hamburgerIcon
login
STORE

VIEW PRODUCTS

ADDED TO CART SUCCESSFULLY GO TO CART
  • Home arrow
  • கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் 150 மாத்திரையை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா?(Is It Safe To Take Ecosprin 150 In Pregnancy in Tamil) arrow

In this Article

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் 150 மாத்திரையை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா?(Is It Safe To Take Ecosprin 150 In Pregnancy in Tamil)

    Pregnancy

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் 150 மாத்திரையை எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா?(Is It Safe To Take Ecosprin 150 In Pregnancy in Tamil)

    3 November 2023 அன்று புதுப்பிக்கப்பட்டது

    ஈகோஸ்ப்ரின் 150 மாத்திரை (Ecosprin 150 Tablet) என்பது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் மார்பு வலி போன்றவற்றைச் சமாளிப்பதற்கும் தடுப்பதற்கும் பயன்படுத்தப்படும் ஒரு பிளேட்லெட் மருந்தாகும். இது உங்கள் இரத்த நாளங்களில் இரத்தக் கட்டிகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், இதயம் சார்ந்த நோய்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் பொதுவாகப் பயன்படுகிறது.

    இது வலி மற்றும் காய்ச்சலைக் குறைக்கவும் அல்லது எந்த வகையான வீக்கத்தையும் குணப்படுத்தவும் பயன்படுகிறது. வலி, காய்ச்சல், வீக்கம் அல்லது இரத்தக் கட்டிகளை ஏற்படுத்தும் உடலில் உள்ள கலவைகளின் உருவாக்கத்தைத் தடுப்பதன் மூலம் இது செயல்படுகிறது.

    புராடக்ட் அறிமுகம் (Product Introduction in Tamil)

    ஈகோஸ்பிரின் 150 மாத்திரைகள் உணவுடன் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இல்லையெனில், அது வயிற்றுப்போக்கை ஏற்படுத்தலாம். நீங்கள் எதற்காக எடுத்துக்கொள்கிறீர்கள் மற்றும் உங்கள் அறிகுறிகளுக்கு எவ்வளவு உதவுகிறது என்பதைப் பொறுத்தது அளவு பரிந்துரைக்கப்படுகிறது. உங்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் இதை எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

    இந்த மருந்தின் மிகவும் பொதுவான பக்க விளைவுகள் நெஞ்செரிச்சல், வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி. இந்தப் பக்க விளைவுகள் தீவிரமாக இருக்காது, ஆனால் நீங்கள் அதைப்பற்றி கவலைக்கொண்டால், அவற்றைக் குறைப்பது அல்லது தடுப்பது பற்றி உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும். இந்த மருந்து சில சமயங்களில் கூடுதல் இரத்தப்போக்கு ஏற்பட வழிவகுக்கலாம்.

    அதை உட்கொள்ளும் முன், உங்கள் இரத்தம் சரியாக உறையாமல் இருந்தாலோ அல்லது உங்கள் வயிற்றில் அல்லது குடலிலோ புண் அல்லது இரத்தப்போக்கு போன்ற நீடித்த சூழ்நிலை ஏற்பட்டிருந்தால் உங்கள் மருத்துவரை அணுகவும். மேலும், உங்களுக்கு கல்லீரல் அல்லது சிறுநீரகத்தில் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம் அல்லது ஆஸ்துமா இருந்தால் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும். நீங்கள் வேறு ஏதேனும் மருந்துகளை உட்கொண்டால், உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும், ஏனெனில் அவை பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் கர்ப்பிணிப் பெண்களும் சிகிச்சைக்கு முன் மருத்துவரை அணுகுவது நல்லது. கர்ப்பத்தின் கடைசி டிரைமெஸ்டரிலும் தாய்ப்பால் கொடுக்கும் போதும் இது பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை. இந்த மருந்தை உட்கொள்ளும் போது மது அருந்த வேண்டாம்.

    ஈகோஸ்பிரின் மாத்திரையின் பயன்கள் (Uses Of Ecosprin Tablet in Tamil)

    1. இதயம் தொடர்பான மார்பு வலியைத் தடுக்கிறது

    2. மாரடைப்புக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு

    3. பக்கவாத்திற்கான சிகிச்சை மற்றும் தடுப்பு

    4. காய்ச்சல் மற்றும் வீக்கத்திற்கான சிகிச்சை

    ஈகோஸ்பிரின் மாத்திரையின் நன்மைகள் (Benefits Of Ecosprin Tablet in Tamil)

    ஆஞ்சினா தடுப்பு: ஈகோஸ்ப்ரின் 150 மாத்திரை இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது மற்றும் இரத்தக் கட்டிகள் உருவாகும் அபாயத்தைக் குறைக்க குறைந்த டோஸ் கொண்ட மாத்திரைகள் உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இது பிளேட்லெட்டுகள் ஒன்றாக ஒட்டிக்கொள்வதைத் தடுக்கிறது, இதனால் ஆபத்தான இரத்த உறைவு உருவாவது தவிர்க்கப்படுகிறது. இது மாரடைப்பு, பக்கவாதம் அல்லது இரத்த நாளங்களில் ஏற்படும் பிற அடைப்புகளைத் தடுக்க உதவுகிறது. இவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்க, இருதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவரால் தவறாமல் பரிந்துரைக்கப்படுகிறது.

    மாரடைப்புக்கான சிகிச்சை மற்றும் தடுப்பு: ஈகோஸ்பிரின் 150 மாத்திரை இரத்த நாளங்களில் இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுக்கிறது, இதனால் எதிர்காலத்தில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது. அதிக டோஸ் அளவு, இது மாரடைப்பு அல்லது இரத்த உறைவு காரணமாக ஏற்படும் பக்கவாதத்தைத் தடுக்க உதவுகிறது. இது இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்வதையும், அது பெரிதாக விரிவடைவதையும் தடுக்கும் இரத்த உறைவை சரிசெய்கிறது.

    ஈகோஸ்பிரின் பக்க விளைவுகள்(Side Effects Of Ecosprin in Tamil)

    உங்கள் உடல் மருந்துக்கு ஒத்துழைக்கும்போது பெரும்பாலான பக்க விளைவுகள் காலப்போக்கில் மறைந்துவிடும். இதற்கு தீவிர மருத்துவக் கண்காணிப்பு தேவையில்லை. அறிகுறிகள் தொடர்து இருப்பதன் காரணமாக உங்களுக்கு கவலை ஏற்பட்டால், உங்கள் மருத்துவரை அணுகவும். இதன் பக்க விளைவுகள் பின்வருமாறு:

    1. நெஞ்செரிச்சல்

    2. வயிறு அல்லது குடலில் கடுமையான இரத்தப்போக்கு

    3. மூச்சு விடுவதில் சிரமம்

    4. வயிற்றுக்கோளாறு

    5. வாந்தி

    6. சரும தடிப்புகள்

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் (Ecosprin During Pregnancy in Tamil)

    ஈகோஸ்பிரின் என்பது இரத்தத்தை உறையாமல் தடுக்கும் மருந்தாகும். குறைந்த டோஸ் ஈகோஸ்பிரின் மாத்திரையை தினமும் உட்கொள்வது, முன்பு கருச்சிதைவுகளை அனுபவித்தவர்களுக்கு கர்ப்ப கால விளைவுகளில் முன்னேறத்தை ஏற்படுத்தும் என்று சில ஆராய்ச்சிகள் கண்டறிந்துள்ளன. இது நஞ்சுக்கொடிக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல் (ப்ரீக்ளாம்ப்சியா) மற்றும் ஆன்டிபாஸ்போலிப்பிட் நோய்க்குறிக்கு எதிராக உதவும். இந்த இரண்டு நிலைகளும் கர்ப்பத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். ஆபத்தை உணர்ந்து அனைத்து சோதனை அறிக்கைகளுடன் முதலில் மருத்துவரை அணுகுவது நல்லது.

    சில ஆய்வுகள் கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவது பாதுகாப்பற்றது என்று காட்டுகின்றன, ஏனெனில் கருச்சிதைவு ஏற்படும் அபாயத்திற்கான சான்றுகள் உள்ளன. இது ரெய்ஸ் சிண்ட்ரோம் (குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு ஏற்படும் ஒரு அரிதான ஆனால் கடுமையான நிலை, மூளை மற்றும் கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது).

    ஈகோஸ்பிரின் 75 மாத்திரை கர்ப்ப காலத்தின் கடைசி டிரைமெஸ்டரில் கருவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் பரிந்துரைக்கப்படுவதில்லை.

    உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட மருத்துவ பிரச்சனைகள் இல்லாவிட்டால் கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் பொதுவாக பரிந்துரைக்கப்படுவதில்லை. இருப்பினும், குறைந்த டோஸ் கொண்ட ஈகோஸ்பிரின் 60-100 மில்லிகிராம் மாத்திரைகள் கர்ப்ப காலத்தில் தீங்கு விளைவிப்பதில்லை, மேலும் தொடர் கருச்சிதைவுகள், உறைதல் கோளாறுகள் மற்றும் ப்ரீக்ளாம்ப்சியாவின் வரலாற்றைக் கொண்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு பரிந்துரைக்கப்படலாம்.

    இருப்பினும், அதிக டோஸ் அளவு கொண்ட ஈகோஸ்பிரின் மாத்திரை கர்ப்பத்தின் கால கட்டத்தைப் பொறுத்து சில அபாயங்களை ஏற்படுத்துகிறது. முதல் டிரைமெஸ்டரில், அதிக டோஸ் கொண்ட மாத்திரையை உட்கொள்வது ககருச்சிதைவு மற்றும் பிறவி குறைபாடுகளுக்கு வழிவகுக்கிறது. மூன்றாவது டிரைமெஸ்டரில் குறைமாத பிரசவத்தில் பிறந்த குழந்தையின் மூளையில் இரத்தப்போக்கு, குறைந்த எடையுடன் பிறப்பது மற்றும் இறந்த பிறப்பதால் குழந்தையை இழக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது. உங்கள் தேவைகளைப் பொறுத்து, மருத்துவர் ஈகோஸ்பிரினைப் பயன்படுத்த பரிந்துரைக்கலாம் அல்லது பரிந்துரைக்காமல் இருக்கலாம். பிறக்காத குழந்தைகளுக்கு சிறுநீரகக் கோளாறுகளையும் ஏற்படுத்தலாம். இது குறைந்த அளவு அம்னோடிக் திரவம் குழந்தையைச் சூழ்வதற்கு வழிவகுக்கும், மேலும் இது கடுமையான சிக்கல்களையும் ஏற்படுத்தும். ஈகோஸ்பிரின் என்எஸ்ஏஐடி (NSAID) மருந்து வகையைச் சேர்ந்தது. இதை கர்ப்ப காலத்தில் 29 வாரங்களுக்குப் பிறகு உட்கொள்ளக்கூடாது, ஏனெனில் இது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும்.

    ஈகோஸ்பிரின் மாத்திரையை எவ்வாறு பயன்படுத்துவது? (How To Use Ecosprin Tablet in Tamil)

    உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி, பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் மருந்தை எடுத்துக் கொள்ளுங்கள். மருந்தை மெல்லவோ, நசுக்கவோ அல்லது உடைத்து அதை முழுவதுமாக விழுங்கவோ கூடாது. உணவு உட்கொண்ட பிறகு மட்டுமே மருந்தை உட்கொள்ள வேண்டும். எகோஸ்பிரின் 150 மாத்திரையை உட்கொள்ளும் அளவு மற்றும் வழக்கம் பின்வரும் காரணிகளைப் பொறுத்தது:

    1. நோயாளியின் வயது

    2. நோயாளியின் ஆரோக்கியம்

    3. நோயாளியின் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் நிலை

    4. மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் மருந்துகள் மற்றும் பயன்படுத்தப்படும் பிற மருந்துகள்

    ஈகோஸ்பிரின் 150 மாத்திரையைப் பயன்படுத்தும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கைகள்(Precautions While Using Ecosprin 150 in Tamil)

    பின்வருபவை உட்பட ஈகோஸ்பிரின் 150 மாத்திரையைப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் மருத்துவ மற்றும் சுகாதார வரலாற்றை உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்கவும்:

    1. ஸ்டெராய்டல் அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளுக்கு (NSAIDகள்) ஒவ்வாமை

    2. ஏதேனும் இரத்த உறைதல் கோளாறு

    3. அஜீரண வரலாறு

    4. கடுமையான இதயம், சிறுநீரகம் அல்லது கல்லீரல் நோய்

    5. வயிற்றுப் புண்

    ஈகோஸ்பிரின் 150 மாத்திரையைப் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு சுவாசிப்பதில் சிரமம், மூக்கு ஒழுகுதல், தோல் அரிப்பு அல்லது வீக்கம் ஏற்படலாம்.

    முடிவுரை(Conclusion)

    ஈகோஸ்பிரின் 150 மாத்திரை எதிர்காலத்தில் மாரடைப்பு மற்றும் இரத்த உறைவு தொடர்பான பக்கவாதம் போன்றவை ஏற்படாமல் தவிர்க்க உதவுகிறது. குறைந்த அளவு பக்கவிளைவுகளுடன் மாரடைப்பைத் தடுக்க குறைந்த டோஸ் மாத்திரை உதவுகிறது. வயிறு உபாதைகளைத் தவிர்க்க உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மாத்திரைகளை உட்கொண்ட பிறகு நீங்கள் இரத்தப்போக்கால் எளிதில் பாதிக்கப்படலாம், எனவே கூர்மையான பொருட்களைப் பயன்படுத்தும்போது கவனமாக இருங்கள். உங்கள் காதுகளில் ஏதேனும் சத்தம், அசாதாரண இரத்தப்போக்கு, குமட்டல் அல்லது வாந்தி இருந்தால், உடனடியாக உங்கள் மருத்துவரை அணுகவும்.

    குறிப்பு (Reference)

    1. Van Doorn R, Mukhtarova N, Flyke IP, Lasarev M, Kim K, Hennekens CH, Hoppe KK. (2021). Dose of aspirin to prevent preterm preeclampsia in women with moderate or high-risk factors: A systematic review and meta-analysis. PLoS One

    2. Kumar N, Das V, Agarwal A, Pandey A, Agrawal S, Singh A. (2020). Pilot Interventional Study Comparing Fetomaternal Outcomes of 150 mg Versus 75 mg Aspirin Starting Between 11 and 14 Weeks of Pregnancy in Patients with High Risk of Preeclampsia: A Randomized Control Trial. J Obstet Gynaecol India.

    Is this helpful?

    thumbs_upYes

    thumb_downNo

    Written by

    Avira Paraiyar

    Get baby's diet chart, and growth tips

    Download Mylo today!
    Download Mylo App

    RECENTLY PUBLISHED ARTICLES

    our most recent articles

    Image related to Medications

    Medications

    கர்ப்ப காலத்தில் ஈகோஸ்பிரின் மாத்திரையை எடுத்துக் கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்படுமா?| Are There Any Side Effects Of Taking Ecosprin In Pregnancy in Tamil

    Image related to Pregnancy Tests

    Pregnancy Tests

    30 நாட்களில் கர்ப்பம் உறுதி செய்ய முடியுமா?|Can pregnancy be confirmed in 30 days in Tamil

    Image related to Conception

    Conception

    ஐ.யூ.ஐ (IUI) (கருப்பைக்குள் விந்தணுவைச் செலுத்துதல்) என்பது வலி நிறைந்ததாக இருக்குமா? | Is IUI (Intra Uterine Insemination) Painful in Tamil

    Image related to Home Remedies

    Home Remedies

    பச்சிளங் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் மற்றும் சளிக்கான 10 வீட்டு வைத்தியங்கள்-10 Home Remedies For Cough And Cold In Toddlers in Tamil

    Image related to undefined

    அண்டவிடுப்பின் காலம் - மிகவும் வளமான சாளரம், கர்ப்பத்திற்கான தடையைத் திறக்கவும் |Ovulation Period-The Most Fertile Window, Open the Roadblock to Pregnancy in Tamil

    Image related to Love, Sex & Relationships

    Love, Sex & Relationships

    பாலியல் உறவுக்குப் பிறகு கர்ப்பம் அடைவதை இயற்கையாக தவிர்ப்பது எப்படி| How To Avoid Pregnancy Naturally After Sex in Tamil

    Mylo Logo

    Start Exploring

    wavewave
    About Us
    Mylo_logo

    At Mylo, we help young parents raise happy and healthy families with our innovative new-age solutions:

    • Mylo Care: Effective and science-backed personal care and wellness solutions for a joyful you.
    • Mylo Baby: Science-backed, gentle and effective personal care & hygiene range for your little one.
    • Mylo Community: Trusted and empathetic community of 10mn+ parents and experts.