Get MYLO APP
Install Mylo app Now and unlock new features
💰 Extra 20% OFF on 1st purchase
🥗 Get Diet Chart for your little one
📈 Track your baby’s growth
👩⚕️ Get daily tips
OR
Article Continues below advertisement
Pregnancy Journey
3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
தாய்மைக்குத் தயாராக இருக்கும் பெண்கள் கருத்தரிப்பதைப் பற்றியும், கருமுட்டை வெளிவருவதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். கருமுட்டை வெளிவரும் சரியான நேரமானது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடும். எனவே, அவர்கள் கருமுட்டை வெளிவரும் அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு பாலியல் செயல்பாடுகளின் மூலமாக, கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம். ஒரு பெண் கர்ப்பமாக இல்லாவிட்டாலும் அல்லது கர்ப்பத்தைப் பற்றி எதுவும் திட்டமிடாவிட்டாலும் கூட, இவை அனைத்தையும் பற்றி அவர் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்தத் தலைப்பை ஆராய்வதற்கு முன்பு, கர்ப்பிணிப் பெண்களுக்கு கருமுட்டை வெளிவரும்போது, அவர்கள் கருமுட்டை வெளிவருவதைப் பற்றி கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்த செயல்பாட்டின்போது, ஒரு பெண்ணுக்கு (அவருக்கு குழந்தை பிறக்கும்போது அல்லது அவரின் இனப்பெருக்க வயதின்போது) தன்னுடைய கருப்பையில் இருந்து முதிர்ச்சியடைந்த முட்டை வெளிவரும். பின்னர் கருவுறுவதற்காக கருமுட்டையானது விந்து மூலமாக கருப்பைக் குழாயின் உள்ளே செல்லும். கருமுட்டை வெளிவருவதற்கான அறிகுறிகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:
கர்ப்பப்பை வாயில் இருந்து வெளிவரும் சளி போன்ற திரவத்தின் மாற்றம்
Article continues below advertisment
மார்பங்களில் வலி ஏற்படுதல் அல்லது மார்பகங்கள் மென்மையாக இருத்தல்
வாசனை உணர்வு அதிகரித்தல்
அடிவயிற்றுப் பகுதியில் லேசான வலி ஏற்படுதல்
பாலுணர்ச்சியில் ஏற்படும் மாற்றம்
லேசான இரத்தப்போக்கு ஏற்படுதல்
Article continues below advertisment
கர்ப்பபை வாயில் ஏற்படும் மாற்றம்
தலைவலி
குமட்டல்
சாதாரண உடல்வெப்பநிலையானது திடீரென்று அதிகரித்தல்
தொழில் நுட்ப ரீதியாக சொல்ல வேண்டுமென்றால், ஆமாம் என்று சொல்லலாம்! ஒரு பெண் தன்னுடைய செழிப்பான சாளரத்தின் மூலமாக உடலுறவு கொண்டால் கர்ப்பமடைவது நிச்சயம். அதாவது, கருமுட்டை வெளியேறும் நாளில் அல்லது கருமுட்டை வெளிவருவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு. இருந்தாலும், மனிதகுலத்தை ஆச்சரியப்படுத்துவதற்கு இயற்கைக்கு ஆயிரம் வழிகள் உள்ளன. இரட்டைக் கருவுறுதல் - ஒரு பெண் ஏற்கனவே குழந்தையை சுமந்து கொண்டிருக்கும்போது மற்றொரு கர்ப்பத்திற்கான கருத்தரித்தல் மற்றும் உட்பொருத்தல் – இதில் ஒன்றாக இருக்கும்.
Article continues below advertisment
எனக்கு கருமுட்டை வெளிவந்தால் - நான் கர்ப்பமாக இல்லை என்று அர்த்தமா? பெரும்பாலான பெண்கள் இதை நம்புகிறார்கள். ஏனெனில், கர்ப்பமானது மாதவிடாய் சுழற்சியை குறுக்கிடுகிறது. எனவே, பெண்கள் கருத்தரிக்கும்போது, அவர்களுடைய மாதவிடாய் நின்றுவிடும், அல்லது அவர்கள் குழந்தையை பிரசவிக்கும் வரை கருமுட்டை வெளிவருவது நின்றுவிடும். கருப்பையில் வளரும் கருவின் தேவைகளுக்கு இடமளிப்பதற்காக, அவர்களுடைய உடல்கள் இந்தவிதமான மாற்றங்களுக்கு உட்படுகின்றன. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், கர்ப்ப காலத்தில் கருமுட்டை வெளிவராது.
இருந்தாலும், மிகவும் விதிவிலக்கான சூழ்நிலைகளின் கீழ், ஒரு பெண் ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் போது கருமுட்டையானது வெளிவரும் என்று நியூயார்க் டைம்ஸின் சமீபத்திய கேள்வி பதிலானது இதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தனித்துவமான நிகழ்வு இரட்டை கருவுறுதல் என்று அழைக்கப்படுகிறது. எனவே, இரண்டு கருக்கள் ஒரே நேரத்தில் தாயின் உள்ளே வளரும் ஆனால் கருவின் வளர்ச்சியினாது வெவ்வேறு கட்டங்களில் மிகவும் சாத்தியமானதாக இருக்கும்.
ஒரு நிமிடம் இருங்கள்! குழப்பமடைவதற்கு முன்பு அல்லது பீதி நிலைக்குச் செல்வதற்கு முன்பு, இரட்டைக்கருவுறுதலானது முற்றிலும் அரிதானது என்பதை தெரிந்து கொள்வது நல்லது. சமீபத்தில் இரண்டு நிகழ்வுகள் ஒன்று டெக்சாஸிலும் மற்றொன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவிலும் இது மாதிரி நடந்துள்ளது என்று ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தெரிவித்துள்ளது.
அப்படியென்றால், நீங்கள் கர்ப்பமாக இருக்கும்போது இன்னமும் கூட உங்களுக்கு கருமுட்டை வெளிவருகிறதா? இரட்டைக் கருவுறுதலைப் பற்றி தெரிந்து கொண்ட பிறகு, பெரும்பாலான பெண்களுடைய மனதில் இந்தக் கேள்விகள் இருக்கும். தெளிவான பதிலுக்கு இங்கே படிக்கவும்!
மனிதர்களில் இது அசாதாரணமானது என்றாலும், கங்காருக்கள், குதிரைகள், பாலுண்ணிகள் மற்றும் முயல்கள் போன்ற பிற பாலூட்டிகளில் இரட்டைக் கருவுறுதல் மிகவும் பொதுவானது. சில நேரங்களில், இந்த விலங்குகளுக்கு இரட்டை கர்ப்பத்தை அனுமதிப்பதற்கு இரண்டு கருப்பைகள் உள்ளன. சில சந்தர்ப்பங்களில், கர்ப்ப காலத்தில் இந்த விலங்குகளின் மாதவிடாய் சுழற்சி நிற்காது.
Article continues below advertisment
இருந்தாலும், மனிதர்களில், பெண்கள் கருத்தரித்தவுடன், அவர்களுடைய மாதவிடாய் சுழற்சியானது நின்று மற்றொரு கர்ப்பத்தைத் தடுக்கிறது.
பொதுவாக, ஒரு பெண் கர்ப்பமாகிவிட்டால், அவளுடைய உடலானது கருமுட்டைகளை வெளியிடுவதை தடுத்து நிறுத்திவிடுகிறது. மற்றும் கர்ப்பத்தின் முழு வழிமுறை, உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் அனைத்தும், இரண்டாவது கர்ப்பத்தைத் தடுப்பதற்கு ஒன்றாகச் சேர்ந்து செயல்படுகிறது. மேலும், இது கர்ப்பத்திற்கான முழுமையான வழிமுறையாகும்.
இருந்தாலும், இரட்டைக்கருவுறுதலில், ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண் தொடர்ந்து கருமுட்டையை வெளியிடலாம். அதேசமயம், ஆண் விந்தணுக்கள் அந்த கருமுட்டையை கருவுறச் செய்து, மீண்டுமொரு உள்வைப்பை சாத்தியமாக்குகிறது. இருந்தாலும் இது ஒரு அசாதாரண நிகழ்வுதான்.
ஏற்கனவே கர்ப்பமாக இருக்கும் போது, பின்வரும் வெளித்தோற்றத்தில் சாத்தியமற்ற நிகழ்வுகள் நடந்தால் மட்டுமே மீண்டும் கருத்தரிக்கும் சாத்தியம் உள்ளது என்று அமெரிக்காவின் 2011 ஆம் ஆண்டிற்கான அறிவியல் அறிக்கை கூறுகிறது. மேலும், அந்த விஷயங்கள் என்னென்ன? என்பதைப் பார்ப்போம்:
பெண்கள் தங்களுடைய கர்ப்ப காலத்தில் கருமுட்டையை வெளியிடும்போது அல்லது கருமுட்டை வெளிவருவதற்கான அறிகுறிகளைக் காட்ட வேண்டும்.
Article continues below advertisment
கருவின் உட்பொருத்துதலை எளிதாக்குவதற்கு, விந்தணுக்கள் பாதுகாக்கப்பட்ட கருப்பையின் வாய் வழியாக ஏற்கனவே கருத்தரித்திருக்கும் கருப்பை வழியாக கருப்பைக் குழாய்களுக்குச் செல்ல வேண்டும்.
இரட்டைக் குழந்தைகளைப் பெறுவதில் இருந்து இரட்டைக்கருவுறுதல் எப்படி வேறுபடுகிறது?(How is superfetation different from having twins?In Tamil)
இரட்டைக் கருவுறுதல் என்பது இரட்டைக் குழந்தைகளில் இருந்து வேறுபட்டது. பெண்கள் இரட்டைக் குழந்தைகளில் ஏதாவது ஒன்றைப் பெற்றெடுக்கிறார்கள்:
கருவுற்ற முட்டை இரண்டாகப் பிரியும் போது
இரண்டு விந்தணுக்கள் ஒரே நேரத்தில் இரண்டு முட்டைகளை கருவுறச் செய்யும் போது
Article continues below advertisment
இருந்தாலும், இரட்டைக்கருவுறுதல் ஒரு பெண்ணுக்கு கூடுதல் கருவை உருவாக்குகிறது. இதன் வயதானது தற்போது இருக்கும் கருவை விட இரண்டு வாரங்கள் குறைவாக இருக்கும். 2008ல் ஐரோப்பாவின் மகப்பேறியல் மற்றும் மகளிருக்கான மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, மேலோட்டமான சந்தர்ப்பங்களில், இரண்டு கருக்களும் தனித்தனியாக கருசவ்வுப் பைகளில் வளரும் மற்றும் கர்ப்ப காலத்திலும் மற்றும் குழந்தை பிறந்த பிறகும் இவை வெவ்வேறு அளவுகளைக் கொண்டிருக்கும்.
இரட்டைக்கருவுறுதலுக்கான எண்ணிக்கை அரிதாக இருப்பதால், இதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள் மற்றும் ஆபத்திற்கான காரணிகள் என்ன என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இருந்தாலும், கருவுறுதலுக்கான சிகிச்சையை எடுத்துக் கொள்ளும் பெண்கள் இரட்டைக்கருவுறுதலுக்கு ஆளாகக்கூடும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இரட்டைக் கருவுறுதல் அரிதாக இருந்தாலும், இதன் மூலமாகப் பிறந்த பெரும்பாலான குழந்தைகள் நன்றாக வாழ்கின்றனர். மேலும், இந்தக் குழந்தைகள் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளாகவும் கூட இருக்கலாம்.
Yes
No
Written by
Avira Paraiyar
Get baby's diet chart, and growth tips
கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil
(2,844 Views)
30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil
(29,614 Views)
ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil
(1,197 Views)
பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil
(7,053 Views)
அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil
(1,683 Views)
பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil
(3,851 Views)
Mylo wins Forbes D2C Disruptor award
Mylo wins The Economic Times Promising Brands 2022
At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:
baby carrier | baby soap | baby wipes | stretch marks cream | baby cream | baby shampoo | baby massage oil | baby hair oil | stretch marks oil | baby body wash | baby powder | baby lotion | diaper rash cream | newborn diapers | teether | baby kajal | baby diapers | cloth diapers |