Getting Pregnant
22 February 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது
ஒரு குழந்தையை பெற்றெடுப்பதே ஒரு பெண்ணிற்கு அவளது வாழ்வின் வரப்பிரசாதம். சிலர் தங்கள் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும் மகத்தான வாய்ப்பை பெறுகின்றனர். துரதிர்ஷ்டவசமாக, இரட்டை குழந்தைகளை கருத்தரிப்பது என்பது நம் கையில் இல்லை. ஏனெனில், பெரும்பாலும் அது எதிர்பாராதவிதமாக நடப்பதே. சில மூலிகைகளை உட்கொள்வது மற்றும் குறிப்பிட்ட உடலுறவு நிலைகள் போன்றவற்றின் மூலம் பெண்கள் இரட்டை குழந்தைகளை எப்படி கருத்தரித்தல் என்பதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தலாம்.
ஒரு விந்தணு ஒரு முட்டையை கருவுறச் செய்து, பின்னர் இரண்டு தனித்துவம் வாய்ந்த கருக்களாக பிரிவதினாலேயே ஒரு பெண்ணால் ஒரே மாதிரியான இரட்டை குழந்தைகளை கருத்தரிக்க முடிகிறது. இந்த இரட்டை குழந்தைகள் ஒரே மரபணு கூறுகள் மற்றும் மரபணு அமைப்புகளையும் கொண்டுள்ளனர். கூடுதலாக, ஒத்த உருவமுள்ள இரட்டையர்கள் நஞ்சுக்கொடியைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
உடன்பிறப் பிரட்டையர்களுக்கான சில நிலையான அம்சங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை என்றாலும், ஒரே பெற்றோருக்குத் தனித்தனியாகப் பிறக்கும் மற்ற பிள்ளைகளிடத்தில் இருக்கும் ஒற்றுமையையே இவர்களும் கொண்டிருக்கின்றனர். எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு உடன்பிறப் பிரட்டைப் பிள்ளைகளும் அவரவருடைய அதாவது தனித்தனி நஞ்சுக்கொடியைக் கொண்டிருப்பார்கள்.
குழந்தைப்பேறுக்காக காத்திருக்கும் பல ஜோடிகளின் கனவு இயற்கையாக இரட்டையர்களைக் கருத்தரிப்பதே. 250ல் 1 ஜோடிக்கே இரட்டையர்களை கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. இருப்பினும், அவ்வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பெண்கள் சில விஷயங்களைச் செய்யலாம்.
முதலாவதாக, தனது குடும்ப வகையில் இரட்டையர்கள் இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை அவர்களது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு இரட்டையர்கள் இருந்தால், இரட்டையர்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கர்கள் போன்ற சில இனக் குழுக்களிலும் இரட்டை குழந்தைகள் பிறப்பது மிக சாதாரணமாக இருக்கிறது.
35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இரட்டையர்களை கருத்தரிப்பதற்கான அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஏனெனில், சிறு வயதுடைய பெண்கள் பெரும்பாலானோருக்கு அண்டவிடுப்பின் போது ஒன்றுக்கு மேற்பட்ட முட்டைகள் வெளியிடுப்படுகிறது.
ஒரு சில மருத்துவ நிலைகளும் இரட்டை குழந்தைகளை கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும். எடுத்துக்காட்டாக, பெண்களுக்கு பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்/PCOS) இருப்பின், பெண்கள் இரட்டையர்களை கருத்தரிக்க அதிக வாய்ப்புள்ளது. கருப்பையில் நீர்க்கட்டிகள் உருவாக காரணமாக இருக்கும் நிலை பி.சி.ஓ.எஸ்/PCOS எனப்படுகிறது.
மனிதர்களுக்கு இயற்கையாகவே இரட்டைக் குழந்தைகளை கருத்தரித்தலுக்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்திய மருத்துவ செய்தியில், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கருக்களை கருத்தரிப்பது மிக பொதுவானதாக இருப்பதாகவும், ஆனால் அதில் ஒன்று மட்டுமே உயிர்வாழ்வதாகவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பெண்கள் விரும்ப்பபடி இரட்டையர்களை கருத்தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கும் பல காரணிகள்:
இரட்டை மரபணு கொண்ட குடும்பங்களில் இரட்டை குழந்தை பிறப்பது பொதுவானது. தனது குடும்பத்தில் பல இரட்டையர்களைக் கொண்ட தாயிக்கும் இரட்டையர்களே பிறக்கின்றனர்.
பொதுவாக வயது முதிர்ந்த பெண்களுக்கு உடன்பிறப் பிரட்டைப் பிள்ளைகள் பிறக்கும். ஏனென்றால், 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகம் ஃபோலிக்கல்-தூண்டும் ஹார்மோன் (எஃப்.எஸ்.எச்/FSH) உற்பத்தி ஆகிறது.
கர்ப்ப காலத்தில் இரட்டையர்களைக் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆரம்ப கர்ப்பத்திற்குப் பிறகு கருவுற்ற முட்டைகளை பராமரிப்பதற்கு ஏதுவாக உடலின் திறன் மேம்படுகிறது.
வெள்ளையர்கள் மற்றும் ஆப்பிரிக்கர்கள் அதிக அளவு இரட்டையர்களை பெற்றெடுப்பது கவனிக்கப்பட்டுள்ளது. ஹிஸ்பானிக் மற்றும் ஆசிய மக்கள்தொகையில் இரட்டையர்களை கருத்தரிக்கும் எண்ணிக்கை குறைவே.
ஒல்லியான பெண்களை விட உயரமான மற்றும் பருமனான பெண்களுக்கே உடன்பிறப் பிரட்டையர்களை பெறும் வாய்ப்புகள் அதிகம் என்று ஆராய்ச்சி குறிப்பிட்டுள்ளது.
இரட்டையர்களைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் விருப்பங்கள் பின்வருமாறு:
பால் பொருட்களை உண்ணும் பெண்கள் இரட்டையர்களைப் பெற்றெடுப்பதற்கான அதிக வாய்ப்புள்ளது. சில விஞ்ஞானிகளின் பசும் பால் கொடுக்கும் வளர்ச்சி ஹார்மோன்கள் இரட்டையர்களின் உருவாக்கத்திற்கு உதவும் என குறிப்பிட்டுள்ளனர்.
இது கருப்பை செயல்பாட்டை தூண்டுவதற்கு உதவுகிறது, அத்துடன் அதிக முட்டைகளின் வெளியீட்டையும் ஊக்குவித்து அண்டவிடுப்பின்(ஓவுலேஷன்) வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதன் விளைவினால் இரட்டையர்களை கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகரிக்கக்கூடும். ஆப்பிரிக்க இனத்தை சேர்ந்த பெண்கள் அவர்களின் பாரம்பரிய உணவு வகைகளை உட்கொள்வதால், அவர்களுக்கு இரட்டையர்கள் பிறப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.
இயற்கையாகவே இரட்டையர்களை கருத்தரிக்க வேண்டும் என்று ஒரு பெண் விரும்பினால் கட்டாயம் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்தாமல் இருப்பது முக்கியம். ஒரு பெண் கருத்தடை மாத்திரையை உட்கொள்வதை நிறுத்தும்போது, உடல் சாதாரண சுழற்சிக்கு ஏற்றார் போல் அதனை சீர்செய்துக்கொள்ள வேண்டும். இது உடலில் வழக்கத்தை விட சிறந்த ஹார்மோன் பாய்மத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இது இரட்டையர்களைப் பெறுவதற்கான மிகவும் சாத்தியமான நிகழ்தகவை ஏற்படுத்துகிறது என்றால் மிகையாகாது.
பெண்கள் தனது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டும் போது கர்ப்பமடைந்தால், இரட்டையர்களைப் கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகரிக்கும். தாய்ப்பால் கொடுப்பதினால் பெண்களின் உடலமைப்பில் உள்ள கூடுதல் புரோலேக்டின் இரட்டைக் குழந்தைகளின் பிறப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
இரண்டு குழந்தைகளின் கர்ப்பங்களுக்கு இடையில் இருக்கும் ஆரோக்கியமற்ற இடைவெளி இரட்டைக் குழந்தையை பெறுவதற்கான முரண்பாடுகளை அதிகரிக்கும். எனவே, ஒவ்வொரு கர்ப்பத்திற்கு இடையில் போதுமான இடைவெளி இருத்தல் வேண்டும். விரைவாக கருத்தரித்தல் இரட்டையர்களை கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை குறைக்கும். அதனால், அதில் அதிக கவனம் செலுத்வது அதிகம்.
பச்சை இலை காய்கறிகள், ஆய்ஸ்டர்ஸ், ரொட்டி மற்றும் விதைகள் போன்ற துத்தநாகம் நிறைந்த உணவுகள், ஆண்களுக்கு அதிக விந்தணுக்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன. அதுமட்டுமின்றி கூடுதல் முட்டைகளை கருவுறச் செய்வதற்கான வாய்ப்பையும் பெறுகின்றன.
இந்த உடலுறுவு நிலைகள் இரட்டையர்களை கருத்தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கலாம்:
இந்நிலையில் பெண் நான்கு கால்களில் குனிந்து இருக்கும் போது ஆண் பின்புறத்தில் இருந்து புணர்ச்சியில் ஈடுபட வேண்டும். இது “டாகி ஸ்டைல்” என அழைக்கப்படுகிறது. இந்நிலையில் பெண்ணின் கருப்பைவாய் நன்றாக விரிந்து திறக்கப்படுவதால் அது விந்தணுக்கள் மிக எளிதாக கருமுட்டையை அடைய வழிவகுத்து இரட்டையர்களை கருத்தரிப்பதை சாத்தியமாக்குகிறது.
உடலுறுவு கொள்தல் என்பது ஆழமான ஊடுருவலை கொண்ட இன்னொரு டாகி ஸ்டைல்.
ஒரு பெண் கீழே அவளது முதுபுறம் கீழ் படும் படி படுத்து அவளது மேல் ஆண் புணர்ச்சியில் ஈடுபடும் நிலை, இது ஆழமான ஊடுருவலை ஏற்படுத்தும். இரட்டையர்களை கருத்தரிப்பதற்கு ஏற்ற உடலுறவு முறை.
இந்த சூழ்நிலையில், உங்கள் வாழ்க்கைத்துணை பின்னாலிருந்து புணர்ச்சியில் ஈடுபடுவதால் விந்து பெண்ணின் கருப்பை வாய்க்கு மிக அருகில் வெளியிடப்படும்.
கருவுறுதலுக்கான சிகிச்சைகள் இரட்டையர்களை கருத்தரிப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கக்கூடும். கருவுறுதல் நிபுணர்களால் சிறந்த மருந்தை பரிந்துரைக்க முடியும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைப் பெற கருவுறுதல் சிகிச்சைகள் பயன்படுத்தப்படக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஐவிஎஃப்/IVF செய்துக்கொண்ட ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்டிருக்கும் வாய்ப்பு 20-40% உள்ளது. அது உண்மைதான், ஆனால் இவை அனைத்தும் கருப்பையில் பொருத்தப்பட்டிருக்கும் கருக்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது. ஐவிஎஃப்/IVF போன்ற கருவுறுதல் சிகிச்சைகளைப் பயன்படுத்தும் தம்பதிகளுக்கு இரட்டையர்களை கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இந்த செயல்முறையின் போது, விந்தணுக்கள் ஒரு சிரிஞ்ச் வழியாக கருப்பைக்குள் செலுத்தப்படுகின்றன. IUI இரட்டை குழந்தைகளின் பிறப்பிற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இந்த சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் பெண்களுக்கு கர்ப்பத்தின் வாய்ப்புகளை மேம்படுத்த கருவுறுதல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இதையும் படிக்கலாமே! - கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?
கர்ப்ப காலத்தில் இரட்டைக் குழந்தையைப் பெறுவதற்கான நிரூபிக்கப்பட்ட முறைகள் எதுவும் இல்லை; இவ்வகை கருத்தரித்தலின் சாத்தியக்கூரை அதிகரிக்கும் பல காரணிகள் இருக்கின்றன. இரட்டையர்களை கர்ப்பம்தரித்திருப்பதை பல அறிகுறிகளால் தெரிந்துக்கொள்ளலாம். இதில் ஏற்படும் மார்னிங் சிக்னஸ் மிகவும் கடுமையானது, அத்துடன் விரைவாக எடை அதிகரிக்கும். எல்லாவற்றிற்கும் மேல் வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் ஆரோக்கியமான கர்ப்பத்திற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
Yes
No
Written by
gajalakshmiudayar
gajalakshmiudayar
கர்ப்பக்காலத்தில் நெஞ்செரிச்சல் - விரைவாக நிவாரணம் பெறுவது எப்படி?
கர்ப்பத்தின் போது ரூபெல்லா( IgG) பாஸிடிவ் காரணங்கள் ,அறிகுறிகள் மற்றும் சிகிச்சைகள்
தாமதமாக கருத்தரித்தல் காரணங்கள் மற்றும் தெரிந்து கொள்ள வேண்டியவை
கருப்பையக கருவூட்டல் மூலம் கர்ப்பமாவதற்கான வாய்ப்புகள் யாவை?
பெண்களுக்கான கருத்தடை உறைகளை சரியாகப் பயன்படுத்துவது எப்படி?
கர்ப்பம் தரிக்க எவ்வளவு காலம் ஆகும்?
100% Secure Payment Using
Stay safe | Secure Checkout | Safe delivery
Have any Queries or Concerns?
Trusted by 10+ million young parents Mylo is India’s #1 Pregnancy & Parenting App. Mylo app will guide you through your whole parenting journey. Download now
Ayurvedic Uneven Skin Tone Products | Ayurvedic Hairfall & Damage Repair Products | Ayurvedic Pain Relief Oil | Ayurvedic Massage Oil | AYURVEDIC CARE PRODUCTS - SHOP BY RANGE | AYURVEDIC CARE PRODUCTS - COMBOS | KUMKUMADI COMBO | UBTAN COMBO | Baby | Disposable Diapers | Baby Wipes | Baby Creams & Lotions | Baby Swaddle Wraps | Reusable Cloth Diapers | Newborn Winter Wear | Baby Carriers | Antibacterial socks | Baby Shampoo | Baby Clothes | Mustard Pillows |