள் வேலையை இழந்தனர், இது மேலும் பதற்றத்திற்கு வழிவகுத்தது!

    ஸ்டீரியோடைப்கள்(Stereotypes)

    • உண்மையில், பணிபுரியும் பெற்றோர்கள் தங்கள் வேலையில் கவனம் செலுத்துவதற்கு முன் பல பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். உண்மையில், இது மிகவும் சிறிய குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோருக்கு மிகவும் பொருந்தும், அவர்களுக்கு மிகவும் கவனிப்பு தேவைப்படும். சில நேரங்களில், பல பணிபுரியும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தொடர்ந்து கவனம் செலுத்துவது அவர்களின் அலுவலக வாழ்க்கைக்கும் இல்லற வாழ்க்கைக்கும் இடையில் பிளவை உருவாக்கக்கூடும் என்று பயப்படுகிறார்கள்.

      Article continues below advertisment

    • இருப்பினும், நிறுவனம் ஒரு திட்டவட்டமான வேலை-வீடு சமநிலை கலாச்சாரத்தை பின்பற்றினால், இந்த பிரச்சனையை கவனித்துக்கொள்ளலாம், பெற்றோர்கள் தங்கள் நேரத்தை சமநிலைப்படுத்த முடியும் என்பதை உறுதிசெய்தால், ஆரோக்கியமான இல்லற வாழ்க்கை மற்றும் அலுவலக நேரத்தில் அதிக உற்பத்தித்திரனும் இறுதியில் கிடைக்கும்.

    சோர்வு(Exhaustion)

    • ஒரு நிறுவனத்தில் பணிபுரிவதே மிகவும் சோர்வாக இருக்கும் என்ற உண்மையைக் கருத்தில் கொள்ளும்போது, பல நிறுவனங்களில் பணிபுரியும் போது ஏற்படும் சிரமங்களை ஒருவர் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. பல பணிபுரியும் பெற்றோர்கள் உலகின் பல பகுதிகளிலும் இந்த சூழ்நிலைகளை கடந்து செல்ல வேண்டியுள்ளது, இறுதியில் இரண்டு பணிபுரியும் பெற்றோருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு பெற்றோர் ஒரே நேரத்தில் பணியாளராகவும், ஆசிரியராகவும், பராமரிப்பாளராகவும் இருக்க வேண்டும்!

    • இறுதியில், பணிபுரியும் பெற்றோர்கள் இருவரும் அடிக்கடி மல்டி டாஸ்க் செய்ய வேண்டியிருப்பதால் சோர்வு உணர்வு ஏற்படுகிறது, மேலும் அவர்கள் தங்கள் சுய-கவனிப்பு வழக்கத்தை மேற்கொள்வதற்கு கூட நேரம் கிடைக்காமல் போகலாம். சுருக்கமாகச் சொன்னால், ஒரே நேரத்தில் அனைத்து வேலைகளையும் செய்து முடிக்க, ஒரு நாளில் வெறும் 24 மணிநேரங்களே உள்ளன!

    ஏற்ற இறக்கமான வேலை அட்டவணை(Fluctuating Work Schedule)

    • பல பணிபுரியும் பெற்றோர்கள் தங்கள் பணியிடங்களில் நெகிழ்வுத்தன்மையைக் காண்பதில்லை. உண்மையில், புதிய இடங்களுக்கு ஏற்ப அல்லது கூடுதல் வேலை நேரத்தை எடுத்துக் கொள்வதில் அவர்கள் தொடர்ந்து சிரமப்படுகிறார்கள். சில நேரங்களில், அதிக வேலை செய்வது, வழங்கப்படும் உள்ளீட்டின் தரத்தையும் குறைக்கலாம். அதுமட்டுமல்லாமல், ஒரு புதிய வேலை அட்டவணை தொடர்ந்து பெற்றோரை தூக்கமின்மை மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளின் அதிக ஆபத்தில் வைக்கிறது.

    • குழந்தை பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளுக்கு போதுமான நேரத்தை ஒதுக்கி, அவர்களின் ஏற்ற இறக்கமான வேலை அட்டவணைகளை சமநிலைப்படுத்த ஒருவர் கண்டிப்பாக முயற்சி செய்யலாம். இந்த வழியில், சோர்வு, மன அழுத்தம் மற்றும் சோர்வை சமாளிப்பது எளிதாக இருக்கும்.

      Article continues below advertisment

    வேலை வாய்ப்புகள்(Career Opportunities)

    • ஒவ்வொரு புதிய வேலையும், சரிசெய்தல், மாற்றம் மற்றும் கற்றல் ஆகியவற்றின் இடைவெளியுடன் இருக்கும். மீண்டும், மாற்றங்களைத் தொடர்ந்து கையாள்வது ஒரு தனிநபரின் தொழில் வளர்ச்சியைத் தடுக்கலாம். இவ்வாறு, ஒரு பணிபுரியும் பெற்றோர் பொதுவாக தங்கள் வாழ்க்கையின் வளர்ச்சியில் அவர்களுடைய பார்வையை வைத்திருக்க விரும்புகிறார்கள், மேலும் ஒரு நிலையான மாற்றம் இருந்தால், அது தொழில் வளர்ச்சி செயல்முறையைத் தடுக்கலாம்.

    • இந்த பெற்றோர்கள் தங்கள் சக ஊழியர்களிடமிருந்து பல்வேறு ஸ்டீரியோடைபிக்கல் கருத்துக்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், இதன் விளைவாக சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படலாம். இது அவர்களின் வீட்டுப் பொறுப்புகள், தங்கள் வேலைக் கடமைகளிலிருந்து அவர்களைத் திசைதிருப்புவதாக உணர வைக்கக்கூடும்.

    முடிவுரை

    அப்படிப்பட்ட பெற்றோரின் இன்றைய நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்தீர்களா? சில வார லாக் டவுன் எதிர்பாராத விதமாக இரண்டு வருட விதிகளாகவும் மக்கள் பின்பற்ற வேண்டிய கடுமையான வழிகாட்டுதல்கலாகவும் மாறியது. பணிபுரியும் பெற்றோரின் நிலை இன்று சிறப்பாக மாறிவிட்டது. நிறுவனங்களும் வேலை-வீடு சமநிலையின் முக்கியத்துவத்தைப் பற்றி அதிகம் அறிந்திருக்கின்றன. பணியாளருக்கு அதிக மனஅழுத்தம் கொடுக்காமல் அலுவலக உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கான வழிகளைத் தேடுவதற்கு அவர்கள் முயல்கின்றனர்.

    இருப்பினும், தொற்றுநோய்களின் போது, பல பணிபுரியும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை முழுநேரமாக கவனித்துக்கொள்வதற்காக தங்கள் வேலையை விட்டுவிட்டனர். உண்மையில், செப்டம்பர் 2020 இல் மேற்கொள்ளப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 860,000 க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் வேலையை விட்டுவிட்டு குடும்பப் பொறுப்புகளுக்காக தங்கள் நேரத்தை செலவிட நினைத்தனர். உண்மையில், பணிபுரியும் பெற்றோரின் வாழ்க்கை நிச்சயமாக மன அழுத்தம் நிறைந்ததாகவே இருக்கும். இருப்பினும், அலுவலகத்தில் சரியான பணி கலாச்சாரம் மற்றும் நெறிமுறைகள் இருந்தால், பணிபுரியும் பெற்றோர்கள் தங்கள் வாழ்க்கையில் பல தடைகளை கடப்பது உறுதி!

    Tags :

    Working parents in tamil, challenges for working parents in tamil, society’s look for working parents in tamil

    Article continues below advertisment

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Dhanalakshmi Pillai

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.